சில கவிதைகள்

வாழ்க்கையைப் போலவே
கவிதை

***

கவிதையில் தலைப்பெதற்கு -
நான்
அது கவிதையே இல்லை -
நீ

***

அந்தந்த நேரத்துப் பறவைகளை
அந்தந்த நேரத்திலேயே சிறைபிடிக்க வேண்டும்

***

பறத்தலின் சந்தோஷம்
பிரதியெடுப்பதில் இல்லை

***

நான் நாய் பூனை எதையும் தொடுவதில்லை
அவைகளும் அப்படித்தான்

(நடு கல் 1994 ஜனவரியில் வெளியானது)

2 comments:

TBCD said...

நிஜமாவே வேற ஒரு பதிவர் தானா..நான் கூட வேற யாரோவோட இன்னொரு முகமின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, tbcd. யார் அந்தப் பதிவர்.?