வாழ்தல்

பயமுறுத்தியபடி நின்றிருக்கிறது
கேள்விக் குறியான எதிர்காலம்
கழுவி விடப்பட்ட தரையைப் போல்
கிடக்கிறது மனம் சலனமற்று
வேலை செய்ய மறுக்கிறது மூளை
உதறுகின்றன கால்கள்
எதிரிகளின் கெக்கலிப்பு
ஒலிக்கிறது காதுகளில்
பெற்ற மற்றும் பெறப் போகும்
அவமானங்களை நினைத்து
தற்கொலைக்கும் வாழ்விற்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

சோடியம் வேப்பர் வெளிச்சம்
தொட முடியாத தூரம்
பௌர்ணமி நிலா ஒளி
தடவிக் கொடுக்க
ஆர்பரிக்கும் கடல் அலைகளின்
வெள்ளை நுரை
படுதா விரிப்பு
பார்வைக்கெட்டிய வரையில்

2 comments:

ஜமாலன் said...

//கழுவி விடப்பட்ட தரையைப் போல்
கிடக்கிறது மனம் சலனமற்று//

நுட்பமான வரிகள்.

தற்கொலைக்கும் வாழ்விற்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

இன்றைய வன்மறை உலகில் இதனை இப்படி வாசிக்கிறது மனசு.

"தற்கொலைக்கும் கொலைக்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்".

இரண்டாவதுது பகுதி தற்கொலைக்கு முந்தைய கணங்களா?

பாராட்டுக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

/இரண்டாவதுது பகுதி தற்கொலைக்கு முந்தைய கணங்களா?/

ஆம்.