இரு கவிதைகள்

கூட வரும்
நண்பன்
வேறொருவனைப் பார்த்துப்
பேசிக் கொண்டிருப்பான்
வேறொருவன் ஏதோ சொல்வான்
நண்பன் சிரிப்பான்
நீளும் பேச்சு
இவன் பார்த்துக் கொண்டிருக்க
எதிரே ஓடும் விளக்கொளி

***

தூங்கி எழுந்து
வரிகளுக்கு யோசிக்கையில்
தப்பிப் போகும் பறவை
பறவையைப் பிடிக்கும் வார்த்தை
நழுவிப் போகும்
தூங்கிப் போனால் நல்லது

2 comments:

anujanya said...

நல்லா இருக்கு முதல் கவிதை. பல சித்திரங்களைத் தீட்டலாம் அதனை வைத்து. இரண்டாம் கவிதை அந்த வார்த்தையைப்போல பிடிபடாமல் நழுவுகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனுஜன்யா.