காமக் கதைகள் 45 (17)

மக்களே உண்மை உரைப்பேன், கேளுங்கள்.

1. நம்முடைய பண்பாடு கலாச்சாரம் மேன்மையானது. அவை நம்மிரு கண்களைப் போன்றது. அதைக் கட்டிக் காப்போம்.

2. பிரம்மச்சரியமே உயர்ந்தது. சன்னியாச வாழ்க்கையே ஆண்டவனுக்கு நெருக்கமானது.

3. அது முடியாவிடில், திருமணம் செய்துகொள்வீர். பெற்றோரின் மனம்கோணாமல் அவர்கள் நிச்சயிக்கும் வரனையே மணமுடிப்பீர்களாக.

4. கணவன் மனைவி இருவரும் வஞ்சித்துக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள். உங்கள் இருவருக்குள் சிறு சந்தேகமும் வராமல் நடந்துகொள்வீர்.

5. முறையற்ற உறவைத் தவிர்ப்பீர். உங்களுக்குச் சொர்க்கம் சாசுவதமாகும்.

5.அ. மனைவியின் உடல் அவளுக்குச் சொந்தமானதல்ல. கணவனின் அதிகாரதிற்குட்பட்டதே அது.

5.ஆ. கணவன் வேறுமகளிருடன் உறவுவைத்திருந்து, அது தெரியவந்தாலும், மனைவி பொறுத்துக் கொண்டு அவனுடன் வாழ்ந்து பணிவிடை செய்தால் அவளுக்குச் சுமங்கலி யோகம் நிச்சயமுண்டாகும்.

6. குடும்பம் / திருமண உறவுகள் புனிதமானவை. அதைக் காப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்களாக.

7. கணவன் மனைவி இருவரும் நோன்புகள் பல இருந்து தங்கள் உடல் இச்சைகளைக் குறைத்துக் கொள்ளட்டும். ஆட்டம் பாட்டம் போன்ற கேளிக்கைகளை தவிர்ப்பீர்.

8. திருமணமாகும்வரை பொறுத்திருப்பீர். குறைந்தபட்சம் திருமணமாகும்வரை ஆண் பெண் இருவரும் தொடாமலிருப்பதே நல்லது.

9. விதவைகள் உண்ணா நோன்பு போன்ற கடுமையான விரதங்கள் இருந்து தங்கள் இச்சைகளை அடக்கிக் கொள்வார்களாக. அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, முருங்கை, மாமிசம் போன்றவற்றைத் தவிர்ப்பார்களாக.

இவ்வளவையும் கேட்டதும் அதீதன் தன் இடக்கை நடுவிரலை உயர்த்திக் காட்டினான்.

இனி, கேள்வி பதில் பகுதி :

1. காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக
2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது
3. அதீதன் கதாபாத்திரம் குறித்து சிறுகுறிப்பு வரைக
4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன
5. உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ?

17 comments:

மணிவண்ணன் said...

//2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது//

வர்ஷா ட்ரெஸ் போடாததினால். ஐ மீன்..வர்ஷா நல்ல ட்ரெஸ் போடாததினால்.


//4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன//

கட்டாயம் தர வேண்டும். முக்கியமாக பிராக்டிகல்ஸ்!

Athisha said...

;-))))))
\\
5. முறையற்ற உறவைத் தவிர்ப்பீர். உங்களுக்குச் சொர்க்கம் சாசுவதமாகும். \\

மினிமம் எய்ஸ் வராதில்ல

பதில்கள் ;

1.கவிதை போர்ப்ளே - கதை உச்சம்
2._________pass
3.அதீதன் அதீத அதீ அ தீஅ ததீஅ ன்தீத
4.பள்ளியறை பாடத்தை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டாமா
5.கல்யாணம் ஆகாதவர்கள் தன்னிலையில் செய்வது நல்லது , (ஏன்லாம் கேக்க கூடாது )

Athisha said...

\\
அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, முருங்கை, மாமிசம் போன்றவற்றைத் தவிர்ப்பார்களாக.
\\

மறந்துட்டேன் இதெல்லாம் சாப்டா இன்னா ஆவும்

லக்கிலுக் said...

//1. காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக//

'க'வுக்கும் 'தை'க்கும் இடையில் இருக்கும் 'வி' தான் வித்தியாசம்.

//2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது//

வர்ஷா ஒரு இந்துமாபெருங்கடல். அதீதன் மாதிரியான கட்டுமரங்கள் பெருங்கடலில் சவாரி செய்ய முடியாது.

//3. அதீதன் கதாபாத்திரம் குறித்து சிறுகுறிப்பு வரைக//

கொஞ்சம் குள்ளம், நல்ல சிகப்பு, முன்னந்தலை வழுக்கை, எப்போதும் சிரித்த முகம் - குறிப்பாக கண்காளாலும் அவனால் சிரிக்க முடியும்.

//4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன//

நான் பத்தாவது படிக்கும் போது ஒரு ஏடாகூடமான பாடம் அறிவியல் புத்தகத்தில் இருந்தது. குண்டு லஷ்மி டீச்சர் வெட்கப்பட்டுக் கொண்டு அந்த பாடத்தை நடத்தவேயில்லை. நாங்கள் அதிகமாக விழுந்து விழுந்து படித்தது அந்த ஒரே பாடத்தை தான்.

//5. உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ?//

எந்த நிலையிலும் உடலுறவு கொள்வது ஏற்றது தான்.

வளர்மதி said...

//காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக//

அதுசரி ... இது என்ன சில்மிஷம் ... என்னை வம்பில் இழுத்து விடவா? :)

கோவி.கண்ணன் said...

//1. காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக//

பிட்டு படத்துக்கும், முழு'நீல' வீடியோவிற்கும் உள்ள வேறுபாடுதான் !

விடை சரியா ?

அதீதன் பற்றிய லக்கிலுக்கின் குறிப்புகள் சரிதானே ? :)

//4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா //

போதிக்கலாம், சில்மிஷ வாத்தியார்கள் கலவி பற்றி செய்முறை பாடம் நடத்திவிடக் கூடாது

//2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது//

முன்பு போல் இல்லாமல் அதீதனுக்கு வயது ஆனதும் ஒரு காரணமாக இருக்குமா ? அல்லது அது ஒரே காரணம் தானா ?

//5. உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ?//

அவரவர் மனநிலையையும் பொறுத்தே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிவண்ணன். உங்கள் கோரிக்கை ஏற்கப்படும் :)

நன்றி, அதிஷா. அதெல்லாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது, அதான் :)

நன்றி, லக்கிலுக். நீங்க அதீதனைப் பத்திக் கேட்டா, உங்களைப் பத்தி சொல்றீங்களே :)

நன்றி, வளர்மதி.

நன்றி, கோவி கண்ணன். அதீதனுக்கு இன்னும் சின்ன வயசுதான் :)

narsim said...

காமக்கதை : சென்னை வெயிலின் பகல்பொழுது ஹேட்டல் சாப்பாடு(என்னா கசகசப்பு னு *****(சாப்பிட்டு)பாத்தாதான் தெறியும்!

காமக் கவிதை : நிலவொளி ரம்!!

narsim said...

காமக்கதை : ஓங்கி வளர்ந்த மரம்

காமக் கவிதை : விதை.

manikandan said...

*****அதீதன் கதாபாத்திரம் குறித்து சிறுகுறிப்பு வரைக*****

8 இன்ச்.

*****உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ******

கொஞ்சம் சாய்மானமா இருக்கற நிலை கதவு தான் வசதி.

MSK / Saravana said...

அதீதன் கதை (பாடம்) முடிஞ்சிபோச்சா???

இனிமேல் கேள்வி, பதில், பரிட்சைகளா??????????

Sridhar V said...

பாருங்க, மறுபடியும் '9' கட்டளைகளோட நிறுத்திட்டிங்க. :-)

//பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன//

முதலில் செக்ஸ் கல்வின்னா என்ன?

சர்தார்ஜி ஜோக்தான் ஞாபகம் வருது. விண்ணப்ப படிவத்தில் Sex என்ற கேள்வியைப் படித்துவிட்டு 'வாரம் இருமுறை' என்று பதில் எழுதினாராம். :-)

கயல்விழி said...

முதலில் இதை படித்து அதிர்ச்சியாகிவிட்டேன், முடிவை படிக்கும் வரையில் :)

//4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன//
நிச்சயமாக தரவேண்டும். தரமில்லாத புத்தகங்களையும், படங்களையும் பார்த்து நிறைய பேர், பெண்களை சக மனிதராக பார்க்காமல் ஒரு பொருள் போல பார்க்கத்துவங்குகிறார்கள். பாலியல் வன்முறை பெருகுகிறது. எப்படியும் தெரிந்துக்கொள்ளத்தான் போகிறார்கள், அதை முறையாக படித்தவர்களான ஆசிரியர்களே தெரிவித்தால் என்ன?

மற்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

anujanya said...

சுந்தர்,

இந்த 9 அறிவுரைகள் ஏதாவது நமது இந்து மத திருமண மந்திரங்களில் வருகிறதா அல்லது காமசூத்திரத்திலா?

வினாக்களுக்கு விடைகள்:

1. இலக்கியம்-போர்னோ. (அதிஷாவுடனும், நர்சிம்முடனும் ஒத்துப்போகிறேன்).

2. உடை பெயருகேற்றாற்போல் நாகரிகமாயிலாததால்.

3. அதீதன் உருவத்தில் உங்களுக்கும் லக்கிக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றினாலும், கதாபாத்திரம் - இதைப் படிக்கும் எல்லாருக்குமுள்ள மைய்யப்புள்ளியில்

4. கூடாது. காரணங்கள் a) யாம் பெறாத இன்பங்கள் பெறக்கூடாது இவ்வையகம். b) அதில் உள்ள ஒரு மர்மமும் அதனால் அது பற்றிய கதைகள்/கவிதைகள் பெறும் இலக்கிய அந்தஸ்தும் போய்விடும் அபாயம்.

5. யாருடன் என்பதைப் பொறுத்து அமையலாம். Horses for the courses.

பல்வேறு தளங்களில் போகிறது; வாழ்த்துக்கள் சுந்தர்.

அனுஜன்யா
(அய்யனார் வந்தாச்சு. நீங்கள்?)

Anonymous said...

doggy style is good, girl on top is better.

Sex starved nation-le okkaandhikittu ennenna kelvi kekkuraanyaa indhaalu! veruppai kelappikittu! LMAO

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நரசிம்.

நன்றி, அவனும் அவளும். நீங்கள் கொடுத்திருப்பது ‘சிறு'குறிப்பல்ல :)

நன்றி, சரவணகுமார்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். இதையே அரபிக்காரர்கள் ஜோக்காகவும் சொல்வார்கள். weekly twice என்றதும், no, no; male or female எனக் கேட்டதற்கு அந்த அரபிக்காரர் anything, sometimes even camel என்றாராம் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கயல்விழி, அனுஜன்யா & அனானி... நன்றி.