காமக் கதைகள் 45 (24)

வெற்றிக்குப் பார்த்திருந்த பெண்ணுடன் அதீதனுக்கு தொடர்பிருந்தது, அந்தப் பெண் பெயர் முக்கியமில்லை, அவள் வேறொருவனைக் காதலிப்பது தெரிந்தும் வெற்றி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான், அதில் அவளுக்கு வெற்றிமேல் தீராத கோபம், அதீதன் தான் அந்தக் காதலன் என்பது வெற்றிக்குத் தெரியாது,

அலுவலகத்தில் உடன்வேலை செய்தவனுக்கு பயிற்சிக்கென மலேஷியா செல்ல வேண்டியிருந்தது. அதீதனும் ஒட்டிக் கொண்டான். அங்கு சீன மற்றும் தாய்லாந்து அழகிகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். ஹோட்டல் 27வது மாடி நீச்சல் குளத்தைச் சுற்றி பொன்நிற மங்கைகள் தொடை தெரியும் மிடியுடன் அசைந்தசைந்து நடந்து கொண்டிருந்தனர். அதீதனுக்கு மேலே விழுந்து புரள வேண்டும் போலிருந்தது.

திருமணமானபின்னும் அதீதனால் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவருவதை நிறுத்தவில்லை, மனதும் உறுத்திக் கொண்டேயிருந்தது, வெற்றி ஊரிலில்லாத போதெல்லாம் தகவல் அனுப்புவாள், வீட்டிற்குச் சென்றதும் அவள் முத்தமிடும்போது அவனுக்கு வெற்றியின் முகம் நினைவில் ஆடியது,

மலேஷிய ஹோட்டல் ஸ்பெஷல் மசாஜில் இரண்டு வகையுண்டு:

(1) நீங்கள் குப்புற இரண்டு கால்களையும் இணைத்தபடி படுத்திருக்க மசாஜ் செய்யும் பெண் உங்கள் கழுத்திலிருந்து கால்கள் வரை பிடித்துவிடுவது. இதில் முக்கியமானது அந்தப் பெண் நிர்வாணமாயிருப்பாள் என்பதும் தன்னுடைய பின்புறத்தால் மசாஜைச் செய்வாள் என்பதும். உங்கள் பிருஷ்ட பாகத்தில் அவளுடைய பிருஷ்ட பாகம் தொட்டு, பிறகு பிரிவது தனிசுகம்! பூப்பந்து கொண்டு அழுத்தித் தடவுவது போல இருக்கும் என்பது அதீதனின் வார்த்தைகள்.

(2) உங்கள் முதுகில் தலையணையை வைத்து அதன்மேல் அவள் சாய்ந்து உங்களை இறுக்கி அணைத்து மசாஜ் செய்வது. நெட்டி முறியும் சத்தங்கள் கேட்கவே போதையாயிருக்கும். தலையணை இல்லாமல் செய்யக்கூடாதா என ஏங்கவைக்குமிது.

நண்பனை நச்சரிக்கத் துவங்கினான் ஸ்பெஷல் மசாஜிற்கு.

வெற்றியைப் பழிவாங்கவே அதீதனுடன் அவள் உறவுவைத்திருப்பதாய்ச் சமாதானம் செய்வாள், உனக்கு அதில் உடன்பாடில்லை என்றால் வேண்டாம், நான் வேணுமா வேணாமா, கையில்லா நைட்டியைப் பார்த்தபடி மென்று முழுங்குவான்,

இரண்டு மசாஜையும் செய்துகொள்ளும்போது அவனது மனம் அவளுடனான சம்போகத்திலேயே கழிந்தது. சின்னச் சின்ன அங்கங்களுடன் தாய்லாந்துக்காரி பொம்மை போல் இருந்தாள். அவளிடம் எப்படியாவது கேட்டுவிடவேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தான்.

இலவச சுகத்தை விடவும் முடியவில்லை, நண்பனுக்குத் துரோகம் செய்வதாய்த் திட்டும் மனதையும் ஒன்றும் செய்யமுடியவில்லை,

மசாஜ் முடித்துவிட்டு தயங்கியபடி தாய்லாந்துக்காரி போய்விட்டாள்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களது உறவு,

16 comments:

narsim said...

வெளிநாட்டு காட்சிகள் கண்முன் நிற்கின்றன குருவே.. தொடருங்கள்

நர்சிம்

மணிகண்டன் said...

மசாஜின் பொழுது அவள் நினைவும், அவளோடு கலவும் போது வெற்றி நினைவும் வரும் அதீதனுக்கு வாழ்க்கையில் உள்ள நிகழ்வுகளை இருமையில் பார்க்க சொல்லி தர வேண்டும் !

RAGUNATHAN said...

ஐயோ கதை சூப்பரு...ஆனா இவ்வளோ எழுதிட்டு பிருஷ்டம் என்று ஏன் எழுதணும்...அந்த வார்த்தைய எழுதலாமே....உலகத் தமிழர்கள் எல்லாம் ஒன்னு போல முடிவு எடுத்துட்டாங்க போல அந்த வார்த்த கெட்ட வார்த்தைனு. சின்ன கதை ஆனா பெரிய மேட்டர். -;)

வெண்பூ said...

ம்ம்ம்... அந்த மசாஜ் பத்தி டீடெய்ல்டா எக்ஸ்பெலிய்ன் பண்றத பாத்தா, நல்ல அனுபவம் இருக்கும் போல இருக்கு.. நான் அதீதனுக்கு சொன்னேன்.. :)))

வால்பையன் said...

ஹீ ஹீ,
ஒரு ஹெல்பு
மலேசியா அட்ரஸ் கிடைக்குமா

anujanya said...

ஹ்ம்ம். சமீபத்தில் (உண்மையிலேயே சமீபத்தில் - போன வாரம்) ஹாங்காங் சென்றேன். அப்படியே மலேசியா வழியே திரும்பிவர அனுமதி மறுக்கப்பட்டது. இப்போதுதான் புரிகிறது ஏனென்று.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நர்சிம்.

நன்றி, மணிகண்டன். சொல்லிக் கொடுத்துடுவோம் :)

நன்றி, ரகுநாதன்.

நன்றி, வெண்பூ.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வால்பையன்.

நன்றி, அனுஜன்யா.

Anonymous said...

Massage parlours in Malaysia? Darn, you should've written this article two years ago!

By the way, where's vetri's wife put up? Kualalumpur? I usually have a stopover for 4, 5 hours in KL on my way Australia every year! ;-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, நன்றி.

இதில் இரண்டு கதைகள் இருக்கின்றன.

Anonymous said...

andha kadhaiye vidunga, adheedhan paya edhaavadhu pannittu dhaan iruppaan!

namakku massage centre dhaane mukkiyam?

தமிழன்-கறுப்பி... said...

அட...

தமிழன்-கறுப்பி... said...

தாய்லாந்துக்காரி போய்விட்டாள் என்பதோடு முடித்திருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

இரண்டு விசயங்களையும் சேர்த்திருந்தது எதுக்காக...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி & தமிழன் (கறுப்பி), நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

அட பாவமே...