மழையும் வாசலில் மனிதர்களும்

ஒவ்வொரு மழைதினமும்
முக்கியமான தினமெனக்கு
வாசலில் நிறைய பேர்
ஒதுங்கியிருப்பார்கள் மழை கருதி
நானும் உள்ளே இருப்பேன்
கூட்டம் பலவும் பேசும்
அரசியல், சினிமா -
சிலர் இலக்கியம் கூடப் பேசலாம்
வாசலில் மனிதர்கள்
நிற்பது சுகம்தானே

(கவிதா சரண் செப்டம்பர் 1992ல் வெளியானது)

11 comments:

அத்திரி said...

இன்னைக்குத்தான் உங்க கவிதை நல்லா புரிஞ்சிருக்கு

முரளிகண்ணன் said...

படிக்கும் போது மழை சாரல் அடித்தது போல ஒரு உணர்வு

ச.முத்துவேல் said...

சுகமான அனுபனம்தான்.

வால்பையன் said...

நான் வாசலில் நின்று புகைபிடிப்பேன்

அக்னி பார்வை said...

சுகம்

ரமேஷ் வைத்யா said...

கருப்பொருளுக்குரிய கச்சிதமான குரல். பாராட்டுக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அத்திரி, முரளிகண்ணன், முத்துவேல், வால்பையன், அக்னி பார்வை, ரமேஷ் வைத்யா... நன்றி.

பரிசல்காரன் said...

ஒவ்வொருமுறையும் பிரமிக்க வைக்கிறீர்கள்.. உங்களைப் போல கவிதை முயன்றபின்தான் உங்களுக்கு பின்னூட்டம் என்ற என் எண்ணத்தை முறியடித்து... நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன் உங்களை.

க்ரேட்! கவிதையின் போது காட்சியை கண் முன் கொண்டுவந்தமைக்கு!

Anonymous said...

நல்லா இருக்கு சுந்தர்.

//கவிதையின் போது காட்சியை கண் முன் கொண்டுவந்தமைக்கு//

பரிசல் அதுதானே கவிதையின் நோக்கம்.

MSK / Saravana said...

சுகமான அனுபவம்.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பரிசல்காரன், வடகரை வேலன், சரவண குமார்... நன்றி.