காதலும் போதையும்

என்ன செய்வது தெரியவில்லை
என்றேன்
என்ன செய்வது தெரியவில்லை
என்றாள்
ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
இதமாகத்தான் இருக்கிறது
இதுவும்
(இந்துமதிக்கு)

(மவ்னம் 7 - செப்டம்பர் 1994ல் வெளியானது)

வாங்க வாங்க
கடன் தான்
குடிக்கக் குடிக்க
போதை தான்

(நடு கல் 13 - ஜனவரி 1994ல் வெளியானது)

11 comments:

உண்மைத்தமிழன் said...

நன்று..

[எனக்கு மட்டும் ஏன் இது மாதிரி கவிதைகள் வந்து தொலைய மாட்டேங்குது.. எதுக்கு இப்படி பக்கம், பக்கமா மாங்கு, மாங்குன்னு கழுதை மாதிரி டைப் பண்ணணும்..? முருகா நீ செய்த சதியோ..?]

TamilBloggersUnit said...

welcome to you!

வால்பையன் said...

//ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
இதமாகத்தான் இருக்கிறது//

நம்பமுடியவில்லை
ம்பமுடியவில்லை
பமுடியவில்லை
முடியவில்லை
டியவில்லை
யவில்லை
வில்லை
ல்லை
லை
.

வால்பையன் said...

//வாங்க வாங்க
கடன் தான்
குடிக்கக் குடிக்க
போதை தான்//


வாங்க வாங்க
போதை தான்!
குடிக்க குடிக்க
கடன் தான்!

இது என் அனுபவம்!!

மந்திரன் said...

காதலிக்கும் போதும் , குடிக்கும் போதும் limit தெரிவதில்லை ..
வாந்தி வந்த பின்னர் தான் தெரியும் நாம limit-ஐ மீறிவிட்டோம் என்று.
சொல்றது புரியுதா ?

அத்திரி said...

//குடிக்கக் குடிக்க
போதை தான்/


சரிதான்.

ஆனா அளவுக்கு மிஞ்சினா
வாந்தி
வாந்திதான்

தமிழன்-கறுப்பி... said...

!
முதல் கவிதை நெடுநாட்களாய் என் மனதிற்குள் இருப்பது... ஆனால் இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்ல தெரியாமல் சொற்களை புதைய விட்டிருந்தேன்..

தமிழன்-கறுப்பி... said...

இரண்டாவது நறுக்கென்றிருக்கிறது...


கவிதை சுடும் அல்லது
உண்மை சுடும்!

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உண்மைத் தமிழன், TamilBloggers Unit, வால்பையன், தமிழ் சினிமா, மந்திரன், அத்திரி & தமிழன் - கறுப்பி... நன்றி.

Unknown said...

எனக்கு காதலை அதிகம் தெரியாது,ஆனால் பொதை பற்றி தெரியும்---ரம்ஜி குரு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ராம்ஜி குரு.