மக்கள் கலை இலக்கிய விழா

மணல்வீடு சிற்றிதழும் களரி தெருக்கூத்து பயிற்சிப் பட்டறையும் இணைந்து மக்கள் கலை இலக்கிய விழா நடத்துகிறார்கள்.

நாள் : 24.01.2009

நேரம் : மதியம் 2.30 மணி முதல் நான்கு அமர்வுகளாக

இடம் : ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் தாலுகா, சேலம் மாவட்டம் 636 453

பஸ் ரூட் : சேலம் டூ மேட்டூர்

பஸ் நிறுத்தம் : பொட்டனேரி

தொடர்புக்கு : ஹரிகிருஷ்ணன், 98946 05371

மணல்வீடு அறிவித்திருந்த நாவல், சிறுகதை மற்றும் கவிதைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. பல மூத்த மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தோல்பாவை, தெருக்கூத்து, பொம்மல்லாட்டக் கலைஞர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கின்றன.

மாலை 7 மணி அமர்வில் வாலி மோட்சம் என்ற தோல் பொம்மலாட்டமும் இரவு 10 மணி அமர்வில் லங்காதகனம் தெரிக்கூத்தும் நடத்தப்பட இருக்கிறது. இவ்விரு அமர்வுகளுக்கு மட்டும் பார்வையாளர் நன்கொடை ரூ 50.

இயன்றவர்கள் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விழாவுக்கான நன்கொடை வழங்க விரும்புவோர் கீழ்கண்ட வங்கி எண்ணில் பணம் செலுத்தலாம் :

V SHANMUGAPRIYAN
A/c No. 611901517766
ICICI Bank, Shevapet Branch, Salem

முழு அழைப்பிதழ் வேண்டுவோர் பின்னூட்டதில் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தாலோ அல்லது jyovramsundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தாலோ அனுப்பி வைக்கிறேன்.

9 comments:

Dr.Rudhran said...

is this a part of ma.ka.ie.ka?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

டாக்டர், இல்லை.

Anonymous said...

இப்படி எதாவது செஞ்சுகிட்டே இருங்க..!http://bodhivanam.blogspot.com/

வால்பையன் said...

ஈரோட்டுக்கு பக்கத்துல தான் போலிருக்கு போயிர வேண்டியது தான்

narsim said...

நல்ல விசயம் சுந்தர்..

ச.முத்துவேல் said...

உள்ளபடியே நல்ல , பாராட்டுக்குகந்த செயல்.உங்களின் பரிந்துரைகளும், அவர்களின் செயல்பாடுகளும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

போதிவனம், வால்பையன், நர்சிம் & முத்துவேல்... நன்றி.

KARTHIK said...

உள்ளேன் அய்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கார்த்திக். உங்க ஊர் பக்கத்துலதான். போய் வாங்க :)