காமக் கதைகள் 45 (26)

இந்தப் பெண்கள் எவ்வளவு சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்!' என்று புலம்ப ஆரம்பித்தான் அதீதன். அதுவும் உன்னை மாதிரி ஆளுங்களை நம்பவே கூடாதென்றான். எனக்கு திடுக்கென்றது என்னைப் பெண்ணாகப் பார்க்கிறானே என்று. இல்லையாம், அவன் சொல்ல வந்தது என்னைப் போன்ற ஊமைப் போல இருக்கும் பெண்களை. சரி, போய்த் தொலையட்டும் என விட்டுவிட்டேன். ஒருமுறை குடிபோதையில் என்னை ஒம்போது என்றுகூடத் திட்டியிருக்கிறான்.

மகேஷ் பிரபல நிறுவனமொன்றில் பெரிய பதவியில் இருப்பவன். அரட்டைப் பெட்டியில் ஒருநாள் மாதங்கி வந்து மகேஷின் மின்னஞ்சல் முகவரி கேட்டிருக்கிறாள். இவனும் எதார்த்தமாகக் கொடுத்திருக்கிறான். அன்று வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் மகேஷிடம் அடுத்த வாரம்தான் பேசமுடிந்திருக்கிறது. பேச்சு வாக்கில் மாதங்கியிடமிருந்து மெயில் வந்ததா எனக் கேட்டிருக்கிறான். மகேஷ் சொன்ன பதில் அவனைத் தூக்கி வாரிப் போட்டது. 'ம்ம், நேர்லகூட ரெண்டு வாட்டி மீட் பண்ணிட்டோமே...' அடிப்பாவி. தான் பழகிய இந்த ஆறுமாத காலத்தில் ஒரே முறைதான் சந்தித்திருக்கிறாள், ஆனால் மகேஷுடன் அதற்குள் இரண்டு முறையா... ம்ம், நடக்கட்டும்.. இந்தப் பயல் மகேஷ் அவள் பின்னாடியே சென்றிருப்பான், அதனால்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான். அடுத்த குண்டைப் போட்டான் மகேஷ். ‘நேத்து ஃபோன் பண்ணி உங்க வீட்டுப் பக்கம்தான் இருக்கேன், வரட்டுமா என்றாள்.. சரி என்று வரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தேன்' என்றான்.

நல்லா வேணும் அதீதனுக்கு.

திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆனதால் போரடித்தது எனக்கு. நைஸாக ஏதாவது சின்ன வீடு செட்டப் செய்யலாமா என்றுகூடத் தோன்றியது. ஒருமுறை அதீதனிடம் அவனது பெண் நண்பர்கள் யாரையாவது எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கச் சொன்னேன். ‘உனக்காவது பெண்டாட்டி இருக்கா.. நானே கையில பிடிச்சுகிட்டு அலையறது எனக்குத்தான் தெரியும்' என்றுவிட்டான்.

நானே பிறகு ஒரு பெண்ணை கஷ்டப்பட்டு தேற்றினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் என் ராசி, அவளும் கொஞ்ச நாட்களிலேயே போரடித்துவிட்டாள்.

இதற்கு நடுவில் நானும் அவளும் ஒரு கதையில் ஹோட்டலில் ரூம் போட்டது என் மனைவிக்குத் தெரிந்து ஒரே ரகளை. எல்லாமே கதைதான் என்பதை நிரூபிக்க அவள் எனக்கு எழுதியிருந்த கற்பனைக் கடிதத்தை என் மனைவியின் கனவில் வாசித்துக் காட்டினேன். நானும் அதீதனும் நெருங்கிப் பழகுவதைப் பார்த்து சிலர் என்னை கே எனக்கூடச் சொல்வார்கள், நம்பாதே எனச் சொல்லியிருக்கிறேன் அவளிடம். 45வது கதையில் வரும் என் காதலியை முடிந்தால் அடித்து விரட்டிவிட்டு ஒப்புக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறாள்.

'இன்னும் ஒரு வாரம் அவங்க பழகினா நிச்சயம் மகேஷ் மேட்டர முடிச்சுடுவாண்டா' என்றான் அதீதன். உன் பிரச்சனை என்ன, நீ செய்யாததா அல்லது வேறொருவன் செய்வதா என்றேன். ‘பெரிய புடுங்கி மாதிரி பேசாதே..' எனச் சொல்லி ஃபோனை வைத்துவிட்டான்.

மாதங்கியைப் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான். ‘என்னா ஸ்ட்ரக்சர்.. எப்படியாவது அவளை முடிச்சுடணும்' என்பான். ஆனால் நான் அப்படியெல்லாம் பேசுவதில்லை. எழுத்தாளனுக்கென்று ஒரு சமூகப் பிரக்ஞை இருக்கிறதல்லவா. பொலிட்டிக்கலி கரெக்டாக வேறு இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

'இந்த எழுத்தாள புண்டா மவனுங்கள நிக்க வச்சு ஒதைக்கணும்' என்றான் ஒருநாள். அவனது கதைகளில் வந்த மதுமிதாவை அவனுக்குத் தெரியாமல் ஆட்டையைப் போட்டுவிட்டேன், அந்தக் கோபம்தான். ஆனாலும் பாருங்கள்.. ஒரே முறைதான் அவளுடன் உடலுறவு கொண்டேன். சாதாரணமாக ஒழுங்காக வேலை செய்யும் என் சாமான் அன்று பார்த்து மக்கர் செய்துவிட்டது. அதற்குப் பிறகு அவள் என்னைச் சந்திக்கவேயில்லை (இதையே திலீப்குமாரின் ஒரு சிறுகதையைப் போல விலாவரியாக எழுதினால் இலக்கியம் என்பார்கள், இப்படி எழுதினால் ஆபாசமென்பார்கள்.. ம்ஹூம், என்ன செய்ய..).

சரி, இந்தக் கதையை இலக்கியமாக்கி விடுவோம்.. வட்டச் சுழலில் பாதியில் நிற்பதுபோல் இருக்கிறது என்றான் கேலிங்கன்.

16 comments:

யாத்ரா said...

மிகச்சமீபமாகத்தான் எனக்கு வலையுலகு பரிச்சயம், இதழ்களில் தங்கள் கவிதைகள் வாசித்திருக்கிறேன், ஒரு நாள் ஒரே நாளில் இந்தக் கதைகள் மற்றும் தங்கள் கவிதைகளை வாசித்தேன்,

வெகு நாட்களுக்குப் பிறகு இந்தக் கதைகள். ஒருவேளை இம்முயற்சியை கைவிட்டுவிட்டீர்களோ எனக் கூட நினைத்தேன்.

anujanya said...

ஒவ்வொரு சீசனுக்கும் ஐ.பி.எல். போல இதுவுமா? சிறிது நாட்களுக்கு உங்கள் 'குரு' பதவி kept under suspended animation. Suspended animation வைத்தும் இன்னொரு கா.கதை வந்துவிடும் :)

கொஞ்ச நாட்கள் வனவாசம் சென்று, உங்களை கூகிள் ரீடரில் மட்டும் படித்துத் தப்பி ஓடி விடுகிறேன். நானும் எழுத்தாளன். அரசியல் சரிநிலை நிர்ப்பந்தங்கள் எனக்கும் உண்டு சுவாமி :))

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளைக்கப்புறம் படிக்கிறதுல ஏதோ பெரிய மாற்றம் மாதிரி தெரிந்தாலும், 26 வது கதைக்குரிய கட்டம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்...

வால்பையன் said...

எனக்கு ஒரு சந்தேகம் என்னை மாதிரி சின்ன பசங்க இந்த கதையை படிக்கிறதால கெட்டு போயிருவாங்களா?

என்னோட பத்து காதலிகளும் இல்லைவே இல்லைன்னு சொல்றாங்களே!

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

Ayyanar Viswanath said...

மின்னஞ்சல் வங்கி ஆட்டய போடுவது பெரிய வன்முற சுந்தர் இனிமே பண்ணாதீங்க :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாத்ரா, அனுஜன்யா, தமிழன் - கறுப்பி, வால்பையன், விக்னேஷ்வரன், அய்யனார்... நன்றி.

அது சரி(18185106603874041862) said...

//
சரி, இந்தக் கதையை இலக்கியமாக்கி விடுவோம்.. வட்டச் சுழலில் பாதியில் நிற்பதுபோல் இருக்கிறது என்றான் கேலிங்கன்
//

சுந்தர் அண்ணன் ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டாருங்கோ! :0))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அது சரி.

மணிகண்டன் said...

அதீதனுக்கு நல்வரவு. அடிக்கடி வாங்க இனிமே !

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிகண்டன்.

Joe said...

என்ன தலைவரே, இதிலும் சில எழுத்துப்பிழைகள்.

அனால் என் ராசி,
வாசித்துக் காட்டேன்.

Joe said...

It's one of those stories that makes me wonder if you are Charu's alter ego!

Or perhaps you write these stories, after drinking wine/whisky more than any man is supposed to drink, like Charles Bukowski!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜோ. பிழைகளைத் திருத்தி விட்டேன்.

Sugumar (சுகுமார்) said...

என்ன கருமம் இதுன்னு தோணினாலும், படிப்பதை நிறுத்த முடியவில்லையே?

நன்றய்த்தான் இருக்கிறதோ!?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுகுமார்.