காமக் கதைகள் 45 (30)


ஹலோ மை டியர் ராங் நம்பர்

அலைபேசி மணி அடித்தது. தெரியாத எண். தெரிந்தது தெரியாதது என்றெல்லாம் பார்ப்பதில்லை அதீதன். எடுத்தான். ‘ஹலோ'. உடனே
எதிர்புறமிருந்து : ‘ஹலோ, செல்லதுரையா...' ஆஹா, பெண்குரல்!

அதீதன் : இல்லீங்க, நான் அதீதன் பேசறேன்
பெண் : அதென்னங்க பேர், அதீதன்னு
அதீதன் : இல்லீங்க, அதுதான் என் பேரு
பெண் : அதுதாங்க, அது என்ன அதீதன்னு

இப்போது அதீதனுக்குச் சந்தேகம் வந்தது. யாராவது தெரிந்தவர்கள் விளையாடுகிறார்களோ என்று...

அதீதன் : நானே வச்சுகிட்ட பேர்தாங்க இது
பெண் : அதுதான், ஏன் வச்சுக்கிட்டீங்க?

(கீகீகீ என நடு நடுவில் அவள் சிரித்துக் கொண்டிருப்பதும் இவன் சத்தமெழுப்பாமல் இளித்துக் கொண்டிருப்பதும் கதைக்குத் தேவையில்லாததால் தவிர்க்கப்படுகிறது)

அதீதன் : அதுவாங்க.. எனக்கு எல்லாமே அதிகமா இருக்கும்ங்க
(சொல்லும்போது அவன் தன் பேண்ட் ஸிப்போடு சேர்த்து தன் குறியைத் தடவிக் கொள்கிறான்)
பெண் : எதுலங்க
அதீதன் : எல்லாத்துலயுங்க
பெண் : அத நாங்க இல்ல சொல்லணும்
அதீதன் : சொல்ல வாய் எழும்பாதுங்க உங்களுக்கு
பெண் : ஹலோ மிஸ்டர்...

லைன் துண்டிக்கப் படுகிறது. மறுபடி இவன் அழைக்கிறான் :

பெண் : சொல்லுங்க, இப்பத்தானே பேசுனோம்
அதீதன் : ஏன், வேலையா இருக்கீங்களா
பெண் : வேலையெல்லாம் ராத்திரிலதாங்க
அதீதன் : ஏன், பகல்ல செஞ்சா சரியா வராதா
(மறுபடியும் கீகீகீ, மறுபடியும் இளிப்பு இரண்டும் தவிர்க்கப்படுகிறது)

சில நாட்கள் கழித்து இவன் கூப்பிட்டான் :

அதீதன் : இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்க
பெண் : ஏன், கேக்கறீங்க
அதீதன் : பேசறப்ப அப்படியே நீ எப்படியிருப்பன்னு கற்பனை செஞ்சுக்கத்தான்
பெண் : ப்ளூ சுடி... நீங்க
அதீதன் : வெறும் லுங்கிதான்
பெண் : வெறும் லுங்கின்னா
அதீதன் : உலகத்துலயே ஃபிரீயான விஷயம் ஜட்டி போடாம லுங்கி போடறதுதான்
பெண் : வெறும் லுங்கியோட இருந்தா தொந்தரவா இருக்காது
அதீதன் : நேர்லதான் சொல்லணும்
(கீகீகீ, இளிப்பு தவிர்க்கப்படுகிறது)

மறுபடியும் சில நாட்கள். தினமும் அவள் பேசா அழைப்புகளாக விட, இவன் தான் கூப்பிடுவது.

அதீதன் :
பெண் :.

அடுத்து இன்னொருமுறை இவன் கூப்பிட :

பெண் :
அதீதன் :

பெண் : ஆஃபீஸ்ல வேலையில்லயாக்கும்
அதீதன் : வேலைக்காகத்தானே உன்கிட்ட பேசிகிட்டிருக்கேன்

கதை இப்படியே போய்க் கொண்டிருக்க, இதற்குமேல் விரிவாக எழுத விருப்பமில்லாததால், நடுவில் நான் நுழைய வேண்டியதாயிருக்கிறது. பொருத்தருள்க.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாயிருக்கும் பட்சத்தில், கதையில் பெண் என்று வரும் இடத்தில் நீங்கள் மோகிக்கும் பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்ளவும்; அதீதன் என்ற இடத்தில் உங்கள் பெயரையும்.

பெண் மற்றும் ஆண் பேசும் இடங்களில் இரண்டை வெற்றிடமாக விட்டிருக்கிறேன்; அதை நீங்கள் நிரப்ப வேண்டாம் - அதீதன் கதையை நான் எழுதுவது போல உங்கள் கதையை வேறொரு நண்பர் எழுதுவார்.

நீங்கள் பெண்ணாயிருக்கும் பட்சத்தில் .....

27 comments:

Unknown said...

ஆண்டவா அண்டவா...

இப்படில்லாம என்னை சோதிப்ப... :(

மணிகண்டன் said...

very nice sundar. You got to bring adheedhan often into your blog :)-

துபாய் ராஜா said...

"ஃப்ரீயா" உட்காந்து படிக்க வேண்டிய கதை. :)

Ashok D said...

கிளம்பின்ட்டாரைய்யா...
கிளப்பிட்டாரைய்யா...
:)

காமக்கதைகள் படித்து உங்கள் ரசிகன் ஆனவங்கோ...

charuonlinelalirundhu வந்தவங்கோ... (அப்ப நம்ம history உங்களுக்கு தெரியுங்கோ)

Pot"tea" kadai said...

வெரும் பாக்ஸர் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும்னு கற்பனை செய்து பார்க்கிறேன்.

;)

குப்பன்.யாஹூ said...

நல்ல எழுத்து நடை.

மனதில் எழும் காம உணர்ச்சியை கூட உங்கள் எழுத்து நடை மிஞ்சி விடுகிறது.

Sridhar V said...

ட்விட்டரில் நீங்க செல்ஃபோன் நம்பர பத்தி பேசுனதுக்கும் இந்த ராங் நம்பருக்கும் என்ன சம்பந்தம்? :)

லசரா வின் ஒரு ராங்நம்பர் கதை எப்பொழுதோ படித்தது. பெயர் மறந்துவிட்டது. மன்மதலீலை படத்தில் ஒரு ராங்நம்பரை கமல் ரைட் விடுவார்.

ஆனால் இந்த SMS / webcam காலத்தில் அதீதன் ரொம்பவும் ஓல்டு ஃபேஷன். 45-க்குள் அவன் முன்னேறிவிடுவான் என்று நம்புவோம்.

நந்தாகுமாரன் said...

செம கமேடி ... முடித்திருக்கும் விதம் படு ஸ்வாரஸ்யம்

குசும்பன் said...

//நீங்கள் ஆணாயிருக்கும் பட்சத்தில், கதையில் பெண் என்று வரும் இடத்தில் நீங்கள் மோகிக்கும் பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்ளவும்; அதீதன் என்ற இடத்தில் உங்கள் பெயரையும்.//

குருஜி இதை தானே பல ஆண்டு காலமாக சாட் ரூமில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். திரும்பவுமா???

குசும்பன் said...

அதீதன் தலையில் யோகானந்தர் கையை வெச்சு காம இச்சையை போக்க செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்:)))

45 கதைகள் முடிந்த பிறகு கையை வைக்கவும்:)))

குசும்பன் said...

//ஏப்ரல் 27, 2009// ல் 29வது கதை வந்திருக்கிறது 30வது கதை வர நான்கு மாதம்! மிகப்பெரிய இடைவெளி!

இந்த இடைவெளியினால் கதையின் எண்ணிக்கை கூடுமா?:)))

வால்பையன் said...

நான் போன்ல பேசும் போது ஒட்டு கேட்டிங்களா?

Mahesh said...

இந்தப் பின்னூட்டம் குசும்பன் போட்டது.... நான் பின்னூட்டம் போடுவதே இல்லை :))))))))))

குசும்பன் said...

//வால்பையன் said...
நான் போன்ல பேசும் போது ஒட்டு கேட்டிங்களா?
//

சென்னை 28ல் அவன் கண்ணாடிய பார்த்து கவிதை சொல்வது போல் நீங்க போனை பார்த்து இப்படி பேசுவீங்க என்று எங்கள் அனைவருக்கும் தெரியும்:)))

குசும்பன் said...

குருஜி இப்ப எல்லாம் போனில் அழகிரி, ஒபாமா, ஒசாமா கூட பேசுவதுதான் பேசன்:)

Sridhar V said...

//ஏப்ரல் 27, 2009// ல் 29வது கதை வந்திருக்கிறது 30வது கதை வர நான்கு மாதம்! மிகப்பெரிய இடைவெளி!//

அதீதன் கேரளா போய் யோகா சிகிச்சை பெற்று ‘புத்துணர்ச்சியோடு’ வந்ததா பேசிக்கிறாங்க. :))

தமிழன்-கறுப்பி... said...

ரிவிட்டர் குறிப்புத்தான் எனக்கு ஞாபகம் வருது...

:)

அது சரி(18185106603874041862) said...

ஏன்னு தெரியல...படிக்கும் போது அதீதன் ரோல்ல (நடிகர்) மணிவண்ணன் ஞாபகம் வந்துட்டாரு....எல்லா டயலாக்கும் அவர் பேசற மாதிரி...:0)))

கார்க்கிபவா said...

ம்ம்ம்

மண்குதிரை said...

rusiya irukku

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மஸ்தான், மணிகண்டன், துபாய் ராஜா, அஷோக், பொட்டீக்கடை, ராம்ஜி யாஹு, ஸ்ரீதர் நாராயணன், நந்தா, குசும்பன், வால்பையன், மகேஷ், தமிழன் - கறுப்பி, அது சரி, கார்க்கி, மண்குதிரை... நன்றி.

ARV Loshan said...

ஆகாகா.. அதீதன் பேசாம அட்ரெஸ் கேட்டு நேரையே போயிருக்கலாமோ என்று யோசிக்க வச்சுட்டீங்க. ;)

அதுசரி மணிவண்ணனை ஞாபகப் படுத்தி கதியையே காமெடி ஆக்கி விட்டிட்டாரு.. ;)

யாத்ரா said...

எவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதீதன்,,,,,?

நன்றாக இருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லோஷன் & யாத்ரா, நன்றி.

நர்சிம் said...

ரைட்டு.ட்டு.டு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நர்சிம்.

chandru / RVC said...

குருஜி, இந்த டயலாக் ரைட்டிங் வேலையெல்லாம் 10வதோட முடிஞ்சுருச்சுன்னு நெனச்சா... ஹி ஹி..! call me now- lets have fun - 1800-6969-6969 இந்த மாதிரி பொண்ணு எதாச்சும் அதீதனுக்கு கால் பண்ணிருக்குமோ? :)
குறிப்பு: நான் எழுதியிருக்கும் போன் நம்பரை கட்டுடைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.