ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்

திங்கட் கிழமை மாலை ரோசா வசந்த் தொலைபேசியில் அழைத்து ஒரு மாலையில் என்னைச் சந்திக்க வேண்டுமென்றார். அவரை இதற்குமுன் இரண்டு மூன்று முறை - மற்றவர்களுடன் - சந்தித்திருக்கிறேன். சரி என்றேன். ஆனால் சந்திக்க வாய்க்கவில்லை. தொடர்ந்து செவ்வாய்க் கிழமையும் பேசினார். புதன் கிழமை சந்திப்பதாய்ச் சொன்னேன். புதன் கிழமை வேறு வேலையிருந்ததால் முடியவில்லை. மறுபடி புதன் கிழமை இரவு தொலைபேசி அடுத்த நாள் சந்திக்க முடியுமா என்றார். இவ்வளவு தூரம் நம்மைச் சந்திக்க ஒருவர் பிரியப் படும்போது எவ்வளவுதான் தள்ளுவது என்று அடுத்த நாள் - அதாவது நேற்று - செண்ட்ரல் அருகிலிருக்கும் பிக்னிக் ஹோட்டலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அவர் தொடர்ந்து இப்படிக் கேட்டது என்னை திட்டமிட்டு கொலைவெறியோடு தாக்கத்தான் என்பது தெரியாது எனக்கு.

நேற்று மாலை 6.45 மணியளவில் சந்தித்தோம். சுமார் 2-1/2 மணிநேரம் பல விஷயங்கள் (தனிப்பட்ட விஷயங்கள் உள்பட) பேசிக் கொண்டிருந்தோம். 9.30 மணிக்கு பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது. வெளியில் வந்து ஒரு சிகரெட் புகைத்து விட்டுப் பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.

ஒரு இருட்டான இடத்தில் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார் ரோசா. லூசு மாதிரி வாகாக முகத்தைத் திருப்பினேன். வலது முஷ்டியை மடக்கித் தயாராக வைத்து இருந்திருப்பார் போல. fraction of a secondல் என் முகத்தில் ஓங்கி விழுந்தது ஒரு குத்து. மூக்கின் மேல் பாகத்தில் பட்டு உடைந்து ரத்தம் கொட்டத் துவங்கியது (நான் ஆஸ்ப்ரின் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்வதால் அதிக ரத்தப் போக்கு இருந்தது). சில நிமிடங்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. குனிந்து அமர்ந்து விட்டேன். ரத்தம் அது பாட்டிற்கு கொட்டிக் கொண்டே இருந்தது. நான் பயந்து போனேன். அருகிலிருந்த கடையிலிருந்து சிலர் ஓடி வந்து சத்தமாக யார் அடித்தது என்பதைப் போன்று விசாரித்தனர். ரோசாவும் கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனார் (என்று நினைக்கிறேன்).

ஒன்றிரண்டு ஆட்டோ நிற்காமல் செல்ல கிடைத்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற்றினார். எதிரிலிருந்த அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே கீழே விழுந்ததாகச் சொல்லி அனுமதி கேட்டோம்.

இதற்கு நடுவில் நான் என்னுடைய மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு அலுவலக நண்பர்களை வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரண்டு மூன்று நண்பர்களுடன் என்னைப் பார்க்க கிளம்பியிருந்தார்.

ரோசா வளர்மதியைக் கூப்பிட்டார். வளர்மதி பைத்தியக்காரனுக்கு தகவல் தந்தார். பைத்தியக்காரன் டாக்டர் ப்ரூனோவை அழைத்து விவரம் சொல்லியிருக்கிறார். நடுவில் ரோசா சுகுணாவையும் கூப்பிட்டிருக்கிறார்.

என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் காய்ந்து போய் விரல்களைச் சுருக்கி நீட்டவே ஒரு மாதிரியாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதி கிடைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவர் ப்ரூனோ வந்து அனுமதி பெற்றுத் தந்தார். நிறைய ரத்தம் வெளியேறியிருந்ததால் கையில் க்ளூக்கோஸும் ஏறிக் கொண்டிருந்தது. ரத்தம் நிற்க என்று நினைக்கிறேன் - ஒரு ஊசி போடப் பட்டது. பிறகு இன்னொரு ஊசியும் போடப்பட்டது.

ரோசாவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் (அல்லது அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை). அலுவலக நண்பர்கள் வருமுன் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க ரோசாவைக் கிளம்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் - அவரைக் காணவில்லை.

மருத்துவரிடம் மறைக்கக் கூடாதே... ப்ரூனோவிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போது நண்பர்களும் மனைவியும் அருகிலிருந்தனர். வலியாலும் ஏமாற்றப்பட்ட உணர்வாலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நண்பர்கள் கொஞ்சம் கொதித்தாலும், விஷயம் கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொண்டேன்.

இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன். மருத்துவர் ப்ரூனோ ஒரு ஸி டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார். அதற்குள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து விசாரிக்கத் துவங்கினார். அவரிடமும் நானேதான் கீழே விழுந்தேன் என்று சொன்னேன். அடியைப் பார்த்தால் கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை, யார் தாக்கினார்கள் எனச் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொல்வது உண்மைதானென்று உறுதியாகச் சொன்னேன். நடுவில் ஸ்கேன் செய்யச் சென்றபோது மருத்துவர் ப்ரூனோவிடம் இதைச் சொன்னேன். வெளியில் வந்தால் சிவராமன் ஸ்டேட்மெண்ட் எழுதி ஒரு வழியாக இந்த விஷயம் முடிந்தது.

இரவு 1 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். இன்று ENT மருத்தவரிடம் கலந்தாலோசிக்கச் சொல்லி ப்ரூனோ அறிவுரை சொல்லியிருந்தார். இன்று காலை ENT மருத்துவரைப் பார்த்தேன். வீக்கம் குறைய மாத்திரையும் மூக்கிற்கு dropsம் கொடுத்திருக்கிறார். X Ray மாலையில் எடுக்க வேண்டும். இப்போது மூக்கில் தொட்டால் வலியும் இடது கண்ணின் கீழ் வீக்கமும் இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் முழுக்கச் சரியாகிவிடுமென்று நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று நாட்களாக என்னைச் சுத்திப் போட்டு அழைத்தார். மூன்றாம் நாள் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. நீங்கள் சொல்லும் இடத்திற்கே வருகிறேன் என்றார். இவ்வளவு சொல்லியும் சந்திக்காமலிருந்தால் எப்படி என்று கேணத்தனமாக ரோசா வசந்த் விரித்திருந்த வலையில் விழுந்துவிட்டேன். இதுவரை இப்படி நயவஞ்சகமாக யாரும் என்னிடம் நடந்து கொண்டிராததால் நம்பிவிட்டேன்.

ஒருவனைத் தாக்க வேண்டுமென்றால், அவனை மதுச்சாலைக்குக் கூட்டிச் சென்று போதையேற்றி அடிப்பார்கள் என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அறிவுஜீவுகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் போலும்.

அரசியல் அறம் தெருப்புழுதி என்று பேசுபவர் ரோசா. ஒருவனை ஏமாற்றி வரவழைத்து, அவனுக்கு போதையேற்றி, அவன் எதிர்பார்க்காமல் இருக்கும் சமயம் அவனை கொலைவெறியோடு அடித்து வீழ்த்துவது எந்த விதத்தில் நேர்மை என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் புரியவில்லை.

இப்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சியொன்றை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா. நல்ல வேளையாக அந்த நிகழ்ச்சி வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு பிறகு நடக்கவேயில்லை. சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.

176 comments:

மணிகண்டன் said...

இன்று காலையிலயே ப்ருனோ பதிவில் படித்து விஷயம் தெரிந்தவுடன் வேதனையாக இருந்தது. ஒரு பிரச்னையும் இல்லாமல் சீக்கிரமே குணமடைவீர்கள்.
ஜாக்கிரதையாக இருங்க ஜ்யோவ்.

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

:(

முரளிகண்ணன் said...

ரோசா செய்தது எந்த வகையிலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத துரோகம். கேள்விப்பட்ட கணத்திலிருந்து ஆற்றாமையுடன் புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஓய்வில் இருப்பீர்கள் என தொடர்பு கொள்ளவில்லை.

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.


@பிரியமுடன் வசந்த்

இந்த நேரத்தில் இம்மாதிரியான கமெண்டுகள் வேண்டாமே?

துளசி கோபால் said...

oops.....சந்தர் தட்டச்சுப்பிழை.
சுந்தர் என்று திருத்திக்குங்க ப்ளீஸ்.

துளசி கோபால் said...

அட ராமா(-:

யாரைத்தான் நம்புவதோ....பேதை/பேதன் நெஞ்சம்????

பதிவர்கள் எல்லோரும் கருத்துவேறுபாடுகள் மட்டுமேஉள்ள ஒரே குடும்பமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே!!

(குடும்பச்சண்டை????)

உடம்பைப் பார்த்துக்குங்க சந்தர்.

ஜோ/Joe said...

:(

Pot"tea" kadai said...

மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. ரோசாவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் ஒரே முறைதான் சந்தித்திருக்கிறேன் என்றாலும் ரோசா ஜ்வோவை தாக்கியிருப்பது ஒரு பச்சைக் குழந்தையை தாக்குவதற்கு ஒப்பானது. ரோசா இவ்வளவு கோவம் வருமா உங்களுக்கு? எதற்கு தாக்கினீர்கள் என்பது உங்களுக்குமட்டுமே தெரியும் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்னளவில். :(

ஜ்யோவ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

வரவனையான் said...

மிகுந்த அதிர்ச்சியாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது. உங்களிருவரையும் நன்று அறிவேன் என்கிற வகையில் அதிர்ச்சியும், இந்த அறிவுஜீவி கூதியானுங்க எல்லோரும் கடைசியில் இப்படித்தானோ என்கிற அயர்ச்சியுமே வருகிறது.

உங்கள் இருவரை பற்றிய எனது மதீப்பீடு "குழந்தைகள்" என்றே இருந்து தொலைந்தது கடைசி வரி வரை. உண்மையில் கண்டிக்கதக்கதே இந்த நிகழ்வு.

ஒரு முறை சென்னையில் என் விடுதி விட்டு நெடுந்தொலைவில் கிட்டதட்ட நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் வாடகை வாகனம் ஏதும் கிடைக்காமல் தவிக்க துவங்கிய போதே தன் வீட்டீற்கு வருமாறு ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன் நின்ற ரோசாவிடம் ஒரு மனிதனை அடிக்கும் மூர்க்கம் இருந்திருகிறது என்பதே கவலையளிக்கிறது

ஜ்வோவ் பற்றி சொல்லவேண்டியதே இல்லை த்தோவ்தோவ்ஸ்கி'யை கொஞ்சமாய் தமிழனைஸ் செய்தால் ஜ்வோவ் போலத்தான் இருப்பார் என அவரில்லாத ஒரு மதுகூடத்தில் நான் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது

காயத்தினை விட தனது நம்பிக்கை தோற்றதுதான் பெரும் கவலையாய் சுந்தருக்கு இருக்கும் என நினைகிறேன்.

என் கண்டனமும் அனுதாபங்களும் என்ன வித தாக்கம் ஏற்படுத்தும் என தெரியவில்லை ஆயினும் இந்த நிகழ்வு எனக்கு கவலையளிக்கிருக்கிறது என்பதே உண்மை

மண்குதிரை said...

enna seyvethenre theriyavillai

en ulamara varuththaththai theriviththuk kolkireen

குப்பன்.யாஹூ said...

I am sad to hear this incident. I pray and wish that you should recover soon.

Going forward please avoid these kind of incidents, posts. These kind of internal group ism in blog world wil affect the growth of blog world to the next generation.

ஜோ/Joe said...

:(

Romeoboy said...

இந்த கொடுமை எல்லாம் நடக்குதா இங்க ..

விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

god...this is too bad...get well soon..

பிரியமுடன்...வசந்த் said...

நான் அவரை மனசு கஷ்டப்படுறவர சிரிக்கவைக்கணும்ன்னுதான் கமெண்ட் பண்ணுனேன் முரளி

இப்போ டெலிட்டுட்டேன் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணுமாமுல்ல..

Cable Sankar said...

தலைவரே நேற்று நானும் சுகுணாவும் தான் வந்தோம். ரோசாவை அங்கிருந்து அப்புறபடுத்தி ஆஸ்பத்திரி வெளியே நிற்க வைத்து விட்டோம்.

திரு/thiru said...

அதிர்ச்சியும், கவலையும் தருகிறது. எந்த காரணமாக இருப்பினும் ரோசாவின் தாக்குதல் கண்டனத்துக்குரியது. சுந்தர் உடலையும், மனதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

நையாண்டி நைனா said...

விரைந்து குணம் அடைய வாழ்த்துக்கள்.

தாக்குதல். கண்டனத்திற்கு உரியது.
:(

Jeeves said...

I strongly condemn his barbaric act

விரைவில் குணமடைந்து வர பிரார்த்தனைகள்.

வால்பையன் said...

ரோசா செய்தது மகா கேவலமான செயல்!

அந்த இடத்தில் நானாக இருந்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்!
உங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என சொல்லி வையுங்கள்!

இல்லை நாங்கள் பொறுமை இழக்க வேண்டியிருக்கும்!

enRenRum-anbudan.BALA said...

வசந்த்தை அறிந்த வரையில், அவர் இப்படி செய்யக் கூடியவர் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது !

இந்த வன்முறையில் போதையின் பங்கு பெருமளவில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

டாக்டர் புருனோவுக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

சுகுணாதிவாகர் said...

/நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் - அவரைக் காணவில்லை./

இந்த வரிகள் ரோசா அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிட்டார் (அ) பயந்து ஓடி விட்டார் என்பதான தொனி தெறிப்பதால் ஒரு திருத்தம்.

நீங்கள் மருத்துவமனை படுக்கையில் இருந்ததால் உங்களுக்கு நடந்தவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் (சம்பவம் நடந்த இடத்தில் அல்ல, அரசு மருத்துவமனையில்) இருந்ததால் இதைச் சொல்கிறேன்.

நான், நர்சிம், கேபிள்சங்கர் மூவரும் நேற்று மாலை தி.நகர் பாரில் மதுவருந்திக்கொண்டிருந்தோம். குடித்து முடித்து வெளியே வந்து நர்சிம் கிளம்பி விட்டார். சிகரெட் குடிப்பதற்காக நானும் சங்கரும் ஒரு கடையோரம் ஒதுங்கியபோதுதான் ரோசாவிடமிருந்து போன் வந்தது, ‘‘ஜ்யோராம்சுந்தர் ஆபத்தான கட்டத்தில் ஜி.எச்சில் இருக்கிறார். உடனே வாருங்கள்’’ என்று பதட்டமான குரலில் அழைத்தார். நானும் சங்கரும் உடனடியாக கிளம்பிவிட்டோம். ஆனால் உங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியாத நிலை. அப்போதுதான் சங்கர் உங்கள் போனுக்குப் பேசினார். அதை ரோசா எடுத்துப் பேசிவிட்டு உங்களிடம் கொடுத்தார். ‘எப்படியும் நாம் போய்ச்சேர்வதற்குள் புருனோவைப் பார்க்கச்சொல்லலாமே’ என்பதற்காக நான் ரோசா போனுக்குப் போன் போட்டால் ஒலித்துக்கொண்டே இருந்தது. பிறகு உங்கள் போனுக்குப் போட்டால் ரோசா பேசினார். புருனோவிடம் சொல்ல வேண்டும் என்றவுடன் ‘‘உடனடியாகச் சொல்லுங்கள்’’ என்றார். சங்கர் புருனோவிற்குப் போன் போட்டால், ‘‘நான் வார்டுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்’’ என்றார் புருனோ. (அதற்குள் பைத்தியக்காரன் புருனோவுக்குப் போன் செய்துவிட்டார்.)

நானும் சங்கரும் மருத்துவமனைக்கு வந்தபோது உங்களுக்கு சலைன் ஏறிக்கொண்டிருந்தது. நீங்கள் என்னைக் கவனிக்கவில்லை. புருனோவிடம் பேசியபோது, ‘‘சுந்தருக்கு இப்போதைக்குப் பிரச்சினையில்லை, ரோசாதான் புலம்பிக்கொண்டிருக்கிறார்’’ என்றார். அதேநேரத்தில் உங்கள் நண்பர்களிடத்தில் இயல்பான கோபம் இருக்கும் என்பதால் நானும் சங்கரும்தான் ரோசாவை வலுக்கட்டாயமாக மருத்துவமனை வாசலுக்கு அழைத்து வந்தோம். உங்களுக்குச் சிகிச்சை நடக்கும் இடத்தில் எந்த அசம்பாவிதமும் அதைக் குலைத்துவிடக்கூடாது என்பதால்தான் அப்படி செய்ய நேர்ந்தது. பிறகு உங்கள் நண்பர் ஒருவர் வாசலுக்கு வந்தபோது, அவரும் சங்கரும் மருத்துவமனைக்கு உள்ளே சென்றார்கள். நான் ரோசாவுடன் வாசலில் இருந்தேன்.

பிறகுதான் முக்கால்மணி நேரத்திற்குப் பிறகு உங்களிடமிருந்து போன். ‘‘சுகுணா, வர்றேன்னு சொன்னீங்களே, வரவில்லையே’’ என்று. அப்போதுதான் நான் வந்த விஷயமே உங்களுக்குத் தெரியாது என்பது உறைத்தது. பிறகு ரோசாவை வாசலில் விட்டுவிட்டு உள்ளே வந்தேன். நீங்கள் ஆற்றாமையோடு நடந்த சம்பவங்களைப் பேச ஆரம்பித்தீர்கள். அந்த நேரம் பைத்தியக்காரனும் வந்திருந்தார். மேலும் மேலும் நடந்த விஷயங்களைப் பேசுவது, உங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதாலும், இதற்கு மேலும் ரோசா மருத்துவமனையில் இருப்பது உகந்தது இல்லை என்பதாலும்தான் நானும் சங்கரும் அவரைக் கிளப்பிக்கொண்டு போனோம். இது பைத்தியக்காரனுக்கும் தெரியும்.

‘உங்களுக்கு ஸ்கேன் எடுத்துவிட்டதாகவும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கார்வந்துவிட்டதாகவும்’ பொய் சொல்லித்தான் ரோசாவை அழைத்துப்போனோம். ஆனால் பாதியிலேயே ரோசா, மீண்டும் மருத்துவமனைக்குப் போய் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போனபோது, ‘நீங்கள் காரில் கிளம்பிவிட்டதாக’ பைத்தியக்காரனிடமிருந்து போன் வந்தது. ரோசாவின் மனநிலைக்கு அவர் வீட்டிற்குப் போவது சரியாக இருக்காது என்பதால், நான் அவரை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். இன்று காலைதான் ரோசா அவர் வீட்டிற்குக் கிளம்பிப்போனார்.

இப்படி நான் விரிவாக எழுதுவது ரோசாவின் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக அல்ல. ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியதால்தான். எழுத்தில் எழுதப்படும் விஷயங்களுக்காக தாக்குதல் நடத்துவது அறமற்ற செயல்தான். திட்டமிட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ எப்படி இருந்தபோதும் ரோசா உங்களைத் தாக்கியது என்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம்தான். இனி அது யாருக்கும் நிகழவே கூடாத ஒன்று.

தீப்பெட்டி said...

:(

அறிவிலி said...

:(

சென்ஷி said...

:(

En varuththam kalantha kandanangalai therivithu kolkiren..

பரிசல்காரன் said...

கவலையளிக்கிறது ஜ்யோவ் ஜி :-((

ஜெகதீசன் said...

:((

அனுஜன்யா said...

கேட்க வருத்தமாக இருக்கு ஜ்யோவ். ஆயாசமாகவும் :((

Please take care.

அனுஜன்யா

Saravana Kumar MSK said...

மிகவும் அதிர்ச்சியாயிருக்கிறது..
விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள் தல..

யுவகிருஷ்ணா said...

:-(

நேசமித்ரன் said...

ரொம்ப வேதனையா இருக்குங்க ஜ்யோவ் .நீங்க சீக்கிரம் குணம் அடையனும்.
மனசு என்னமோ ரொம்ப போட்டு பிசயுது . சீக்கிரம் எல்லாம் சரியாக எனது வாழ்த்துக்கள் .

:(

Anonymous said...

ரொம்பக் கொடுமை

தேவன் மாயம் said...

என்னங்க இதெல்லாம்! கொடுமையா இருக்கே!

ச.சங்கர் said...

வருந்தத் தக்க நிகழ்வு.

ஆனாலும் unprovoked assault என்பதாக இந்த நிகழ்வைக் கருத முடியவில்லை :(

அவரை இந்த அளவு வன்முறைக்குத் தள்ளி விட்ட நிகழ்வு என்ன என நீங்கள் இருவர் மட்டுமே பரிசீலிக்க முடியும்..அல்லது அடுத்தவர் கவனம் தேவை எனில் அதையும் பொதுவில் வைத்து விவாதிக்கலாம்.

ஆனால் இந்தப் பதிவு எமொஷனல் வால்யு தவிர வேறு எதற்குப் பயன்படும் என்று புரியவில்லை.இது மாதிரி விஷயங்களை பதிவு போட்டு விளம்பரப் படுத்துவதை விட, உங்கள் இருவரின் பொது நண்பர்களிடம் பகிர்ந்து தீர்வு காண்பது முறையானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

எது எப்படியிருந்தாலும் நீங்கள் விரைவில் குணமடையவும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவும் எனது பிரார்த்தனைகள்.

பட்டிக்காட்டான்.. said...

வருத்தப்பட வேண்டிய விசயம்..
விரைவில் குணமடைந்து வாருங்கள்..

வெண்பூ said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது. கருத்து மோதல்களை இப்படி தெருச்சண்டைகளாக மாற்றுபவர்களை என்ன சொல்ல? :(

கணேஷ் said...

Take Care!

வல்லிசிம்ஹன் said...

சீக்கிரம் நலம் பெறுங்கள் சுந்தர்.

வலைஉலகில் இவ்விதம் நடக்கும் என்று கூட என்னால்
நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை.

கே.ரவிஷங்கர் said...

அதிர்ச்சி!

அட கடவுளே!நாமெல்லாம சந்தோஷமாத்தானே இருந்தோம்.

காசி - Kasi Arumugam said...

சுந்தர், சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள். ரோசாவசந்த் எளிதில் உணர்ச்சிவசப்படுவார் என்று என்பது என் தனிப்பட்ட அவதானம். திட்டம் போட்டு அடிப்பார் என்று நம்பமுடியவில்லை.

D.R.Ashok said...

ஒன்னும் சொல்ல தெரில..
இலக்கிய உலகம் ஒரு வித அயர்ச்சியை தான் கொடுக்கிறது.

பல வருடங்களுக்கு முன் சாருக்கு இதே தான் நடந்தது.

கல்வெட்டு said...

இப்படியும் நடக்குமா???

வலைப்பதிவு வாதம் விவாதங்கள் காரணமா?

அப்படி என்றால் பயமாகத்தான் இருக்கிறது தமிழ் வலைப்பதிவுகள் பற்றி. :-‍(

**

பக்கவிளைவுகள் இல்லாமல் சீக்கிரமே குணமடைய வேண்டும்.

**

வன்மம் பகை மேலும் தொடராமல் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் காரண வேறுபாடுகளை பேசி புரிந்துணர்வுடன் விலகிக் கொள்ளலாம்.

**

சுரேஷ் கண்ணன் said...

சுந்தர்,

படிக்கவே அதிர்ச்சியாய் இருக்கிறது. வாக்குவாதத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு திடீரென்று தாக்குவதைக் கூட ஒருவாறு புரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்படி திட்டமிட்டு ஒருவரை தாக்கும் கூலிப்படையினரின் மனநிலையையொத்த ஒரு நபரின் வன்மம் குறித்து யோசிக்கவே திகைப்பாக இருக்கிறது. அண்டை நாட்டின் மனித உரிமை மீறல் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும் இந்த அற்பங்கள் தனி மனித வாழ்வில் எத்தனை அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய அப்படியொன்றும் அதிர்ச்சியாய் இல்லை. பல அரசியல் தறுதலைகள் நம் முன்னே உதாரணமாக உள்ளனர். அவ்வளவாக பழக்கமில்லாத பதிவர்களிடம் வெறும் இணைய அறிமுகத்தை மட்டும் கொண்டு சந்திக்க்ச் செல்லக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். நீங்கள் குறிப்பிட்டிருந்த நபர் உரையாடலிலும் சரி நடவடிக்கைகளிலும் சரி, வன்மமும் அடிப்படை நாகரிகமற்றத் தன்மையும் கொண்டிருந்தார் என்பதை சில பதிவர் சந்திப்புகளின் போது அறிந்து கொள்ள முடிந்தது. எனவேதான் 'இந்த நபர் வருகிறார்' என்கிற காரணத்தினாலேயே பிற்பாடு சில சந்திப்புக்களை தவிர்க்க நேர்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கைக்கும்,உடல்நலத்திற்கும் குடும்பத்திற்கும் முக்கியம் கொடுங்கள். இலக்கியம், தர்க்கம் .. போன்ற மண்ணாங்கட்டிகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

அநாகரிகமான இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

RVC said...

என்ன காரணம் இருப்பினும் இந்த நிகழ்வு வன்மையாய் கண்டிக்கத்தக்கது. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.

Nundhaa said...

tamil blog world is no doubt an extension of the tamil small magazine literary movement with the good, bad and the ugly ... i'm happy for the good, sad for the bad and the ugly ...

Nundhaa said...

this is treachery and highly condemnable ... get well soon ... I'm emotionally upset and angered with what has happened to you ...

வெட்டிப்பயல் said...

:(

Get well soon...

மோகன்தாஸ் said...

:(

மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது.

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

கும்க்கி said...

அதிர்ச்சி...
வருந்துகிறேன்...

ramachandranusha(உஷா) said...

ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. அதிர்ச்சியாய் இருக்கிறது.

வடகரை வேலன் said...

சுரேஷ் கண்ணன்,

நடந்ததின் ஒரு பகுதியை எழுதியிருக்கிறார் சுந்தர். எது தூண்டியது அதற்கு முன் நடந்த விவாதம் எதைப் பற்றி என்பன போன்ற இன்னொரு பக்கமும் தெரியவில்லை.

அதே நேரம் இந்த வன்முறை கண்டிக்கப் படவேண்டியது மட்டுமல்லாமல் கவலை அளிக்கக்கூடியதுமாகும்.

உங்களுடைய பின்னூட்டத்தில் இருக்கும்
//அவ்வளவாக பழக்கமில்லாத பதிவர்களிடம் வெறும் இணைய அறிமுகத்தை மட்டும் கொண்டு சந்திக்கச் செல்லக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் // என்ற வரி சரியானதுதானா?

நேரமிருந்தால் என்னுடைய என்ன தவம் செய்தேனோ? ஒரு முறை படிக்கவும்.

ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு ஒட்டு மொத்தப் பதிவர்களையும் காயப்படுத்தும் வாசகம் இது. நான் மிகவும் மதிக்கும் உங்களைப் போன்ற பதிவர் இப்படி ஒரு பொதுக் கருத்தைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லுவார் என எதிர்பார்க்கவில்லை.

சுந்தர் இப்பதிவை எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. சுயகழிவிரக்கப் பதிவாகவே தோன்றுகிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

எந்தக்காரணமாய் இருப்பினும் இவ்வாறான தளர்ந்த உடல்நலம் கொண்டவரை மூர்க்கமாக தாக்குவது கடும் கண்டனத்துக்குரியது. என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.

அதே நேரம் கடும் கருத்துமோதல், மோசமான சொல்லாடல்கள், கடும் போதை இவை சேர்ந்து இந்த நிகழ்வு நடந்திருக்கலாமோ.. உங்களுக்கே அது வெளிச்சம்.

ரோசா பற்றி எதுவும் தெரியாத புதியவர்கள் நாங்கள். எதிரியாக இருப்பினும் 'விருந்துக்கு அழைத்து உணவில் விஷம் வைத்துக்கொல்வார்' என்று ஒருவரைப்பற்றி கூறுவது மிக வருத்தம் தருவதாக இருக்கிறது சுந்தர்ஜி.

மேலும் பின்னூட்டத்தில் சங்கர் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்தப்பதிவு அவசியமானதா என்பதும் கேள்விக்குரியதே.!

நல்லதந்தி said...

மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. ஒரு பதிவர் இப்படிக்கூட நடந்து கொள்வாரா? என்கிற அதிர்சி இன்னமும் அடங்கவில்லை!.

:(

உடலையும், மனதையும் கவனித்துக் கொள்ளுங்கள்!

cheena (சீனா) said...

அன்பின் சுந்தர்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

விரைவில் குணமடைய நல்வாழ்த்துகள்

PKS said...

சுந்தர்,

என்ன நடந்தது என்று தெரியாது. ரோசா தரப்பு நியாயத்தைக் கேட்காமல் ரோசாவைக் கண்டித்துக் கருத்து சொல்லக்க்கூடாது என்று நாட்டாமை யுவகிருஷ்ணா ஏற்கனவே டிவிட்டரில் தீர்ப்பு எழுதிவிட்டார். :-( ரோசாவிடம் அதிகம் சண்டை போட்டவன்/போடுபவன் நான். உங்களுக்கு நேர்ந்ததற்கு வருத்தப்படுவதா அல்லது அது எனக்கு நேராமைக்குக் கடவுளுக்கு நன்றி சொல்வதா என்று தெரியவில்லை. சுகுணா,வரவனையான் உள்ளிட்ட பலரின் பின்னூட்டங்கள் ரோசா உங்களை அடித்தது நிஜமென்று நம்பவைக்கின்றன. ஆயிரம் நியாயம் ரோசா பக்கம் இருந்தாலும், அடிதடி அறிவுஜீவி வேலை இல்லை. உங்களை அடிக்க ரோசாவுக்கு எந்த உரிமையும் இல்லை. நண்பர் ரோசாவுக்கு என் கடுமையான கண்டனங்களும், தாங்கள் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனைகளும்.

Roza, you really disappointed me. Never thought you would do it.

அன்புடன், பி.கே. சிவகுமார்

என்.விநாயகமுருகன் said...

அதிர்ச்சியாக இருக்கின்றது சுந்தர்.

மனுசனுக்கு மிஞ்சிதான் கடவுள்,இலக்கியம், இன்டலெக்சுவல், மண்ணாங்கட்டி எல்லாமே. சக மனிதனை காயப்படுத்திவிட்டு எவ்வளவுதான் இலக்கியம் பேசி எழுதினாலும் எல்லாம் புண்ணாக்குதான்..

குணமடைய வாழ்த்துகிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.


am distrubed.....take care.....

regards
arur

செல்வேந்திரன் said...

வாசிக்கும்போதே மிகுந்த பதட்டமாக இருக்கிறது. பதிவின் முடிவில் 'புனைவு' என்கிற லேபிள் இருந்துவிடக்கூடாதா என்கிற பதைப்புடனே வாசித்தேன்.

"சாத்தான் தான் போகாத இடங்களுக்கு மதுவை அனுப்புகிறான்" என்பது கோடிக்கணக்கான முறைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடித்தல் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இருந்த காலம் மாறி... சக மனிதனை துன்புறுத்த குடி ஒரு சாக்காக மாறி இருக்கிறது. போதையின் பெயரால் பொழியப்படும் வசை மழைகள் மன்னிக்கப்படும், குற்றங்கள் மறக்கப்படும் என்கிற வசதி குடிக்கிறவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

தங்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்ட வன்முறை எனக்கு கவலையளிக்கிறது. :(

குப்பன்.யாஹூ said...

சுகுணா திவாகர் பின்னூட்டம் படித்த பின்புதான் புரிகிறது சுந்தர், உங்கள் உடம்பிற்கு teevira பாதிப்பு என்று, சலேன் பாட்டில் வரை நிலைமை போயிருக்கிறது. உங்களின் பெருந்தன்மை அதை எல்லாம் எழுதாமல் விட்டு இருப்பது.

முதலில் நல்ல ஓய்வு எடுங்கள்.

சுரேஷ் கண்ணன் சொல்வது போல முத்லில் உங்கள் உடம்பு, வாழ்க்கை, குடும்பம், மனைவி, குழந்தைகள் job தான் முக்கியம், அப்புறம் தான் பதிவு, பின்னூட்டம், கவிதை, இலக்கியம், சிறுகதை பட்டறை எல்லாம்.

உங்கள் குடும்பத்தோடு நிறைய நேரம் செலவிடுங்கள் சுந்தர்., பதிவு எல்லாம் அப்புறம் தான்.

Ramesh said...

என் அருமை தமிழ் வாத்தியாரே!

இந்த மாதிரி நடக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை!

Even drunk attacks are to be condemned!

I hope senses prevail in the future.

:-(

குசும்பன் said...

:(( போலீஸ் கேஸ் கொடுத்து இருக்கனும் ஜீ

sriram said...

சுந்தர் ஜி
நான் உங்கள் பதிவில் இடும் முதல் பின்னூட்டம் இந்த இடுகைக்கு அமைந்தது குறித்து வருந்துகிறேன்.
Before anything, Get well soon and we all are looking forward to a post where you say that you are back on your feet and doing great.

எது எப்படி இருப்பினும், வசந்த் செய்தது தவறே. இதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அவர் அவ்வாறு செய்த்தின் காரணம் உங்களுக்கும் வசந்திற்கும் மட்டுமே தெரியும்.

வசந்தின் செய்கையைப் பார்க்கும் போது (at the hospital and thereafter), உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது (I got this impression from Suguna's comment).
பலரும் விசயத்தின் ஆழம் தெரியாமல் உணர்ச்சி வசப்பட நீங்கள் காரணமாகலாமா (உதா:வால்பையன்)
வசந்திடம் பேசிப் பாருங்கள், அவர் வருத்தம் தெரிவிக்க தயாராக இருப்பார் என நம்புகிறேன். ஒத்து வரலன்னா, வெட்டி விடுங்க (உறவைச் சொன்னேன்).
ஒடம்பப் பாத்துக்கோங்க.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

//9.30 மணிக்கு பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது. வெளியில் வந்து ஒரு சிகரெட் புகைத்து விட்டுப் பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.
//

ஹலோ, அவர் கேட்ட மாதிரி கடேசி தம்ம அவருக்கே கொடுத்திருந்தா இப்படி மூக்குடைபபட்டிருக்க வேண்டாமே?

மனசாட்சி said...

பதிவர்களிடம் வெறும் இணைய அறிமுகத்தை மட்டும் கொண்டு சந்திக்க்ச் செல்லக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.

//

yes

yamuna rajendran said...

anpulla sundar-
like any issue, there may be another side from rosa. one can not rationlise this act. it is brutal. unconditionaly this has to be condemned. what is all the meaning of all this talks of humanity? sundar, my unknown friend, i wish you good health soon. take care. love from some one who often visited your writings. anpudan yamuna rajendran

Kiruthikan Kumarasamy said...

என்னென்னவோ எழுத வந்தேன், இப்போது வேண்டாம்.... விரைவில் தேறி வாருங்கள்.

பி.கு: உங்களைத் தாக்கிய அதே நபரைத் தூக்கிப் பிடித்து, மற்றப் பதிவர்களை எடுத்தெறிந்து பேசிய நவீன பார்ப்பன் இங்கேயும் ஏதோ எல்லாம் சொல்லியிருக்கிறார்

அறிவன்#11802717200764379909 said...

வலைப் பக்கங்களில் கருத்துத்தாக்குதல்கள் கூட தனிப்பட்ட நபரை அல்லது குடும்பத்தினரை,கேவலமாகத் தாக்கி எழுதத் துவங்கியதின் நீட்சியே இவ்வகைத் தனிமனிதத் தாக்குதல்கள்!!!

வலையில் எழுதுவது இவ்வளவு துர்பலமான நிகழ்வாக மாறிக் கொண்டிருப்பது சோகம்.

இவ்வகையான தாக்குதல்களுகான தூண்டுதல்கள் என்ன?

butterfly Surya said...

கேவலமான செயல்.மிக மிக கண்டிக்க தக்கது. அதிர்ச்சியும் கவலையும் ஆட்கொள்ளுகிறது.


விரைவில் நலம் பெற பிரார்திக்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:(

?!?

Pot"tea" kadai said...

ஜ்யோவ்,

சில பதிவர்களின் பின்னூட்டங்கள் கவலையளிக்கக் கூடியதாய் இருக்கிறது. ரோசாவினுடைய இந்த மிஸ் அட்வெண்ட்ச்சர் போதையில் ஏற்பட்ட ஒன்றாகவே இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், பிறிதொரு நாளில் மீண்டும் சரக்கடித்தே கை குலுக்கிச் செல்லக் கூடியதே.

இதைச் சம்பந்தப்பட்ட நீங்களே எழுதியபடியால் காத்திருக்கும் பலரும் கிசு கிசு குசு குசுவென நாறாமல் இருப்பது நன்றே.

போதையில் நாமும் என்னென்னவோ செய்திருக்கிறோம். அடுத்த நாள் எழுந்து சே! அந்த ஒரு ஷாட் மட்டும் எடுக்காம இருந்தா இதை அவாய்ட் பண்ணியிருக்கலாமே என்றும் வாராவாரம் எண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம்.

சொறிந்துவிடும் கூட்டத்திடம் மட்டும் உஷாராக இருங்க ஜ்யோவ்.

சுகுணாவின் விரிவான பின்னூட்டத்தகவலுக்கு நன்றி.

நிலாரசிகன் said...

எழுத்தால் ஜெயிக்க முடியாமல்,முதுகுக்கு பின்னாலிருந்து தாக்கியது கோழைத்தனம். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.மிகுந்த வருத்தமளிக்கிறது இப்பதிவு.விரைவில் குணமாக இறைவேண்டுகிறேன் :(

Anonymous said...

//திட்டம் போட்டு அடிப்பார் என்று நம்பமுடியவில்லை//

அப்ப.. சுந்தர் பொய் சொல்கிறார் என்று சொல்கிறீர்களா.. நடுநிலைவியாதியான காசி அவர்களே..

jackiesekar said...

சீக்கரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்...

வித்யாசாகரன் (vidyasakaran) said...

சுந்தர்,
இது அதிர்ச்சியளிக்கிறது.
என்னதான் கருத்து வேறுபாடுகளிருந்தாலும், இப்படி???? :( கொடுமை!
விரைவில் நலமடையுங்கள்!

ILA(@)இளா said...

சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்! இதுதானாயா பதிவுலகத்த அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறதுன்னு சொல்றது?

எனது கண்டனங்களும். தாக்கியதான காரணம் ரோசாவசந்தின் பதிவில் எதிர்பார்க்கிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

@ எ.அ.பாலா... போதையின் பங்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அப்படிச் செய்யக்கூடியவர் இல்லை என்று நினைத்ததால்தான் நானும் சென்றேன்!

@ வால்பையன், எதிர்வினையாற்றும் நிலையில் நான் இல்லை அப்போது. இப்போதும் எதிர்வினையாற்றும் மனநிலை இல்லை.

@சுகுணா, கேபிள் சங்கரும் சொன்னார் - நீங்கள் இருவரும் வந்து சந்தித்ததாக. அதிக ரத்த இழப்பினால் நினைவிழந்திருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். உங்களை அலைபேசியில் கூப்பிடும்போது ரோசாவும் கீழே இருப்பதாக நீங்கள் சொன்னது மங்கலாக நினைவிருக்கிறது.

@ சுரேஷ் கண்ணன், இதற்குமுன் அவரைச் சிலசமயம் பார்த்திருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து அவருடன் மதுவும் அருந்திருக்கிறேன். தெரிந்த ஒருவர் வருந்தி அழைக்கும்போது எப்படிச் செல்லாமல் இருப்பது?

@கல்வெட்டு, நிச்சயம் எழுத்து தாண்டிய காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. இனி அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விருப்பமில்லை.

@ காசி சார், சம்பவங்களின் கோர்வை அவர் திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

@ சங்கர், ஏதாவது provocation இருக்கத்தான் செய்திருக்கும். அப்படி எதுவுமின்றி பைத்தியம்தான் அடிக்கும். ஆனால் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அப்படியான ஒரு provocation எதுவும் இல்லை. அவரது முன்கூட்டிய - என்னை அடிக்க வேண்டும் என்ற தீர்மானம்தான் காரணமாயிருந்திருக்க முடியுமென்று நம்புகிறேன்.

நடந்த விஷயம் பலவாறாகத் திரிக்கப்படத் துவங்கிவிட்டது காலையிலிருந்தே. அதனால் நடந்த விஷயங்களை அப்படியே எழுத வேண்டுமென்று நினைத்தேன். மற்ற காரணங்களில்லை.

மாதவராஜ் said...

வருத்தமாக இருக்கிறது.

மனசாட்சி said...

மேலும் பின்னூட்டத்தில் சங்கர் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்தப்பதிவு அவசியமானதா என்பதும் கேள்விக்குரியதே.!
//

அவசியம் தேவை..!!!

ஏனெனில் இவர் இப்படிபட்டவர் என்று சக பதிவருக்கு எச்சரிக்கை முக்கியம்.!

உதாரணம்:

மூர்த்தி பற்றிய உண்மையை பதிவர்கள் மறைந்திருந்தால் அவன் இன்னும் வலையில் உலாவி கொண்டு இருப்பான்.

புதிய பதிவர்கள் அவன் வலையில் விழுத்து இருப்பார்கள்

என்ன காரணம் அல்லது சமாதானம் சொன்னாலும் நான்கு ஐந்து நாள்கள் கூப்பிட்டு முடிவில் ரெத்தம் வர அடிப்பது என்பது காட்டுமிராண்டிதனம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள பதிவுலக நண்பர்களே,

எனக்கு தனிப்பட்ட முறையில் ரோசாவையும் தெரியாது, ஜ்யோவையும் தெரியாது. இது பற்றிய விபரம் எனக்குத் தெரியவந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்.

சென்னை வரும்போது மற்ற பதிவர்களை சந்திக்க ஆசையாய் இருந்தேனே?! Z+ செக்யூரிட்டியுடன் தான் வரவேண்டுமா?

மணி said...

ஒன்னு போலீசுல சொல்லி உள்ள தள்ளனும்.
இல்ல வாய்ப்பு கெடச்சா இதேமாதிரி போட்டுதாக்கியிருக்கலாம்.

விட்டுட்டு இதையெல்லாம் பப்ளிக்கா எழுதறது தேவையில்லாத்து சார்.

சீக்கிரம் குணமடையுங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@ கடைசி தம்மை கொடுக்கச் சொன்ன அனானி - உங்களுடைய ‘நகைச்சுவையை’ நான் ரசிக்கவில்லை. வேறு யாரும் அதிர்ஷ்டமுடையவர்கள் ரசிப்பார்களோ என்னவோ.

@ ஸ்ரீராம், உங்கள் கேள்விக்கு மேலே பதில் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். நிச்சயம், இனி, ரோசா வசந்திடம் எவ்விதமான நட்போ அல்லது உறவோ வைத்துக் கொள்ள விருப்பமில்லை.

@ குசும்பன் - வேண்டாம்யா. இதுவா நமக்கு வேலை.

@ செல்வேந்திரன் - குடி மட்டுமே காரணமாயிருக்க முடியாது என்று திடமாக நம்புகிறேன்.

@ PKS, என்னது ரோசா தரப்பு ‘நியாயமா’... வேண்டுமானால் காரணங்கள் இருக்கலாம் - கொலை செய்யக்கூட காரணங்கள் இருக்கலாம்தானே... ஒருவனை வருந்தி அழைத்து வரச் செய்து, அவனைக் குடிக்கச் செய்து, react செய்ய இடம்தராமல் அடித்து வீழ்த்துவதற்கு என்ன விதமான நியாயம் இருக்க முடியுமோ தெரியவில்லை. ஒரு வேளை யுவ கிருஷ்ணாவிற்குத் தெரிந்திருக்கலாம். என்றைக்காவது அவருக்கோ அல்லது அவருக்கு வேண்டியவர்களுக்கோ இப்படியானால் அப்போதும் ‘அடுத்தவர் தரப்பு’ ‘நியாயங்கங்களை’ தெரிந்து கொள்ள விரும்புகிறாரா என்று பார்ப்போம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@ ஆதிமூலகிருஷ்ணன், கடும் மோதல், மோசமான சொல்லாடல்கள், கடும் போதை... இந்த மாதிரி ஒரு எழவு நடக்கவில்லை. 6 பெக் குடித்தது நான் தான் - அவர் அளவாகவே குடித்தார் (எதற்கு என்று மறுபடியும் விளக்க ஆயாசமாயிருக்கிறது). இப்படிக் கூப்பிட்டு எதிர்வினையாற்ற இடம் தராமல் அடித்ததால், விஷம்கூடக் கொடுப்பார் என்று சொல்லத் தோன்றியது. இந்தப் பதிவிற்கான காரணத்தை மேலே விளக்கியுள்ளேன்.

@ அண்ணாச்சி, நிஜமாகவே உங்கள் பின்னூட்டம்தான் என்னை வருந்தச் செய்கிறது. ரோசா செய்ததற்கு இணையான வன்முறையை நீங்கள் என்மீது செலுத்துவதாக உணர்கிறேன். நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை :(

ஒரு எழவும் முன் பின்னாக விவாதம் நடக்கவில்லை. அதனாலெல்லாம் ரோசா என்னை அடிக்கவில்லை. இது முன் தீர்மானிக்கப்பட்ட தாக்குதல்.

இன்னொன்று அண்ணாச்சி - ஹீரோ மாதிரி எழுத்தில் வேஷம் போடாமல் நடந்ததை நடந்த மாதிரி எழுதினால் - அதுவும் அடிவாங்கியவன் எழுதினால் - அது கழிவிரக்கப் பதிவாகத்தான் தோன்றும்.

யுவகிருஷ்ணா said...

//ஒரு வேளை யுவ கிருஷ்ணாவிற்குத் தெரிந்திருக்கலாம். என்றைக்காவது அவருக்கோ அல்லது அவருக்கு வேண்டியவர்களுக்கோ இப்படியானால் அப்போதும் ‘அடுத்தவர் தரப்பு’ ‘நியாயங்கங்களை’ தெரிந்து கொள்ள விரும்புகிறாரா என்று பார்ப்போம்.
//

ஜ்யோவ்ராம்!

பி.கே.எஸ். அவர்களைப் பற்றி 'சரியாக' புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு பின்னூட்டத் தீர்ப்பு எழுதிவிட வேண்டாம். அண்ணன் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ரகம்.

உங்கள் இருவருக்கான பிரச்சினையை ட்விட்டரில் அவருக்கு வாகாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். நீங்கள் அடிபட்டதற்காக வருந்தியதை விட, அடித்தவர் ரோஸா என்பதால் பி.கே.எஸ். அதிக மகிழ்ச்சி அடைந்திருந்தார். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு அண்ணன் பி.கே.எஸ். அவர்களின் கீழ்க்கண்ட சில ட்விட்டர் முத்துச்சிதறல்களை இங்கே தருகிறேன். சூழலை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

//ஆனால் ரோசா பெயர் பொதுவில் கெட்டதுதான்.நான் உட்பட அவருடன்உடன்படாத பலர்இந்நிகழ்வை அவருக்கெதிராகவாதங்களில் பயன்படுத்த வழிசெய்து :(//

//குஞ்சுகுளுவான்களில் இருந்து பெரிசுகள்வரை ரோசாவை இதுகுறித்து காலத்துக்கும் பேச வழி வகுத்துவிட்டார் ரோசா.அதுவே அவரின் பெரிய தண்டனை//

Anonymous said...

//ரோசா பற்றி எதுவும் தெரியாத புதியவர்கள் நாங்கள். எதிரியாக இருப்பினும் 'விருந்துக்கு அழைத்து உணவில் விஷம் வைத்துக்கொல்வார்' என்று ஒருவரைப்பற்றி கூறுவது மிக வருத்தம் தருவதாக இருக்கிறது சுந்தர்ஜி//

ஐயா ஆதி, இப்படி உங்களுக்கு நடந்தா நீங்க இப்படி பேசமாட்டீங்க, சுந்தரா இருக்கவே இப்படி புலம்பிக்கிட்டு இருக்காரு, வேற யாரா இருந்தாலும் நடந்ததே வேறவா இருந்திருக்கும், இன்னாங்க ஒருத்தன் கை வச்சிருக்கான் சுமமா உக்காந்துட்டு வியாக்யானம் பேசிட்டு இருக்கீங்க

Anonymous said...

//ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு ஒட்டு மொத்தப் பதிவர்களையும் காயப்படுத்தும் வாசகம் இது. நான் மிகவும் மதிக்கும் உங்களைப் போன்ற பதிவர் இப்படி ஒரு பொதுக் கருத்தைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லுவார் என எதிர்பார்க்கவில்லை.

சுந்தர் இப்பதிவை எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. சுயகழிவிரக்கப் பதிவாகவே தோன்றுகிறது.//

மூக்கு உடஞ்சிருக்கு bone என்னாச்சி நரம்பு என்னாச்சி ரத்தம் போயிருக்கு இப்படின்னு ஒரு பதிவெழுதி இருக்கான் இன்னா அண்ணாச்சி இங்க வந்து இப்படி பேசறது சரியாவா இருக்கு, தயவு செஞ்சி நாட்டாமை பண்றன் பேர்வழின்னு இப்டிலாம் வந்து எதயாவது ஔறி வெக்காதீங்க, நீங்க நாட்டாமை பண்றதுக்கு வேற வேற பிரச்சனைகள் வரும் காத்திருங்க

Anonymous said...

என் ரெண்டு பின்னூட்டம் மட்டும் தான் வந்திருக்கு ஏன் மத்தத லாம் வெளியடல, தயவு செஞ்சி நீங்க அவைகளை வெளியிடனும சார், அது எவ்ளோ பிரச்சனையானாலும் சரி, வெளியிடுங்க

Anonymous said...

எனக்கும் உங்களையோ, ரோசா வசந்த் என்பவரையோ தெரியாது. ஆனால், நடந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ரோசா வசந்த் பற்றி நீங்கள் பதிவு எழுதியதில் எந்தத் தவறும் இல்லையென்றே தோன்றுகிறது. வேலன் அண்ணாச்சி மற்றும் ஆதி ஆகியோர்கள் வருத்தப்படுவதில் நியாயம் இல்லை. அடி வாங்கியவருக்குத்தான் அதன் வலி தெரியும். தவிர செல்வேந்திரன் சொல்லிய போல், ”போதையில் செய்துவிட்டேன்” ”உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டேன்” என்று சொல்பவர்கள் எல்லாம் அவர்கள் தப்பித்துக்கொள்ள சொல்லும் பொய்கள். எவ்வளவு போதையிலும் எவர் ஒருவரும் நரகலைத் தின்று விட்டதாக இதுவரை நான் எங்கும் கேள்விப்பட்டது கூட இல்லை. சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்!

DJ said...

அதிர்ச்சியாக‌த்தான் இருக்கிற‌து. சுந்தர் விரைவில் நீங்க‌ள் குண‌ம‌டைய‌ வேண்டும்.
.....
நீங்க‌ள் இர‌ண்டு பேரும் நான் அதிக‌ம் ம‌திக்கின்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள். அதிலும் ரோசாவை 7-8 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌வே தெரியும், நேரிலும் ச‌ந்தித்திருக்கின்றேன். அத‌ற்காய் வ‌ன்முறையாக‌ நீட்சிய‌டைவ‌தை எந்த‌ப்பொழுதிலும் ஏற்றுக் கொள்ள‌முடியாது.

ம‌ற்ற‌து இந்த‌ நேர‌த்தில் சுந்த‌ர் உங்க‌ளுக்கு இதைச் சொல்ல‌முடியுமா என்ற‌ த‌ய‌க்க‌மிருக்கிற‌து. இய‌ன்ற‌வ‌ரை பொட்'டீ'க‌டையின் இர‌ண்டாம் பின்னூட்ட‌த்தில் கூறியிருப்ப‌தைக் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌த்திற்கொள்ளவும்.

அது சரி said...

நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது சுந்தர்...உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை......நடந்து இருப்பது ஏதோ போதையில் நடந்தது போல தெரியவில்லை...ஏதோ திட்டமிட்டு வன்மத்துடன் நடந்தது போல இருக்கிறது...

சக பதிவர் என்பதை விடுங்கள்...மற்றொரு மனிதரை கருத்து வேறுபாடு என்பதற்காக இப்படிக் கூட தாக்குவார்களா?? தனி மனித தாக்குதல் லிட்ரல்லி தாக்குதலாகி விட்டது...

சாரு நிவேதிதா சில முறை எழுதியிருக்கிறார்...சிறு பத்திரிக்கை நண்பர்களின் சந்திப்பு அடிதடியில் முடியும் அபாயம் உண்டு என்று...பதிவு எழுதுவதற்குமா இப்படி குத்து??

கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்க் கொள்ளும் உங்களை அந்த ரீதியில் எதிர்க்க முடியாததால் இப்படி செய்து விட்டாரோ என்று தோன்றுகிறது...

விரைவில் நலம் பெறுங்கள் சுந்தர்!

அது சரி said...

பலரும் சொல்லி இருப்பது போல இது போதையில் நடந்தது போல தெரியவில்லை...முன் கூட்டியே தீர்மானம் செய்து, அதை நிறைவேற்ற சாக்காக போதை ஏற்றியது போல தெரிகிறது...படிக்கும் எனக்கே நம்பமுடியாத அதிர்ச்சியாக இருக்கும் போது, விக்டிமான உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருந்திருக்க கூடும்!

Anonymous said...

//சில பதிவர்களின் பின்னூட்டங்கள் கவலையளிக்கக் கூடியதாய் இருக்கிறது. ரோசாவினுடைய இந்த மிஸ் அட்வெண்ட்ச்சர் போதையில் ஏற்பட்ட ஒன்றாகவே இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், பிறிதொரு நாளில் மீண்டும் சரக்கடித்தே கை குலுக்கிச் செல்லக் கூடியதே.//

யோவ் பொட்டிக்கட நீ என்ன அகில உலக சமாதான தூதுவரா

//சொறிந்துவிடும் கூட்டத்திடம் மட்டும் உஷாராக இருங்க ஜ்யோவ்.//

அடிச்சவன் கூட கைக்குலுக்கிட்டு போகனும, சொறியவங்க கூட உஷாரா இருக்கனுமா, நல்லா இருக்குயா

Anonymous said...

வருத்தத்திற்குரிய நிகழ்ச்சி. வலியை அனுபவிக்கும் உங்களுக்கும், வலியை ஏற்படுத்துமளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளான ரோசாவிற்கும் உளப்பூர்வமான அனுதாபங்கள். இருவரும் தத்தம் வலிகளிலிருந்து விரைவில் மீளவேண்டுமென விழைகிறேன்.

நீங்கள், உங்கள் நண்பர்களும் இணையத்தில் எழுதும்போது சற்று நிதானமாக எழுத முயல வேண்டும். தான்தோன்றித் தனமாக தனி நபர்த் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். ரோசாவிற்கு உங்களை அடிக்க எப்படி உரிமை இல்லையோ அதுமாதிரி அவர் மீது எழுத்து வன்முறை செலுத்த உங்களுக்கும் உரிமை இல்லை. இது நீங்கள் எழுதியது:

//அடிப்படையில் ரோசா திருகலான மூளை கொண்டவர். எல்லாவற்றையும் திருகலாகவே புரிந்து கொள்வார். அப்படியிருப்பதால் ஒன்றுமில்லை - ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் மேல் பாய்ந்து பிடுங்குகிறார். அப்போது நாமும் கல்லால் அடித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

கொழுப்பு என்று வெறுமனே சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக் கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு. அதை அவரை நேரில் பார்க்கும்போது சொல்ல வேண்டும் என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது.//

கல்லால் அடிப்பது என்றால் என்ன? அதுவும் உங்களுக்குள் இருந்த வன்முறையின் வெளிப்பாடு தானே. நேரில் பாக்கும்போது அவருடைய விசேஷமான கொழுப்பைப் பற்றி சொல்ல திட்டமிட்டிருன்தீர்கள். சொன்னீர்களா? இதெல்லாம் வன்முறை இல்லையா? செயலளவில் இல்லையாயினும், மனதளவில் வன்முறையில்லையா?

அவருக்கு கோபம் வந்த மாதிரி உங்களுக்கும் கோபம் வருகிறது.
அதை செயல்படுத்த முடியாமைக்குக் காரணம் ரோசாவை விட நீங்கள் மேலானவராக இருக்க வேண்டுமென்பதில்லை. கோழைத்தனம் கூட காரணமாக இருக்கலாம்.

இதற்குக் காரணமாக நீங்கள் ரோசாவின் ட்விட்டர்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். ரோசா அப்படி எழுதக் காரணமாக இருந்தது சிவராமனின் இன்னொரு கடைந்தெடுத்த தனிமனிதத் தாக்குதல். இப்படி படிப்படியாக வளர்ந்து தான் ரோசா உங்களை குத்திய வரை நடந்திருக்கிறது. அறிவுஜீவி, அறச்சீற்றம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு கண்டமேனிக்கு தனிமனித தாக்குதல் நடத்துவதை அனைவரும் கட்டுப்படுத்துங்கள். இந்த அறிவுஜீவி சண்டைகள் டோண்டு/போலி டோண்டு சண்டைகளை விட கேவலமாக இருக்கின்றன. படிப்பவர்களுக்கு காலணாவுக்கு பிரயோசனமில்லாதவை.

Anonymous said...

பதிவுலக புனிதங்கள் அதிர்ச்சிகளையும், கண்டனங்களையும் வாரி இறைத்து முடிந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். வாரும், எதிரிலிருக்கும் அந்த ஆசனத்தில் ஒருக்களித்தே அமரும்!

நீங்கள் நினைத்தது போலயே யாரோ ஒருவருக்காக ரோசாவை தனிமனிதத் தாக்குதலால் சின்னாபின்னமாக்கிய உங்களுடைய முந்தைய ”நான் வளர்கிறேனே மம்மி - பார்ட் 2” http://jyovramsundar.blogspot.com/2009/10/2.html பதிவில் உள்ள வன்மத்தை கண்டிக்காத துப்புகெட்ட ஜென்மங்கள் உங்கள் மூலமாக தம் அரிப்பை தீர்த்து கொண்டுவிட்டார்கள்! உங்கள் உயர் பண்பையும் தியாகத்திருவுருவையும் அப்பதிவர்கள் படம் வைத்து பூஜையிடாத்து ஒன்றுதான் பாக்கி. புனிதப்பசுவுக்கு மங்கள ஆரத்தியும், இன்று அரிந்த பசும்புல்லும், புண்ணாக்குடன் கழுநீரும், ஆகா விருந்து செம்மையோ செம்மை! ஏதோ ஒரு பதிவர் சிறுகதை பட்டறை முடிந்ததில் இருந்து யாரும் புனைவே எழுதவில்லை என்று வருந்தியிருந்தார். இன்று உங்கள் ’மொலிவிளாட்டால்’ ரோசாவை ஏதோ அரக்கனாக புனைந்து அந்த பதிவர் வயிற்றில் பாலையும் அரை போத்தல் (பாட்டல்னு சொல்லக்கூடாதாமே?) வைனையும் அவர் காசிலேயே வாங்கி ஊற்றிவிட்டீர். ஒரு குத்துதானா ரோசா?

உண்மையில் ரோசாவின் குடும்பத்தினரையும் சேர்த்து அவரின் தனி வாழ்க்கையை சிதைக்குமாறு நீங்கள் எழுதிய அந்த பதிவிற்கு ரோசா ஒரு குத்துடன் நிறுத்திவிட்டார் என்பதே அகிம்சைதான்! ஒரு குத்துதானா ரோசா?

அடுத்த முறை, உங்களை போல சகபதிவரின் குடும்பத்தை கேள்வியாக்கி, தனி மனித துவேஷம் செய்யும் எல்லோருக்கும் கிடைத்த இந்த அடையாள குத்து நினைவில் கொள்வார்கள்! கொள்ளவேண்டும்!!

உம் அரிப்பை தீர்க்க அவர் குடும்பத்தினரை ஏனைய்யா இழுக்கிறீர்? உமக்கு அவர்கள் மேல் என்ன புகைச்சல்? அவருடைய ”double bedroom apartment”, ”மழலைச் செல்வத்தின் பாபா பிளாக்‌ஷீப்”, ”அம்மா / அப்பா சந்தோஷப்படுவார்கள், அக்கா / மாமா கண்களைக் கசக்குவார்கள்” இதெல்லாம் அசிங்கமாய் தெரியவில்லை உமக்கு? ”கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு” இதில் இல்லாத வெறியா அவர் குத்தில்? ஒரு குத்துதானா ரோசா?

எதிரிகளிடமே எத்தனை நாட்களுக்கு ஆயுதங்களை தேர்ந்தெடுக்கும் உரிமைகளை தருவது? சில சமயம் நரித்தனமான எதிரியை எதிர்க்க நாமே ஆயுதங்களை தேர்ந்தெடுக்கவேண்டியுள்ளது, எதிரி புனிதப்பசுவாகவே ஒழிந்து போகட்டும்.
இத்தனைக்கு ஒரே குத்துதானா ரோசா?

(மப்பு தெளிந்ததும் தனியாக உக்கார்ந்து உம் முந்தைய பதிவை நீரே படியும், சுந்தரு!)

செல்வநாயகி said...

இந்த நிகழ்வு கவலையளிக்கிறது.

T.V.Radhakrishnan said...

மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது

ஜ்யோவ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

சின்ன அம்மிணி said...

அதிர்ச்சியாக இருக்கிறது. சீக்கிரம் குணமடைவீர்கள்.

Anonymous said...

அடி வாங்கினவரும் குடிச்சிருக்கார்.. அடிச்சவரோ லேசா குடிச்சிருந்தாரு (முன் கூட்டியே திட்டம் போட்டபடி).. உதவிக்கு வந்த நண்பர்களும் குடிச்சிருந்தாங்க.. மொத்தத்தில குடிகார கும்பலுக்குள் நடந்த அடிதடி என எடுத்துக் கொள்ளலாமா?

ரோசா திட்டமிட்டபடி சுந்தருக்கு நிறைய ஊத்திக் கொடுத்து அடித்திருக்கிறார். இதுக்குத்தான் குடிக்காதிங்க குடிக்காதீங்கன்னு பலபேரு புலம்புறாங்க யாருமே காதில போட்டுக்கிறது இல்லை!

விஜயராஜா said...

ரோசா செயதது கேவலமான, மிகக் கேவலமான செயல்.

அதைக் கண்டிக்காமல்,அதற்கு இது காரணமாக இருக்கலாம், அது காரணமாக இருக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கமெண்ட் அடிப்பது அதைவிட மலத்தை தின்றக் கேவலத்திற்கு சமம்.

இந்தமாதி மிருக சிந்தனை கொண்ட பதிவர்களை தண்டிக்காமல் விடுவது அனைத்தையும் விடக் கேவலமான விசயம்.

சுந்தர் நீங்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

உங்க ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்

மோகன் கந்தசாமி said...

டிஸ்சார்ஜ் ஆயிட்டீங்களா, மாமு?!!

இராகவன் நைஜிரியா said...

மிக மிக அதிர்ச்சியாக இருக்கின்றது நண்பரே..

தாக்குதல் கண்டனத்துகுரியது.

உடல் நலம் விரைவில் குணம் பெற ஆண்டவனை வேண்டுகின்றேன்.

திரு/thiru said...

அன்பின் சுந்தர்,

பின்னூட்ட பிதாக்களின் உசுப்பேற்றல்களை தவிர்த்து விட்டு, உங்கள் உடல் நலனையும், மனநலத்தையும் கவனியுங்கள். பொடீக்கடைக்காரர் குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ரோசாவின் வன்செயலை ஆதரிப்பதாகவோ, அங்கீகரிப்பதாகவோ நினைக்கமாட்டீர்களென்று நம்புகிறேன்.

விரைவில் நலம் பெறுங்கள்.

Anonymous said...

ஏன் இந்த அனானி பின்னூட்டங்கள வெளியிட மாட்டன் றீங்க

Anonymous said...

ரொம்ப அருமையான பதிவு
நேர்லயே பாக்குறா மாதிரி இருந்தது.
ஓட்டு போட்டுட்டேன் தம்பி.

ரவுத்திரம் பழகு கண்ணா
துண்ணுறது தயிர்சாதம்னாலும் மன்சில வெறி இருந்தா அவன் மூக்கையெ கடிச்சி துப்பியிருக்கலாம்.

மானத்தை வாங்கிட்ட.
இனியாவது பொண்டாட்டியை கவனி

ராவணன் said...

//எல்லாரைப் பற்றியும் அதிரடித் தீர்ப்பெழுதும் அதிகாரத்தை ரோசாவிற்குக் கொடுத்தது யார்? அவரின் பிரச்சனைதான் என்ன?

அடிப்படையில் ரோசா திருகலான மூளை கொண்டவர். எல்லாவற்றையும் திருகலாகவே புரிந்து கொள்வார். அப்படியிருப்பதால் ஒன்றுமில்லை - ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் மேல் பாய்ந்து பிடுங்குகிறார். அப்போது நாமும் கல்லால் அடித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

கொழுப்பு என்று வெறுமனே சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக் கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு. அதை அவரை நேரில் பார்க்கும்போது சொல்ல வேண்டும் என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது.//


இது நீங்கள் எழுதியது.இங்கே
http://jyovramsundar.blogspot.com/2009/10/2.html

இதுதான் அவரை இதுபோல் செய்யத் தூண்டியிருக்கலாம்.

அப்பாவி முரு said...

எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

:(


அதே நேரம் அடுத்த தாக்குதலுக்கான நோக்கம் இந்த இடுகையில் ஆரம்பித்துவிடக் கூடாதெனவும் விரும்புகிறேன்

கோவி.கண்ணன் said...

ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ரோசா ஒரு ரவுடியாக செயல்பட்டு வஞ்சகமாக வரவழைத்து சுந்தரைத் தாக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.

வலையுலகம் வழியாக கிடைத்த நட்புகளில் இது போன்ற நிகழ்வெல்லாம் கூட நடக்கலாம் என்பதன் தொடக்கமாக இது அமைந்துவிட்டு இருக்கிறது என்பதை நினைக்கையில் வலையுலகத்திலும் ஒரு மோசமான செயல்பாட்டை ரோசா தொடங்கி வைத்திருக்கிறார் என்பது ஆறாத ஒரு வடுவாக அமைந்துவிட்டதற்கு மேல் இதில் கண்டனம் தெரிவிப்பது அதை மாற்றிவிடுமா என்பது தெரியவில்லை

சுந்தருக்கு இப்படி நடந்தது மிக வருத்தமாக இருக்கிறது.

நிகழ்காலத்தில்... said...

வருந்துகிறேன் சுந்தர்ஜி

நலமடைய பிரார்த்திகிறேன்.


நட்புகளின் தரத்தை எடை போட்டு பழக வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுவிட்டது
:((

Anonymous said...

Where is that dog now? Complain him to Police . He has to go thro' like Moorthy .

தண்டோரா ...... said...

நலம் பெற பிரார்த்திக்கிறேன்

இரவுப்பறவை said...

வன்முறை எங்கு நடந்தாலும் கண்டனத்துக்குரியது..
விரைவில் நலம் பெற என் வாழ்த்துக்கள்.. :-(

ஜீவன் said...

;;(

ராஜா | KVR said...

நர்சிம்மின் பதிவைப் படித்தபோது ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்த சம்பவமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், உங்கள் பதிவைப் படிக்கும்போது இது திட்டமிட்டு நடந்ததாகத் தெரிகிறது. எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். உடல்நிலை பூரண குணமடையப் பிரார்த்தனைகள்

முத்துகுமரன் said...

சுந்தர் வருந்தத்தக்க நிகழ்வு. சற்று ஓய்வும் மன அமைதியுமே தற்போதைய தேவை. ரோசா வசந்தின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள்

அண்ணாகண்ணன் said...

இந்த வன்முறையைக் கண்டிக்கிறேன். ஆயினும் அடிபட்டவரை மருத்துவமனையில் சேர்த்த குறைந்தபட்ச பண்பினை மெச்சுகிறேன்.

நேரில் வரவழைத்து, ரத்தம் வர அடிக்கிற வன்முறைக்குச் சற்றும் குறையாத வார்த்தை வன்முறைகளையும் இணைய வெளியில் ஆங்காங்கே காண்கிறோம். அன்பும் மனிதநேயமும் மிளிரும் அழகிய உலகாக, இணைய வெளியைக் கட்டமைக்கும் பொறுப்பு, நம் அனைவருக்கும் உண்டு.

Raghavan said...

hmm.. unnai pol oruvan matter'a vechu 3 masam ottiteenga ... ippa villu varra varaikkun indha visayatha vechu ella pathivargalum kalla katta poraanga ...
already NARSIM posted one post on this .. :)

வெங்கிராஜா | Venkiraja said...

புனைவு என்ற தொனியில் வாசிக்க ஆரம்பித்தது. ஏதேதோ வார்த்தைகள் தோன்றுகின்றன. உடம்பை பார்த்துக்கங்க சார்.

மகேஷ் said...

Its shocking to hear. :(


Pls Get Well Soon.

முரளிகுமார் பத்மநாபன் said...

சுந்தர் ஜீ, நேற்றுதான் படித்தேன். மிகவும் கஸ்டமாக இருக்கிறது. எது நியாயம், அநியாயம் என்று சொல்லவரவில்லை. ஆனால் மூக்கு நுனி வரை மட்டுமே உள்ள உரிமையை அதற்கு மீறி பயன்படுத்துவது யாராக இருந்தாலும் தவறுதான். இதற்காக சகபதிவர் என்றமுறையில் மிகவும் வருந்துகிறேன்.

ஜோ/Joe said...

வலைப்பதிவர்கள் நட்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் ,வலைக்கு வெளியே அளவுக்கு மீறிய அளவில் சதா இவரைப் பற்றி அவரிடம் ,அவரைப் பற்றி இவரிடம் விவாதம் ,தங்கள் ரேஞ்சில் உள்ளவர்கள் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு ரேஞ்சுக்கேத்த ஒரு குழு ,விவாதம் இவையெல்லாம் ஒரு எல்லை தாண்டி செல்லும் போது ஏற்படும் விபரீதம் இதில் போய் முடிகிறது.

எந்த கோணத்தில் வைத்து பார்த்தாலும் இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு குத்துதானா ரோசா என்று வருத்தப்பட்டிருக்கும் அனானிக்கு... உங்கள் ஆசை வேறு மாதிரி இருந்தாலும், ஒரு குத்துதான் :(

என்னுடைய பதிவை மட்டும் குறிப்பிட்டு வசதியாக அதற்கு முந்தைய ரோசாவின் ட்விட்டர்களை மறந்து விட்டீர்களே...

நர்சிம் வயிற்றில் வைனை அதுவும் ரோசாவின் செலவில் வார்த்துவிட்டேனா... இம்மாதிரி உளற்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல...

நரித்தனமான தாக்குதல் சரியென்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியுள்ள விஷயங்களிலிருந்து நீங்கள் யார் என்று தெரிகிறது - இதே மாதிரி யாரும் உங்களைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுமே!

யாத்ரா said...

ரோசாவின் துரோகம் பற்றி பேசினா என் மொழி தடம் புரண்டு விடக் கூடும் என்பதால் அவைகளை தவிர்க்கிறேன்.

உங்களுக்கு டயாபடீஸ் வேற, ரொம்ப கஷ்டமா இருக்கு, காயம் சீக்கரமா ஆறணுமே, ஏற்கனவே கால் கொப்பளங்கள்

அந்த ரோசாவோட ஈனச்செயலை நினைக்க நினைக்க என் வார்த்தைகள் தடம் புரளுது, அது வேண்டாம்.

take care, get well soon

Anonymous said...

ரோசா வசந்திடம் இப்படி குத்து வாங்கிவிட்டு இணையத்தில் இப்படி பரிதாபத்தைச் சம்பாதிக்க வேண்டுமா ?

பேசாமல் அந்தாளை போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளவேண்டியது தானே ?

போலீசிடம் ரோசா உங்க பெர்சனல் விஷயத்தைப் பற்றிப் போட்டுக்கொடுத்துவிடுவார் என்று பயமா ?

Karthikeyan G said...

Sir,this is too disturbing.. Pls take care of yourself.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி
http://www.chittoortigerckbabu.blogspot.com

Anonymous said...

சுந்தர் -

அதே ஒரு ஒருகுத்துதானா அனானிதான்! ரோசா தனிநபர்த்தாக்குதல் செய்திருந்தாலும் இதுவரை உம் குடும்பத்தைப் பற்றியோ, அல்லது நீர் கொடிதூக்கும் உம் வைன் ஷாப் நண்பர்களின் குடும்பத்தைப்பற்றியோ எங்கும் இயம்பவில்லை என்றே நினைக்கிறேன்.

உம்ம ப்ரச்சனைத்தான் என்ன? ரோசா ஜப்பான் சென்று வந்ததா (பல முறை இதையே சொல்லியிருக்கிறீர்கள்)? அவர் இரண்டு பெட்ரூம் ப்ளாட்டில் தன் மழலை செல்வங்களின் பாபாவை ரசிப்பதிலா? ஏதோ லௌகிக வாழ்வையே துரந்த போதிமரத்தடியில் இலக்கியம் வளர்ப்பதாக காட்டிக்கொள்ளும் உம் வெண்ணை வாதத்த்தின் சாரம்தான் என்ன? ஏதோ பெண்குறியையும் ஆபாசத்தையும் எழுதுவதுதான் இலக்கியம் என்று நினைக்கும் உம் மேல்தடவல் எழுத்துக்களை ரசிக்கும் இலக்கியம் ஏதோ குந்தலவராலி என்று நினைத்து ஜால்ரா போடும் விசிலடிச்சான்களுக்குமுன் முழு கால்சட்டையின் மேல் அரை நிஜார் போடும் சூப்பரமேனாக உங்களை கட்டமைத்துக்கொள்ளும் கீழான அரசியல்தான் என்ன? நான் எந்த பதிவர் பெயரையும் குறிப்பிடவில்லை, நீங்களாய் ஒருவர் பெயரை இழுத்து, இனி அடுத்த பதிவில் அவர் மப்பில தன் படுக்கையை தமக்கையரோடு பகிரவில்லை என்று செம்மொழி இயம்புவார்! கேவலம் உம்மை சுற்றி உள்ளவரும் கீழானவராக மாற்றியும் விட்டீரே? பாருங்கள் உங்களுடன் சேர்ந்து எனக்கும் தனிமனித தாக்குதல் வந்துவிட்டது. ச்சே... கசமாலம் இது, என்னை விடுவித்து கொள்கிறேன்!

என் சாரம் இதுதான், நீர் எழுத்தில் ரோசாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் செய்த அநீதிக்கு ஒரு குத்து குறைச்சலே, இனியாவது மற்றவர் குடும்பத்து அறைகளில் அதிகாரமின்றி நுழையாதீர். இத்தனை சொல்லியும் இன்னும் விளங்காதது போலவே இன்னும் நீர் வேடம்போட்டால், அடுக்க எதுவுமில்லை! ரோசாவுக்கு நான் கேட்ட ‘ஒரு குத்துதானா’ எங்காவது தொக்கி நிற்கட்டும்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இந்த சம்பவத்துக்கு என் மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

கிரி said...

:-(

Anonymous said...

அடக்கடவுளே இங்குமா உங்களுடைய அரிப்பெடுத்த அரசியல்.பின்னூட்டங்களா அவை :(.

Anonymous said...

ரோசாவசந்த் செய்தது தவறு.கருத்து வேறுபாடுகளை இப்படி தீர்த்துக் கொள்ள முடியுமா என்ன :( உங்களுக்கிடையே என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியாது.உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதில்லை.
இந்த தகராறை இன்னும் வளர்க்க சிலர் நினைக்கலாம்.அதற்கு இடம்தர வேண்டாம். இனி அவருடன் பழகுவது குறித்து நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

உடல் நலம் தேறி,முழுக்குணம்
அடையும் வரை வலைப்பதிவில்
இதில் குளிர்காயும், குழம்பிய
குட்டையில் மீன் பிடிக்கும்
பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம். நீங்கள் ஏன் ஒரு வாரம்
வலைப்பதிவிலிருந்து ஒய்வெடுக்கக்
கூடாது.

கார்த்திக் said...

Get well soon thala

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@ பல குத்துக்கு ஆசைப்படும் ஒரு குத்து அனானிக்கு,

திரும்பத் திரும்ப அவர் குடும்பத்தை இழுத்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள் - அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றித் தவறாக எழுதுவதைத்தான் இழுப்பது என்று சொல்வார்கள். நீங்கள் குற்றம் கண்டுபிடிக்க வழிதெரியாமல் எதையோ சொல்கிறீர்கள்.

அப்புறம், நர்சிம் பற்றி உங்களுக்கு நிச்சயம் கோபம் இருக்கும் என்று தெரியும். ஆனால் அதை இங்கு வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

திட்டமிட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ எப்படி இருந்தபோதும் ரோசா உங்களைத் தாக்கியது என்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம்தான். இனி அது யாருக்கும் நிகழவே கூடாத ஒன்று.

பா.ராஜாராம் said...

என்ன சொல்லட்டும் சுந்தரா...இது தெரியாமல் நான் வேறு உன்னை தொந்திரவு செய்து விட்டேன்.உடல் நலம் தேறு,சுந்தரா.பிறகு பேசலாமே.பின்னூட்டங்களுக்கான பதிலை கூட.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தி சுந்தர்!

உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்!

ரோசா வசந்துக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
இது சரியான அனுகுமுறை இல்லை.
கருத்து மோதல் இருக்கலாம்.
வெறுத்து மோதல் கூடாது.
இந்த நிகழ்வு அவருக்கு படிப்பினையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

ஜே கே | J K said...

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

லதானந்த் said...

சுந்தர்!
சரியான முறையில் சிகிச்சை பெற்று விரைவில் குணமாக வாழ்த்துக்கள்

Anonymous said...

விரைவில் குணமாக வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

என்ன சொல்றதுன்னே தெரியல சார்.. அதிர்ச்சியா இருக்கு. சும்மாவே சில முன்னனி எழுத்தாளர்களுக்கு வலைப்பதிவர்கள், பின்னூட்டம் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. இனி 'அடிச்சிட்டு சாகுறானுங்கனு' எழுதுவாங்க. வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கொடுத்ததுபோல ஆயிருச்சி இந்த நிகழ்ச்சி.

விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நீங்களும், நம் பதிவுலகமும்.

-/சுடலை மாடன்/- said...

வழக்கமாகப் பதிவர்களுக்கிடையேயான பிரச்னைகளைப் பற்றி நேரமின்மையால் நான் வாசிப்பது கூட இல்லை. பதிவுகளைப் படிக்க ஆரம்பித்த காலத்தில், மிகக்குறைந்த பதிவுகளே இருந்த அன்றைய சூழலில் இதுபோன்ற சர்ச்சைகளில் நானே ஒருமுறை சிக்கியிருக்கிறேன். பதிவுலகத்தைப் பற்றிய என்னுடைய அன்றைய முதிர்ச்சியின்மையும் கூட அதற்கு ஒரு காரணம். ஆனால் விரைவிலேயே நம்மைப் பற்றிக் கூட என்னத்தையும் எழுதிவிட்டுப் போகட்டும் என்று கடக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால் ரோசா வசந்தின் நடிப்பில்லாத எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையிலும், அவரை இரண்டு முறைகள் நேரில் சந்தித்தவன் என்ற முறையிலும் இது குறித்து கருத்தெழுதத் தோன்றியது.

ரோசா வசந்த் திடுதிப்பென்று கொஞ்சம் அளவுக்கதிகமாக கோபம் கொண்டு விவாதங்களில் நடந்து கொள்வார். இரவி ஸ்ரீநிவாஸ், சுரேஷ் கண்ணன் போன்றவர்களிடம் தொடர்ந்து சில நேரங்களில் கோபப் படுவதைக் கண்டிருக்கிறேன் (அவர்கள் எழுதுவது சில நேரங்களில் எரிச்சல் உண்டு பண்ணுவதைத் தவிர்க்க முடியாதென்றாலும் கூட). ஆனாலும் ரோசா இப்படி வன்முறையாக நடந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. இது மிகக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. உங்களுக்கு ஏற்பட்ட வலியும், தனிப்பட்ட வேதனையும் நிச்சயம் அனுபவித்தால்தான் தெரியும்.

ஆனால் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் கொஞ்சம் அதிகப்படியாக சென்று ரோசா வசந்தை மிக மோசமான முறையில் பதிவுலகத்தின் வில்லனாக சித்தரித்து அவரை இத்துடன் வாயடைத்து விடத் துடிக்கிறதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலாக காவல்துறையிடம் உண்மையைச் சொல்லி அவரைப் பிடித்துக் கொடுத்திருக்கலாம்.

தவறு செய்வது மனித இயல்பு. அவ்ருடைய அளவு கடந்த ஆத்திரப்படும் குணத்தால் இந்தத் தவறைச் செய்து விட்டார். அவருடைய முட்டாள்தனத்தை ஒரு நிமிடத்திலேயே உணர்ந்து/வேதனைப்பட்டு உங்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமா அதைச் செய்ய முயற்சித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெறுமனே ஒரு செய்தியாகச் சொல்லி அவர் ஆத்திரத்தில் செய்த வன்முறையை மன்னிக்கிறேன் என்று விட்டிருக்கலாம். மற்றவர்களும் ரோசாவசந்த் இப்படி ஏடாகூடமாக கோபப்படுபவர் என்று புரிந்து கொள்வார்கள்.

அவரைப் பற்றி நீங்கள் எழுதிய முந்தைய தனிப்பட்ட தாக்குதல் பதிவு இந்தக் கோபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரோசா வசந்த் கோபத்தைக் கட்டுப் படுத்த சில மனப்பயிற்சிகளை எடுத்துக் கொள்வது நல்லது. விவாதமென்று வரும்பொழுது தனிப்பட்ட தாக்குதல்களும் நிகழக் கூடிய வாய்ப்புண்டு. அதற்காக இப்படிக் கோபப்பட்டு அடி உதை என்று நடந்து கொள்வது நீங்கள் சொல்லவரும் எத்தனையோ நேர்மையான கருத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். அதை இந்தப் பதிவும் சில பின்னூட்டங்களும் சிறப்பாகச் செய்கின்றன.

இந்த ஒரு பின்னூட்டம்தான் இது தொடர்பாக நான் எழுதும் ஒரே பின்னூட்டம். என்மேல் வன்மம் கொண்ட சில அனானிகள் நான் எழுதியதாக வேறு எங்காவது எழுதக் கூடும் என்பதால் இந்தக் குறிப்பு.

நன்றி - சொ.சங்கரபாண்டி

ரவிச்சந்திரன் said...

அதிர்ச்சி + வருத்தம்.

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@ சொ சங்கர பாண்டி,

மறுபடியும் சொன்னதையே சொல்ல நேரிடுகிறது - நேற்று காலையிலேயே விஷயம் திரிக்கப்பட்டதால் நான் எழுத நேர்ந்ததே தவிர, அவரை வாயடைக்கச் செய்ய அல்ல.

விவாதத்தில் கோபப்படுவார் அது இதென்று திரும்பத் திரும்பப் பலரும் சொல்கிறார்கள் - ஆனால் அப்படி heated arguements நடக்கவேயில்லை என்கிறேன்!. அப்படிச் சூடான விவாதம் நடந்திருந்தால், அவர் அடிப்பதற்குத் தோதாக முகத்தைக் காட்டுமளவிற்கா ஒருவன் முட்டாளாக இருப்பான்? உண்மையில் அவர் அடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத போது அடித்தார் என்பதைத்தானே எழுதியிருக்கிறேன்.

எல்லோருக்கும் - ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப எழுதுவதற்கு எனக்கும் ஆயாசமாய் இருக்கிறது. இத்துடன் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். நன்றி.

ச.முத்துவேல் said...

சுந்தர்ஜீ
நண்பர்களின் தொலைபேசி தகவல்மூலமே செய்தி அறிந்தேன்.ரோசா வசந்த் பற்றி இன்றுவரை எனக்குத்தெரியவில்லை.அவர் தரப்பு என்ன என்பது பற்றியும் எனக்குத்தெரியவில்லை. எது எப்படியிருப்பினும் அவரின் செயலை நியாயப்படுத்தவே முடியாது. நரித்தனம். நம்பிக்கைத் துரோகம். தாக்கியிருந்தாலும் கோழைத்தனம்.வலைப்பூ எழுதுபவர்கள் ஒரு இயக்கம்போல திரண்டு பல நல்ல காரியங்களைச் செய்துகொண்டுவருகிறார்கள்.ஆனால்,இந்நிகழ்வு மிக மோசமான ,குரூரமான செயல்.அவருக்கு என் கண்டனங்கள்.

மங்களூர் சிவா said...

தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் கேபிள் சங்கர் பதிவு மூலமாக மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்

மிக்க வருந்தமான விஷயம்.

விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மணியன் said...

மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வு ;( விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

வருண் said...

சுந்தர்,

தாமதத்திற்கு மன்னிச்சுக்கோங்க, நான் இப்போத்தான் இதை வாசிச்சேன். கற்பனையே பண்ணவில்லை இப்படியெல்லாம் பதிவர்கள் நடந்துக்கு-வாங்க என்று. :(

எனக்கு சென்னைப்பதிவர்கள், அவர்களில் நண்பர்கள் யார், கருத்து எதிரிகள் யார் யார் போன்றவைகள் எல்லாம் தெரியாது. உங்க எல்லோருமே ஒரே "குடும்பம்", ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வீர்கள் வாதிட்டுக்கொள்வீர்கள்னுதான் நினைத்தேன்.

நீங்கள் சொல்லும் நபரை நான் இதுவரை பதிவுலகில் "சந்தித்ததில்லை".

கருத்துச்சண்டை இப்படி எல்லாம் ஆகுமா?

உங்கள் உடம்பு குணமாவது ஒருபுறமிருக்க உங்கள் கருத்தை முன்புபோல் மறுபடியும் தொடரனும் என்று வலியுறுத்திக்கேட்டுக்கிறேன்.

இந்த மாதிரி ஒரு இன்சிடெண்ட் ஆல் உங்க கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் உங்கள் கருத்துச்சுதந்திரத்துடன் தொடருங்கள்.

இந்தத் தவறை உங்களால் மன்னிக்கமுடியுமென்றால் மன்னியுங்கள். இல்லையென்றால் சட்டப்படி அனுகுங்கள். இப்படி போய் உங்களை அழைத்து, ஒண்ணா சாப்பிட்டு ஒண்ணா இருந்து வந்த பிறகு கூடவே ஒரு சந்தில் வந்த பிறகு கைகலப்பு செய்த நபரை முதல் முறை கேள்விப்படுறேன். மனமருத்துவம் அவருக்கு தேவையோ?

ரௌத்ரன் said...

சற்று முன் தான் ராஜாராம் அவர்கள் கூற விஷயம் தெரிந்தது.என்ன சொல்வதென்றே தெரியவில்லை.மிகவும் வருத்தமாகி விட்டது.

சட்டென்று மீள முடியாதுதான்.இந்த பிளாக் எழவையெல்லாம் மறந்து கொஞ்சம் ஓய்வெடுங்கள்.

சரவணகார்த்திகேயன் சி. said...

get will soon, mr.sundar..

சிவகுமார் said...

தற்செயலாக உங்கள் இடுகைக்கு வந்தேன்.இது எனக்கு புதுசு .உங்களுக்கு நடந்ததை எண்ணி வருந்துகிறேன் .ஒரு சந்தேகம் உங்களை பலர் சுந்தர்ஜி என்று அழைக்கிறார்களே! நீங்கள் வட இந்தியரா?

KISHORE said...

என்ன சொல்வது.. வருந்த கூடிய நிகழ்வு.. நிச்சயம் கண்டனத்திற்கு உரியது.. அந்த நேரத்திலயும் உங்களுக்கு உதவ வந்த நண்பர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள்..
விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Anonymous said...

I am really sorry about what happened .what he did was wrong. There is no doubt about it,but it looks like a combination of alcohol intoxication and arguments.There is always two sides to a story .You said you drank a lot ,there is a possiblity you might have forgotten what actually happened on that moment.
I am not condoning his act ,but only giving the benefit of the doubt.

Achilles/அக்கிலீஸ் said...

சீக்கிரமே குனமாக என் பிராத்தனைகள் கண்டிப்பாக உண்டு ஜ்யோவ்ராம் அண்ணா. ரோசாவசந்த்ட்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. :(

தராசு said...

சுந்தர்ஜி,

உங்களுக்கு போன் செய்ய வேண்டும் என பல முறை நினைக்கிறேன். ஆனால் உடலளவில் எவ்வளவு களைப்புடனும், மற்றும் இந்த அனானிகளால் மனதளவில் எவ்வளவு அயர்ச்சியுடனும் இருப்பீர்கள் என்று நினைக்கும்பொழுது, அப்புறம் பேசலாம் என நினைத்து விடுகிறேன்.

விரைவில் உடல் நலம் தேறி வாருங்கள். நடந்ததை ஒரு கெட்ட கனவாக (அவ்வளவு எளிதில்லையாயினும்) மறக்க நாம் எல்லோரும் முயற்ச்சிப்போம்.

முகமூடி said...

உடல் வலி குறைந்திருக்கும். மன வலி குறைய காலமும் சிந்தையும் துணைபுரியட்டும். மன்னித்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் மறக்கவேண்டாம்.

நடிப்பின் மூலம் கட்டமைக்கப்படும் நிழல் பிம்பங்களை நிஜமாக நம்பும் வேடிக்கை மாந்தரை நக்கலடிக்கும் நாமே எழுத்தின் மூலம் பிம்பங்களை கட்டமைத்துக்கொள்கிறோம்.

ஒருவர் நிஜ வாழ்வில் கடைபிடிக்கும் நியதிகள் என்னவென்றே தெரியாமல் அவர்களின் வெற்று எழுத்துக்களை மட்டும் கொண்டு பின்னவீனத்துவ பதிவர், முற்போக்கு சிந்தனையாளர், பெண்ணியவாதி, சமூக சேவகர் என்று எத்தனை எத்தனை முகமூடிகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது இங்கே... தமிழினத்தலைவருக்கு ஒரு ஈழப்பிரச்னை, சாதி மறுப்பாள பதிவருக்கு ஒரு திருமண சம்பவம் என்று காலம் கடந்தாவது எல்லாருக்கும் என்றாவது ஒருநாள் முகமூடி கிழியும் நேரம் வரத்தான் செய்கிறது..

SanjaiGandhi said...

என்னக் கொடுமை இது?. கருத்து ரீதியில் நீங்கள் கடுமையானவர் என்றாலும் தனிப் பட்ட நட்பில் மிக சிறந்தவராச்சே. உங்கள கூடவா தாக்கத் தோன்றும். வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இனியும் இது போல் நடக்காமல் இருக்க அந்த பதிவர் மீது புகார் கொடுப்பது தான் சரியானது. இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டும் நேரமில்லை என கருதுகிறேன்.

விரைவில் இந்த கேவலமான நிகழ்வின் மனநிலையில் இருந்து மீள வேண்டுகிறேன். :(

shirdi.saidasan@gmail.com said...

who is this rosa vasanth.
what is his blog name

யோ வாய்ஸ் (யோகா) said...

சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

ரிஷபன் said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

காகிதப் புலிகளை தனிப்பட்ட வாழ்வில் இருந்து தூர நிறுத்துங்கள்.

நமது நாட்டில் எல்லாவற்றிலும் போலிகள் அதிகம்.

அநியாமாக அனானி கமென்ட் இடும் பதிவர்கள் கோழைகள் அவற்றை நிராகரியுங்கள்.

ஒட்டு மொத்த வலைப் பதிவர்களையும் சாடி விட்டீர்களே! என வருத்தப்பட்ட வர்களுக்காக :

தரக் கட்டுப்பாடு என்று ஒன்று இல்லா விட்டால் வெறும் குப்பைகள் தான் கொலுவில் இருக்கும். தொண்ணூறு சதவிகித பதிவர்கள் பதர்களே !!

ஏதோ இவர்கள் தான் இந்த நாட்டையே காப்பாற்ற பிறந்தவர்கள் போல் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் காட்டுக் கத்து கத்தும் குட்டிப் பேச்சாளர்களைப் போன்றவர்களே இந்தப் பதிவுலகில் அதிகம்.

கண்ட குப்பைகளை எழுத வேண்டியது அதற்கு நான்கு பின்னூட்ட வள்ளல்கள் ஆஹா ஓஹா என எதிர் சேவை செய்ததும், பெரிய சிந்தனையாளர் என்று தன்னைத் தானே நினைத்துக் கொள்ளவேண்டியது. சொற்பமான வலைத்தலங்களே படிக்கத்தக்கவை.

தான் கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என நினைக்கும் படித்த(?!) பாமரர்கள். அந்த நிரம்பிய கோப்பைகளிடம் பின்னூட்டத்திலோ நேரிலோ விவாதம் செய்வது நேர விரயமே !

அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் பற்றித் தெரியாதவரை அவர்களை ரயில் சிநேகிதர்களைப் போல் பாவிப்பதே நல்லது. மயக்க பிஸ்கட் தருபவர்கள் எல்லாம் வெகு நாகரிகமாக உடையணிந்து நளினமாக பேசுபவர்களாகவே இருப்பார்கள்.


என்னைப் பொறுத்தவரை வலைப் பதிவு ஒரு பொழுது போக்குக் களமாக மட்டும் பார்க்கப் படவேண்டும். அதில் அனாவசியமாக உணர்ச்சிவசப்படும் தமிழர்களை என்ன செய்ய ?

Anonymous said...

We are eagerly waiting to read your "Kama kathaikaL".

Write them as soon as possible. They give kick.

RESHSU said...

Get well soon Mr. Sundar

ஐயன் காளி said...

Get well soon. Come out of your emotional pain and physical pain.

Pot"tea" kadai said...

//முகமூடி கிழியும்//

athaane முகமூடி annane sollittarulla appo kizhinjirum thaan.

:))

Jyov, It's pretty shame that this post gone far off concern and became a kummi post.

Very Sad!

Pot"tea" kadai said...

ஜ்யோவ்,

உண்மையிலேயே இதையெல்லாம் எழுத வேண்டுமோ எனத்தோன்றினாலும் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உன்னைப்போல் ஒருவன் பார்த்துவிட்டு "காமன் மேன்" ஆகிட்டாங்களோன்னு பயமா இருக்கு. அப்புறம் எழுதற ஒரு 10000 சொச்ச தமிழ்பதிவர்களும் பாம் வெக்க கிளம்பிட்டாங்கன்னா தமிழ்நாட்டுல கொல்லிவேலிலலாம் பாம் வெக்கிற அளவுக்கு ஆகிடும்.

முதலின் அந்த சந்திப்பு இரு தனிநபர்களுக்கிடையேயான சந்திப்பு. வலைப்பதிவர் சந்திப்பில் சந்தித்து அதன் தொடர்ச்சியாக நீங்க தண்ணியடிச்சுட்டு அவர் உங்களைத் தாக்கவில்லை.அதனால காமன்மேன் வலைப்பதிவர்கள் அமைதி காக்கவும்.

அதீத உணர்ச்சியோ வன்மமோ இல்லை கோழைத்தனமோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். ரோசா உங்களைத் தாக்கியது தவறு. அதை அவரும் உணர்ந்திருப்பார் என்பது என் எண்ணம். இருவாரங்கள் கழித்து எழுதுகிறேன் என சொல்லியிருக்கிறார். பார்ப்போம்...

ஆனால் ரோசாவுக்காக பரிதாபமும், பச்சாதாபமும் அவரை குறி அறுக்கவும் காத்திருக்கும் அரை, குறை, நிறை, தலை, கால், வால் பதிவர்கள் எவரும் உங்கள் இருவரையுமே முழுவதுமாக அறிந்தவர்களாக இல்லை. நான் எவரைப் பற்றியும் மின்பிம்பம் கட்டி அதில் லேசர் ஷோவின் மூலம் யாரையும் பார்த்தது இல்லை அதனால் எவரும் அறிவுஜீவியும் இல்லை தடாலடியாக சுவிட் ஆஃப் செய்து இருட்டடிப்பு செய்வதற்கு.

ஆனாலும் உங்களது இந்தப் பதிவு ஒரு தகவல் பதிவாகத் தான் எனக்குப்பட்டது. நீங்களே கொலைவெறித் தாக்குதல் என எழுதியபின்னர் காமன்மேன் பதிவர்கள் ரோசா ஜ்யோவைக் கொலை செய்ய முயற்சி செய்து குற்றுயிரும் குலையிருமாய் தணடவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றார் என எழுதியிருப்பார்கள்...புனைவு,அதிபுனைவு என பல்வகை எழுத்துக்களில் கெட்டிக்காரர்கள் தமிழ்ப்பதிவர்கள்.

உங்கள் இருவருக்குமிடையேயான பிரச்சினை இருவருமே தீர்த்துக்கொள்வது தான் நன்று. நான் சமாதானத் தூதுவனெல்லாம் இல்லை ஜ்யோவ். ஒரு முறை தான் சந்தித்தேன் உங்கள் இருவரையும். இருவருமே மிக அன்பானவர்கள் தான் என்பது என் எண்ணம். அது சிறிதும் குறையவில்லை இந்நிமிடம் வரை.
மீண்டும் கலகலப்புடன் எழுதுங்கள் ஜ்யோவ்.

//உடல் வலி குறைந்திருக்கும். மன வலி குறைய காலமும் சிந்தையும் துணைபுரியட்டும். மன்னித்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் மறக்கவேண்டாம்.//

முகமூடியின் இந்தப் பின்னூட்டம் எனக்கு ஒரு தரகனின் பின்னூட்டம் போலவே இருக்கிறது. உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. உங்களது வளர்கிறேனே மம்மி 2ல் ரோசாவிற்கு ஒரு கொழுப்பு இருப்பதாக சொன்னீர்களே அது அப்பட்டமாகத் தெரிகிறது இப்பின்னூட்டத்தில். இம்மாதிரி ஆட்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உடல், மன வலிமையுடன் மீண்டும் கலகலப்பாக எழுதவும்.

செந்தழல் ரவி said...

என்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்..

Anonymous said...

சீக்கிரம் குணமடையுங்கள். மன அமைதியும், உடல் நலமும் பெறுங்கள். தைரியத்தை கைவிட வேண்டாம்.

ரோசாவின் பதிவில் 2 வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். அராஜகமான போக்கைப் பற்றி புகார் வேறு. ஏதோ என் சிந்தையில்தான் தவறு போல் என்று இங்கு வந்தால்,

//kummi post//


அரைகுறை அறிவுஜீவிகளின் திரித்தல் வேலை துவங்கிவிட்டது. மேலும் கீழும் பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தால் கும்மி என்று சாடுபவர்தான் அதிகமாக கும்மியடித்திருக்கிறார். பிறகு ஏன் இந்த பதிவின் நோக்கத்தைப் பற்றிய குற்றச்சாட்டு?

இந்த தாக்குதலின் பின்னணி பெரிதாக இருக்கலாம். பைத்தியக்காரன் சுகுணாவை எதிர்த்து பதிவு போட்டதற்கும், அவருடைய நண்பரான உங்களை தாக்கியதன் மூலம் மறைமுக எச்சரிக்கை விடப்படுவதாக இருக்கலாம். கலகக்காரன் என சுயமுத்திரையிட்டுக் கொண்டு அட்டைக்கத்தியினால் குறி அறுக்க அலைந்தவருக்கு நிஜவாழ்க்கையில் அடியாள் வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமைதான்.

மதிபிற்குரிய சீன மாப்பிள்ளைக்கு. தயவுசெய்து இந்த பின்னூட்டதிற்கு எதிர்வினையாக கால்சராயை கழட்டிக்கொண்டு மீண்டும் இங்கே வந்து குத்த வைத்து உட்காராதீர்கள். உங்கள் நாற்றத்தை முகரும் ஆசை சிறிதும் இல்லை.

அடியாளின் அறிவுபூர்வமான விளக்கம் வந்தபின் சிந்தனைத் தெளிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

விரைவாக முழு நலம் பெற வேண்டுகிறேன்.

முகமூடி said...

// உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை // என்ன எழவுடா இது. ஜீனியர் விகடன்ல "ரஜினி இடது பக்கமாக திரும்பி நாப்பது டிகிரி கோணலாக சிரித்தார். அவர் அரசியல் வருவதற்கான அறிகுறி அதிலேயே தெரிந்தது"ன்னு எழுதுற சைக்(கோ)காலஜி ரிப்போர்(ட்டர்) பாணியில நான் என்ன நினைச்சி எழுதறேன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண வந்துட்டானுங்க...

முகமூடிங்கிறதுக்கு பதிலா வேற ஒரு பேர்ல எழுதப்பட்டிருந்தா பொட்டீக்கு இவ்ளோ அஜீரண கோளாறு வந்திருக்காதுன்னு நினைக்கிறேன். ரிப்பீட்டு போட்டுட்டு போயிருக்கலாம்.. பேருதான் இப்ப ப்ரச்னை.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு ஒவ்வொரு தடவ தண்ணியடிக்கிறப்பயும் வெளக்கெண்ணய் ஆ(ரா)ய்(ச்சி) பண்ணி(ன்னி) இங்க வந்து வாந்தியா எடுத்துகிட்டு இருக்கு ஆர்க்கிடெக்ட்டுன்னு தெரியல...

// இம்மாதிரி ஆட்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் // ஜ்யோவ்ராம் சுந்தரை 'பாரு'க்கு அழைக்கவோ, ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்று கல்யாணம் செய்வதற்கோ அட குறைந்த பட்சம் பதிவர் சந்திப்பில் எதேச்சையாக சந்திக்கும் திட்டம் மாதிரி கூட எதுவும் இந்த ஜென்மத்தில் என்னிடம் இல்லை. ஆகையால் பொட்டீ மற்றும் மற்ற பாடிகார்டுகள் பதைபதைப்பில்லாமல் நிம்மதியாக தூங்கவும்...

முகமூடி said...

// ஜ்யோவ்ராம் சுந்தரை 'பாரு'க்கு அழைக்கவோ //

பாருக்கு அழைப்பது என்பது பதிவுலகில் தற்போது ஒரு குறியீடு. எவ்வித உள்நோக்கமுமற்ற மேற்கண்ட வாக்கியம் எவ்வகையிலாவது தங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

(ஒரிஜினல் கமெண்ட போடாமயே இருந்திருக்கலாமோன்னு இப்ப தோணுது ஹூம்..)

ambi said...

தாமதத்திற்கு மன்னிச்சுக்கோங்க, நான் இப்போத்தான் இதை வாசிச்சேன்.

நேத்து சென்ஷி எழுதி இருந்தார், லிங்க் இல்லை, டோண்டு சாரின் லிங்க் பிடித்து வந்தேன். ரொம்ப அதிர்ச்சியாவும் வருத்தமாவும் இருக்கு. :(

உடல் நிலை குணமடைந்து விட்டது என உங்கள் ஒட்டு (தமிழிஷ்ல) பாத்து நிம்மதி அடைந்தேன்.

மனம் குணமடைய சில காலம் பிடிக்கும் தானே? ரிலாக்ஸான விஷயங்களில் ஈடுபடுங்கள்.

Vijisekar said...

கடைசியுல எல்லாரும் சுந்தர நல்லவனுடாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Dr.Rudhran said...

so?
good that you are able to write like this.
i was getting ready to meet less known people in life!

RAMYA said...

நலம் பெற பிரார்த்திக்கிறேன்!!

Anonymous said...

//i was getting ready to meet less known people in life!//

மூஞ்சியில குத்த்தினாலும் தாடியில தான் படும்னு ஒரு எச்சரிக்கையோ? 'நாங்களும் ரவுடி'தான் நெனப்பு வருது. அடச்சே!

Anonymous said...

// நான் எவரைப் பற்றியும் மின்பிம்பம் கட்டி அதில் லேசர் ஷோவின் மூலம் யாரையும் பார்த்தது இல்லை அதனால் எவரும் அறிவுஜீவியும் இல்லை தடாலடியாக சுவிட் ஆஃப் செய்து இருட்டடிப்பு செய்வதற்கு.//

//.புனைவு,அதிபுனைவு என பல்வகை எழுத்துக்களில் கெட்டிக்காரர்கள் தமிழ்ப்பதிவர்கள்.//

// ஒரு முறை தான் சந்தித்தேன் உங்கள் இருவரையும். இருவருமே மிக அன்பானவர்கள் தான் என்பது என் எண்ணம். அது சிறிதும் குறையவில்லை இந்நிமிடம் வரை//

//முகமூடியின் இந்தப் பின்னூட்டம் எனக்கு ஒரு தரகனின் பின்னூட்டம் போலவே இருக்கிறது. உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. உங்களது வளர்கிறேனே மம்மி 2ல் ரோசாவிற்கு ஒரு கொழுப்பு இருப்பதாக சொன்னீர்களே அது அப்பட்டமாகத் தெரிகிறது இப்பின்னூட்டத்தில். இம்மாதிரி ஆட்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.//


ஒரே நிமிஷத்திலே எப்படி அந்நியன் மாதிரி இப்படியும் அப்படியும் மாறி மாறி எழுத முடியுது? முதல் வரியில பிம்பம் இல்லன்றான், அடுத்த வரியிலேயே அப்படி இருக்குதுங்குறான். என்ன எழவு அடுன்னு யாராச்சும் கோனார் நோட்ஸ் போடுங்கப்பா.யப்பா, ஒலக நடிப்புடா சாமி!

ஜமாலன் said...

சுந்தர் ... நேற்று நண்பர் ருத்ரன் சொல்லித்தான் தெரியும். நீண்ட நாட்களாக பதிவுகள் பக்கம் வர வாய்ப்பில்லாத சூழலால் ஒன்றும் தெரியவில்லை. நலம் பெற்று வாருங்கள் முதலில். கணடணத்திற்குரியது மட்டுமல்ல கவலை அளிக்கும் விஷயம் இது.

உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

அபிஅப்பா said...

அன்பின் குருஜி!!

தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது! இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை நான். இது போன்ற நேரங்களில் தைரியமாக இருக்கவும். ரோசாவசந்த்க்கு என் கண்டனங்கள்!

அன்புடன்
அபிஅப்பா

லிங்காபுரம்-சிவா said...

இந்த பதிவ போட்டு neenga matter ah வீதி வரைக்கும் கொண்டு வந்தது மிகவும் வருத்தமாக உள்ளது...

ஆமா அப்படி என்னத்தான் பங்காளி சண்ட உங்களுக்குள்ள‌??

K.R.அதியமான் said...

அன்பின் ஜோ,

கடந்த சில வாரங்களாக வெளியூர் சென்று விட்டதால், இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அதிர்ச்சி மற்றும் வருத்தம். ரோசாவை ஒரு முறை நேரில் சந்தித்ததில், ஈகோ மிகுந்தவர் என்று தோன்றியது.

உங்களை தாக்கும் அளவிற்க்கு உங்க பதிவுகளில் காரணிகள் எதுவும் இல்லை. பிறகு ஏன் என்று புரியவில்லை. wounded pride or hurt ego காரணிகளாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்.

மறப்போம் இதை...