சும்மா இருத்தல்

சும்மா இருக்காதே
ஏதாவது செய்துகொண்டே இரு என்றான் மாரி
idle mind is devil's paradise -
ஆங்கில மேற்கோள் காட்டினான்
ஏதாவது செய் ஏதாவது செய்
என்ற ஆத்மாநாமின் கவிதையைச் சொன்னான்
சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

35 comments:

Ken said...

thala unga touch super

இராகவன் நைஜிரியா said...

அப்ப சிவனேன்னு இரு அப்படின்னு சொல்லும் போது என்னா செய்வீங்க தல..

Anonymous said...

idle mind is devil's paradise -என்னை Blog எழுத வைத்ததே இந்த வரிலகள் தான்.

Ashok D said...

நாங்களும் ஏதாவது செஞ்சிட்டு இருக்கோம்ல..

ஒரு துன்பவியல்(படிக்கறவங்களுக்குதான்) கவிதை அழுதி சாரி எழுதியிருக்கேன் வந்து படிச்சிட்டு நியாயமான(அநியாயமாகூட) கமெண்டு போடுங்க. அப்புறம் உங்க email id கொடுங்க.

http://ashokpakkangal.blogspot.com/2009/11/blog-post_20.html

தராசு said...

//சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை//

குழப்பத்தில்னு சொல்லீட்டு தெளிவா எழுதி இருக்கீங்களே, அதுதான் குழப்பமா இருக்கு.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு மக்கா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

'சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்"
இடைவெளி என்றுமே குழப்பமானவைகள் தான்...

யாத்ரா said...

முன்பு செய்தல், இப்போ சும்மா இருத்தல், ஒன்பது வரிகள் வரிசை கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

இடைவெளிக் குழப்பம், இந்த இடத்தில் நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன், சம்பத்தின் இடைவெளியும் ஞாபகம் வருகிறது, ஆத்மா நாமின் ஏதாவது செய் கவிதை,,,,, ஆகா

idle mind is devils paradise மிக மிக உண்மை

Rajan said...

கமெண்டு பேஜுல பனிரெண்டு வரி வருதுங்க தல

மணிப்பக்கம் said...

:) nice!

குசும்பன் said...

//இடைவெளிக் குழப்பத்தில்//

எனக்கும் இந்த போதிய இடைவெளிக் குழப்பம் ரொம்ப அதிகமாக இருக்கு குருஜி! பிளீஸ் இந்த போதிய இடைவெளி குழப்பத்தை நீங்கதான் சொல்லிக்கொடுக்கனும்:)))

Anonymous said...

Enna Karumam ithu onnu velangalaiyae ??

Perumal (big)

விநாயக முருகன் said...

ந‌ல்ல இருக்குங்க. இந்த கவிதை படித்ததும் எனக்கும் ஒரு கவிதை மண்டைக்குள் ஓடியது.


http://nvmonline.blogspot.com/2009/11/blog-post_23.html

நேரம் கிடைத்தால் சும்மா ஒரு விசிட் வ‌ந்து பாருங்க

வால்பையன் said...

இது அது மாதிரியே இருக்கே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், இராகவன் நைஜிரியா, திருமதி ஜெயசீலன், அஷோக், தராசு, ராஜாராம், கிருத்திகா, யாத்ரா, ராஜன், மணிப்பக்கம், குசும்பன், பெருமாள், விநாயக முருகன், வால்பையன்... நன்றி.

தேவன்மாயம் said...

சும்மா இருப்பதற்கு இது பெட்டரோ! யோசிக்க வச்சிட்டீங்களே!!

NO said...

Mediocrity can be easily spotted especially when it manifests as poetry!! And as a corollory, medicores can also be spotted, even if they do not come out with such original lines!
முதல் வரி உங்களுக்கு, இரண்டாவது அண்ணன் திரு கென்னுக்கு!

திரு கென் அண்ணனின் அறிமுகத்தைப்பார்த்தேன். அவருக்கு பிடித்தது ஒரு மண்ணும் இல்லையாம் மேலும் அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் அவர் ஒரு குழப்படிக்காரனாம்! உங்களுக்கு ஏத்த ரசிகர், No doubts!
அவரும் உங்களைப்போன்ற கவிதை எழுதும் ஆருவம் கொண்டவர் போல இருக்கிறது! சும்மா பக்கம் பக்கமாக போட்டு தள்ளியிருக்கிறார், தாங்க முடியவில்லை! ஆனால் இந்த மொக்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டுமே? so, உங்களுக்கு ஒரு ரெண்டு சூப்பர் சார் போட்டால், நீங்களும் போய் ஒரு ரெண்டு சூப்பர் போடுவீர்கள் என்ற ஆசைதான், வேறென்ன சொல்லுவது!
பரமார்த்தகுருவும் சிஷ்யர்களும் குழப்பினார்கள் அன்று, ஜ்ய்வ்ரோமும் சில பல ஜால்ராக்களும் ஜிங் சக் அடித்தார்கள் இன்று!

வாழ்க கவிதைகள்! And by the way, it should be work shop and not paradise as the Devil's paradise is Hell and its there the sinners are subjected to torture. The point is that its called hell and Lucifer is its custodian whereas here its called மொழி விளையாட்டு and you know who its custodian is!

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு ஜோவ்ரம் சுந்தர் ,

இதற்க்கு பெயர் கவிதை என்று நீங்கள் சொல்லியதாக நான் படிக்கவில்லை! சாமரம் வீசவந்தவர் சிலர் சொன்னார்கள், அவ்வளவே! புரிகிறது, பிணம் என்று நான் ஏன் சொல்லவேண்டும், நல்ல மணம் என்று சொல்லுவோர் இருக்கையில் என்ற எண்ணம்தானே? ஒருவரின் பிளாகை வைத்தே, கொஞ்சம் கூர்ந்து கவனித்தே அவர் யார் என்பதை சொல்லிவிடலாம்! நீங்களும் விதிவிலக்கல்ல!
உள்மனதின் உதித்தல்கள் மட்டும் நான் வித்தியாசமானவன், நான் விடயம் தெரிந்தவன் என்று சொல்லுகையில், வெளி உலகம் அதை ஏற்காது, எள்ளளவும் அதை மதிக்காது நான் ஒன்றுமிலாதான் என்று புரியவைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இந்த பிளாக் என்ற தன் தணிக்கைக்கூட தேவைஇலா செலவில்லாசொல்லி
மட்டும் நானும் நாலும் தெரிந்தவன், மானுடரே அறிந்து கொள்ளுங்கள் என்று அடித்து பேச உதவுகிறதே!! எழுதாமல் விட்டுவிடுவோமா என்ன?
அப்படி இல்லாவிடில் திரு கென் போன்றவர்களும் இங்கு வந்து, இந்த மொக்கையை தல சூப்பர் என்று எப்படி சாமரம் வீசுவது நடக்குமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தேவன் மாயம் & நோ... நன்றி.

Unknown said...

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாத சொல் என்ற நாலும் ஒருங்கெ பெற்ற திரு no அவர்களுக்கு பதில் சொல்லிகொண்டிருந்தால் விடிஞ்சாப்லதான்

நந்தாகுமாரன் said...

இயக்கம், இயங்காமை, இயக்கத்தில் இயங்காமை குறித்த இது மற்றும் இதற்கு முந்தைய கவிதையையும் படித்துவிட்டு பின்னூட்டம் செய்யாமல் இவ்வளவு காலம் சும்மா இருந்துவிட்டேன் ஏனோ :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாஹே குரு & நந்தா... நன்றி.

Vidhoosh said...

// devil's paradise //
devil's workshop-ன்னு படிச்சதாவும் ஞாபகம்.

அதான் நாமெல்லாம் பட்டறை நடத்தறோமே?

-வித்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வித்யா.

Karthikeyan G said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நோ... நன்றி.//

சுந்தர்ஜி, Doordarshan எதிரொலி நிகழ்ச்சியில் கடிதம் வாசிப்பாளர் எதாவது காட்டமான / திட்டி எழுதப்பட்ட கடிதத்தை வாசித்து முடித்தவுடன் அருகில் இருக்கும் இன்னொரு வாசிப்பாளர் (அதிகாரி?) "செல்வம் அவர்களே, கடிதம் எழுதியதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். சரி, நாம் அடுத்த கடிதங்களை பார்ப்போமா" என்பார். உங்கள் இந்த பின்னூட்டத்தை படித்தவுடன் எதிரொலி நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. :-)

cheena (சீனா) said...

அன்பின் சுந்தர்

சும்மா இருபதற்கும் ஏதாவது செய்வதற்கும் இடையே உள்ள நேரத்தில் இம்மறுமொழி

நல்லாத்தானெ இருக்கு கவிதை

நல்வாழ்த்துகள் சுந்தர்

Anonymous said...

Yes, it is

'An idle mind is a devil's workshop'.

The big question is : What is an idle mind?

The question is absurd, because mind is never idle.

The English proverb perhaps points to a mind, which has nothing else to do but to 'scheme, calculate, divise sinister designs with motives to harm or disturb harmony somewhere and to some'

In this sense, the so-called idle mind is very active.

Today, robbers and terrorists are cleverer than police.

In your poem (poem?), similarly, summaa irththal - is an absurd fact.

Maybe, you are referring to a person lurching on a sofa, doodling on papers aimlessly, or on bed, 'doing nothing'

Here, too, his mind is active.

Maybe, the sleep is 'summa iruththal'.

Fresh and original ideas were born only during the summa irththal, to great philsophers, some of whose philosophy shaped our law and governance.

All intellectual achievements arise from leisure' -Sam Johnson.

Many intellectuals have praised the 'summa iruththal' in their essays. One such example is 'An apology for Idlers' by RL Stevenson.

Neverthelss, this summa iruththal, in the case of unguided and immature people, may turn to be destructive. For young people, the summa iruththal means joblessness. Jobless youth, if they remain hopless of getting a job for a long time, are easy prey to evil. They fall easily into the hands of bad people, like terrorists, to upset social order. Therefore, we must engage them, in any way.

Here, an idle mind is a devil's workshop - comes true.

What about you? Are you mature enought to route your summa irththal through positive channels? Or negative channels by writing such inane lines which you or some call - what is that? - POEM?

myownquiver

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கார்த்திகேயன், சீனா, myownquiver... நன்றி.

Ken said...

உள்மனதின் உதித்தல்கள் மட்டும் நான் வித்தியாசமானவன், நான் விடயம் தெரிந்தவன் என்று சொல்லுகையில், வெளி உலகம் அதை ஏற்காது, எள்ளளவும் அதை மதிக்காது நான் ஒன்றுமிலாதான் என்று புரியவைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இந்த பிளாக் என்ற தன் தணிக்கைக்கூட தேவைஇலா செலவில்லாசொல்லி
மட்டும் நானும் நாலும் தெரிந்தவன், மானுடரே அறிந்து கொள்ளுங்கள் என்று அடித்து பேச உதவுகிறதே!! எழுதாமல் விட்டுவிடுவோமா என்ன?


பாவம் அப்ரூவரா மாறிட்டாரோ ஓ நோ :) நான் எப்போ ஜால்ரா இல்லன்னு சொன்னேன். நான் எழுதற்து மொக்கை இல்லன்னு சொன்னேன். மயிறுள்ள மகராசன் முடிஞ்சிக்கிறான் உனக்கேன் நொட்டிக்கிட்டு போகுதுன்னு சொல்வாங்க என்னமோ அறிவு ஜீவிதனத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு நல்லாயிருங்க

கார்க்கிபவா said...

கென் அவர்களே,நோவுக்கு (வேற அர்த்தம் வருதோ) பதில் சொல்லிட்டிங்களா?

அவ்ளோதான்.. உங்க தாத்தா, அவருக்கு தாத்தோவோட பேரு, அவரு ஊரு, அவர் படிச்ச ஸ்கூலோட சாருன்னு எல்லாரைப் பத்தியும் இப்ப சொல்லுவாரு பாருங்க.

உங்க ப்ளாகுல எத்தனை பதிவு இருக்கோ அத்தனை ஹிட்ஸ் கிடைக்கும் உங்களுக்கு. அப்புறம் இன்னும் நிறைய இருக்கு பாஸ். என்ஜாய்

Ken said...

நோவுக்காக தனிப்பதிவே சமர்ப்பணம் பண்ணியிருக்கேன். ஏதோ ஒரு !@#!@$$#@$## அனானியா வந்து திட்டிட்டுப்போனதுதான் மிச்சம் :)

சூர்யா - மும்பை said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கிறேன். நிறைவைத் தந்தது.

Anonymous said...

arumai..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், கார்க்கி, சூர்யா - மும்பை, அனானி... நன்றி.

Muruganandan M.K. said...

இன்றைய எனது மருத்துவப் பதிவான

"சும்மா இருக்கச் சுகம் வராது! மரணம் வரும்"
கட்டுரையில் உங்கள் கவிதைக்கான இணைப்பைச் சுட்டியுள்ளேன். நன்றி

http://hainallama.blogspot.com/2010/12/blog-post_19.html