மகிழ்ச்சியான செய்தி. உரையாடல் போட்டி சிறுகதைகள் புத்தகமாகின்றன


உரையாடல் சார்பாக 2009 வருடம் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது.  அதில் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.  அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைப் புத்தகமாக கொண்டு வரலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.  அதற்கான ஒப்புதல்களும் சிறுகதைகளை எழுதியவர்கள் தந்திருந்தார்கள்.

ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களால் புத்தகம் கொண்டு வர இயலவில்லை. 

இப்போது நண்பர் அகநாழிகை வாசுதேவன் அந்தச் சிறுகதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர இசைந்திருக்கிறார்.  சிறுகதைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது :

1. பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ வாசன்  ( http://www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ )
2. பிரசன்னம் - யோசிப்பவர்  ( http://kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html )
3. அம்மாவுக்குப் புரியாது - RV  ( http://koottanchoru.wordpress.com/2009/06/30/ )
4. அம்மாவின் மோதிரம் - எம் ரிஷான் ஷெரீப்  ( http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
5. அப்பா வருவாரா - கவிதா   ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html )
6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல்  ( http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html )
7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன்  (  http://adtams.blog.com/2009/06/27/அவளாக-இருந்திருக்கலாம்/ )
8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன் - கறுப்பி  ( http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/blog-post_26.html )
9. வாழையடி வாழை - வெட்டிப் பயல்  ( http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html )
10. மனையியல் - இரா வசந்தகுமார் ( http://kaalapayani.blogspot.com/2009/06/blog-post.html )
11. அவள் பத்தினி ஆனாள் - ராமச்சந்திரன் உஷா ( http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html )
12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - நிலா ரசிகன் ( http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
13. காத்திருத்தல் - சரவணன்.P.  ( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா ( http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
15. நான் அல்லது நான் - நந்தா குமாரன் ( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
16. வழியனுப்பிய ரயில் - உமாசக்தி ( http://umashakthi.blogspot.com/2009/05/blog-post_27.html )
17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் - புபட்டியன் ( http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
18. மைய விலக்கு - சத்யராஜ்குமார்  ( http://inru.wordpress.com/2009/06/08/twilight/ )
19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - அகநாழிகை வாசுதேவன் (  http://aganaazhigai.blogspot.com/2009/06/blog-post_03.html )
20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன்  ( http://www.sridharblogs.com/2009/06/blog-post_17.html )


இதில் எங்களுக்கு லாப நோக்கு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.  காப்புரிமை எழுதியவர்களுக்கே சொந்தம்.

சிறுகதை ஆசிரியர்கள் யாருக்காவது புத்தகமாவதில் ஆட்சேபணை இருக்குமானால், எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அகநாழிகை வாசுதேவனுக்கு எங்களுடைய நன்றிகள்.

நன்றி,

பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்.


நேசம் & யுடான்ஸ் நடத்தும் கதை, கட்டுரை & குறும்பட போட்டிகள்

புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு. 


கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.

2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.


3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரை :  சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும்.  யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.

2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ )  இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.

4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும். 

5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.

7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும். 

8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.

சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம்.  வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள்  வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.