ஒரு காதல் கவிதை

என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்லாமே சோர்வு
கண்முன் தெரியும்
வானம் தாண்டியும்
பல வானங்கள் இருக்கின்றனதாம்
நிராகரிப்பின் வலி தாங்காமல்
ஒளிந்து கொள்கின்றன
எல்லா வான்மேகங்களும்
வழுக்கைத் தலையே
பிரதான பிரச்சனையாய்
இருக்கிறது
இப்போதைய சீமாட்டிக்கு

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

சதுரத்தை ஆங்காரமாய்
உடைத்தெறிந்தால்
சச்சதுரம் சச்சச்சதுரம்

குடிகாரனின் வார்த்தைகளாய்ச்
சிறுத்துப் போன என் காதலை
மீட்டெடுப்பேன்
அதுவரை
நமஸ்காரம்

0 comments: