காமக் கதைகள் 45

தலைப்பைப் பார்த்ததும் அத்தனை கதைகளையும் இந்த ஒரு பதிவிலேயே எழுதப் போகிறேன் என பயப்பட வேண்டாம். ஒரு கதைதான் இப்பதிவில். திங்கள் முதல் சனி வரை நாளொன்றுக்கு ஒரு கதை வீதம் 45 கதைகள் எழுதலாமென்றிருக்கிறேன். அது ஏன் ஞாயிறு விடுமுறை என்கிறீர்களா.. அலுவலக மடிக் கணிணியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற வேண்டும் டாபர்மேன் மேனேஜனிடம். அவன் அனுமதி அளிக்கக் கூடும், ஆனால் கூடவே வேறு ஏதாவது வேலையும் கொடுத்து விடுவான்.

விடுமுறை நாட்களில் அலுவலக வேலை செய்வதைப் போல் கொடுமையானது வேறெதுவும் கிடையாது என்பது என் கொள்கை.

இதில் வரும் அத்தனைக் கதைகளும் உண்மையில் நடந்த அனுபவக் கதைகள். உடனே எனக்கு நடந்ததா எனக் கேட்க வேண்டாம். இக்கதைகளின் நாயகனான அதீதனுக்கு நடந்தது. அப்படியே சந்தில் சிந்து பாடுவது போல என்னுடைய அனுபவங்கள் நான்கைந்தையும் சேர்த்து விடலாமென்ற எண்ணம். எழுத்தாளன் புத்தி !

அதீதன் நாளொன்றுக்கு முழு போத்தல் ரம்மை குடிப்பவன் - அதுவும் காட்டமான ஓல்ட் மாங்க் ரம்! நிறைய காதலிகள் உண்டு; மனசாட்சி உறுத்தாத காதல்கள். அவன் காதலித்த 54 பெண்களில் 45 பேருடன் உடலுறவு வைத்திருக்கிறான். இக்கதைத் தொடரை முடிப்பதற்குள் அவனுக்கு வேறு சில பெண்களுடனும் காதல் வரலாம். அதனால் கதையின் எண்ணிக்கை கூடும் வாய்ப்புண்டு.

ஒவ்வொரு காதலும் அதிகபட்சம் போனால் ஆறு மாதம்தான். ஒன்று அவர்கள் சண்டை போட்டு பிரிந்து விடுவார்கள், அல்லது இவன் ஏதாவது காரணம் காட்டி வெட்டி விட்டு விடுவான்.

அவன் எனக்கு வாய் மொழியாகக் கூறிய கதைகளே இவை.

காமக் கதைகள் என்றதும் சிலர் முகம் சுழிக்கலாம். காமத்தை, உடலை, வாழ்க்கையைக் கொண்டாடத் தெரியாத விளக்கெண்ணைகளைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் சில கலாச்சாரக் காவலர்கள் தடியெட்டுக்கலாம். அவர்களிடமிருந்து தப்பிப்பதுதான் எப்படி எனத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் உதவலாமே...

காமம் போதை; காமம் கிரியா ஊக்கி. காமத்தைக் கொண்டாடுவோம் !

சரி.. இத்துடன் முன்னுரை போதும் என நினைக்கிறேன். இனி, முதல் சிறுகதை :

69

19 comments:

முரளிகண்ணன் said...

Ayyanar Viswanath said...

அடிச்சி ஆடுங்க சுந்தர் ..:)வாழ்த்துக்கள்

வளர்மதி said...

களத்துல இறங்கிட்டீங்களா ... வாழ்த்துக்கள் :)

Athisha said...

ஆஹா ..............

பேஸ் பேஸ் பலேபலே

கோவி.கண்ணன் said...

ஐயோ...ஐயோ....ஐயோ...ஐய் ஐய் யோ.....

இது அடுக்குமா ?

:)

manjoorraja said...

அதீதன் எனக்கு தெரியாமெ எப்ப உங்ககிட்டே இத்தனை கதைகளையும் சொன்னார்னு எனக்கு தெரியலெ.

சரி எப்படியோ உங்க மூலமாவது தெரிஞ்சிக்கிறோம்.

கதிர் said...

அவ்வ்வ்வ்வ்
இது என்னய்யா அக்குரமமா இருக்கு.

இராம்/Raam said...

எழுதுங்க..எழுதுங்க... படிக்க நாங்க காத்திருக்கோம்...... :)

ஆடுமாடு said...

//அதுவும் காட்டமான ஓல்ட் மாங்க் ரம்!//

எனக்கு ஹீரோ யாருன்னு புரிஞ்சு போச்சு. ஆட்டத்தை ஆரம்பிங்கய்யா.

மங்களூர் சிவா said...

அட்டெண்டன்ஸ்

Anonymous said...

69 ஆ?ஆஹா முதல் கதையே செம சூப்பரா இருக்கும் போல இருக்கே.

தமிழன்-கறுப்பி... said...

என்னதான் நடக்குதுன்னு பாப்பமே..:)

லக்கிலுக் said...

கதை சூப்பர் :-)

நானொரு கதை சொல்லட்டுமா?

96

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முரளி கண்ணன், அய்யனார், வளர்மதி & அதிஷா.

கோவி. கண்ணன், நன்றி. ஏன் எழுதக் கூடாதா??

கே.என்.சிவராமன் said...

சுந்தர்!

காமம், ஒரு வழிப் பாதையாகவும் இருக்கலாம்... இருவழிப் பாதையாகவும் இருக்கலாம்!

ஒரு வழிப் பாதையில் நீங்கள் ஆடுங்கள்! நாங்கள் ரசிக்கிறோம். இருவழிப் பாதையில் என்னையும் சேர்த்து பதிவுலக நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!! அப்போதுதான் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மஞ்சூர் ராசா. அதீதன் என் நண்பன். அதனால் என்னிடம்தான் சொல்வான் :)

நன்றி,தம்பி. முதல் கதைக்கே அக்கிரமம் என்றால் எப்படி :)

நன்றி, ராம்.

ஆடுமாடு, ஹிஹி... நன்றி.

நன்றி, மங்களூர் சிவா.

ஜமாலன் said...

சுந்தர் என்ன நடக்குது இங்கே..

இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா.. சொல்லவே இல்ல...

அய்யோ அய்யோ...
நண்பர் பைத்தியக்காரனையும் செர்த்துக்கொள்ளுங்கள். ஜிகல்பந்தி அப்பத்தான் களைகட்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தமிழன்.

நன்றி, லக்கி லுக். உங்க கதையும் நல்லாத்தான் இருக்கு :)

நன்றி, பைத்தியக்காரன்.

நன்றி, ஜமாலன்.

கதையில் மட்டுமென்றால் அனைவரையும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சனையொன்றுமில்லை :)

TBCD said...

முதல் கதை ஆச்சு

///காமம் போதை; காமம் கிரியா ஊக்கி. காமத்தைக் கொண்டாடுவோம் !///