Sunday, April 18, 2010

சத்தங்களால் ஆன உலகு

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

Thursday, April 1, 2010

நடைப் பயிற்சி

என் குறியை அறுத்துவிட்டு
நடந்து கொண்டிருக்கிறேன்
நடைபாதையின் ஓரத்தில்
ஆடைகளற்ற
தனி மனிதனின்
சுதந்திர நடை

ஏதோ ஒன்றை எதிர்த்தோ
அல்லது எல்லாவற்றையும்
எதிர்த்தோ இருக்கிறது
என்னுடைய நடை பயணம்

கிரிக்கெட் ஸ்கோர்கள்
மற்றும்
சினிமாப் பாடல்களின்
நடுவே
யாரும் கண்டுகொள்ளாத தனிப்பயணம்

(மூன்று நான்கு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைப் படித்ததன் தாக்கத்தில் எழுதியது - மொழிபெயர்ப்பல்ல - இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).