ராதிகா
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கையைப் பிய்த்து
நான் விளையாடியதில்லை
அடுத்தவன் பம்பரம்
வட்டத்துள் இருக்க
அதை உடைக்க
வெறி கொண்டதில்லை
கோலி விளையாடும்போதும்
முட்டி காய்ச்சும் பையனின்
சதை காயப் படுமோவென
வருத்தப் படுவேன்
அடுத்தவர் எனக்கு
முட்டாளெனப் பட்டம் கட்ட
அதனாலென்ன என்று
பேசாமல் போய்விடுவேன்
யாராவது என் சட்டையயப் பிடித்தால்
கை அகற்றி மவுனமாய் நடப்பேன்

வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
உள்ளே கனன்று
இப்போது உன்னைத் தேடுகிறேன்
கொல்வதற்கு
ஆசையாய்

(நடு கல் - மே 1992)

15 comments:

Ayyanar Viswanath said...

வலைப்பதிவுலகிற்கு நல்வரவு சுந்தர்(பதிவராய்)
உங்கள் மொழி விளையாட்டில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அய்யனார். பதிவில் நீங்கள் என் முதல் வாசகர். மகிழ்ச்சியாயிருக்கிறது.

ஜமாலன் said...

முதலில் இந்த பின்னோட்டத்தை கவனிக்கவில்லை. பதிவுலகிற்கு வந்து விளையாட்டைத் துவக்குங்கள். வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ஜமாலன்.

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் சுந்தர்.
.....
ஆகக்குறைந்து நீங்கள் எழுதியவை அங்குமிங்குமாய் மறைந்துபோகாமல் இருப்பதற்காகவேனும்... ஓரிடத்தில் சேகரித்து வைக்க இவ்வலைப்பதிவு உதவுமென நம்புகின்றேன்.

இளங்கோ-டிசே said...

மேலே சொல்ல மறந்தது... தமிழ்மணம் & மற்றைய திரட்டிகளிலும் - உங்களுக்கு விருப்பமிருப்பின் - இவ்வலைப்பதிவை இணைத்துவிடவும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, டிசே. எல்லாம் பழைய எழுத்துக்கள்தாம். புதிதாக இனிதான் எழுதவேண்டும் (எழுதி பல வருடங்களாகிவிட்டன, வருமா எனத் தெரியவில்லை). ஆனாலும் கற்றது தமிழ் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன் (விடுவதாய் இல்லை)-))

திரட்டிகளில் எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.

காயத்ரி சித்தார்த் said...

வாங்க சுந்தர்.. நவம்பர்லயே 'விளையாட'
ஆரம்பிச்சிட்டீங்க போல? கலக்குங்க.. வாழ்த்துக்கள்!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காயத்ரி... வாழ்த்துக்களுக்கு நன்றி.

இப்னு ஹம்துன் said...

நல்வரவு ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி இப்னு ஹம்துன்...

TBCD said...

நல்ல புரிஞ்ச கவிதை..

இதுல...நேரடி அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இருக்கா..?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, tbcd. உங்களுக்குப் புரிஞ்ச அதே அர்த்தம்தான்.:))

MSK / Saravana said...

மிக அருமை..
"வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
உள்ளே கனன்று
இப்போது உன்னைத் தேடுகிறேன்
கொல்வதற்கு
ஆசையாய்"

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சரவண குமார்.