Showing posts with label அ-கவிதை. Show all posts
Showing posts with label அ-கவிதை. Show all posts

ஒரு உறுதியான தாயோளியின் வரலாறு

ஓரிரவு அவன் கதவருகே வந்தான்
நனைந்து, ஒல்லியாய், அடிவாங்கியவனாய்,
மிரட்சியுடன்
வாலில்லாத ஒண்ணரைக் கண் வெள்ளைநிறப் பூனை
அவனை அள்ளினேன்
சோறிட்டேன்
அவன் தங்கினான்
என் மீது நம்பிக்கை வளர்ந்தது
நண்பனொருவன் வண்டியை இவன் மேல் ஏற்றும் வரைக்கும்
மீதமிருந்ததை அள்ளி எடுத்து கால்நடை மருத்துவரிடம் சென்றேன்.
அவர் சொன்னது :
”பிழைக்க அதிக  வாய்ப்பில்லை
இந்த மாத்திரைகளை கொடுங்கள்
இவன் முதுகெலும்பு நொறுங்கியிருக்கிறது
ஆனால், இதற்கு முன்பே நொறுங்கி எப்படியோ இணைந்திருக்கிறது
பிழைத்தாலும்  நடக்க முடியாது
இந்த எக்ஸ்ரேவை பாருங்கள்
இவன் சுடப்பட்டிருக்கிறான்
இங்கே பாருங்கள்,
தோட்டாக்கள் இன்னும் இருக்கின்றன
அத்துடன் ஒருகாலத்தில் இவனுக்கு வாலும் இருந்திருக்கிறது
யாரோ அதை நறுக்கியிருக்கிறார்கள்''

(நேற்றிரவு சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் The History of One Tough Motherfucker வெளியிட்டபோது மொழிபெயர்ப்பு போட வேண்டாமென நினைத்தேன்.  இப்போது வேறு மாதிரி தோன்றுவதால், மொழிபெயர்ப்பை வெளியிடுகிறேன்)

சேருமிடம்

எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும்
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள்
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத்
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்

ஆனால்

ஆனால்
நாற்காலியின் எதிரில்
கால் கேள் போட்டு
வெடிக்கும் வேட்டுக்களின்
சத்தம் நித்தம்
யோசிக்கையில்
தூள் தூள்
தலை ஆனது
பிரச்சனைகளின் நெருக்கடி
வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
தினமும் பொழுது போக்கும்
கேபிள் டீவியே
போற்றி போற்றி

(இணையத்தில் எழுத வந்த புதிதில் பதிந்தது. பழைய பதிவையும் பின்னூட்டத்தையும் - ஆமாம், ஒரே பின்னூட்டம்தான், அதுவும் ஒரு வருடம் கழித்து 2008ல் வந்தது! - பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2007/12/blog-post_07.html)

பல / துல்லியம் / தூக்கு / 2,25,650

காலதாமதம்
காரணம்
குழந்தைகள் ஆர்ப்பரிப்பு
சீறிப்பாயும் விமானங்கள்
நவீனமயமாக்கப்படாத தொடர்புத் துறை
மாண்டவர் இன்னும் வேண்டுமென
எண்ணிக்கை
எண்ணிக்கை
தொலைக்காட்சிமுன்
பட்டினியால்
புது வசதிகள்
புழுதி கிளப்பும் பீரங்கிகள்
போதவில்லை
தகவல் சேகரிக்க எண்ணிக்கை
அறிய
அணுக்கதிர் வீச்சு
3ஜி ஸ்பெக்ட்ரம்
Ka band

வட்டச் சுழல்

வானத்தில் பறக்கும் கர்ணப் புறா
பல்டியடித்தபடி நேர்க்கோட்டில் கீழிறங்கும்
ஆஃப் பீர்ல
கவுந்துருவாண்டா மச்சான்
வரிசைக் கிரமங்கள்
கலைத்துப் போடப் பட்டிருக்கிறது
பர்ரோஸின் பிரதி
வாணலியில் முலையைப் புரட்டிப் போடுகிறான்
மயிர் பிளந்து
வளைய வரும் மஞ்சள் நிறப் பூனை
யூதாசாகவோ எட்டப்பனாகவோ மாறத் தயார்
என்னை மறந்து உயிர் வாழ்வேன்
முகமூடிகள் போதனைகள்
எதுவும் வேண்டாம்
தத்திப் பீணிகா எக்கன்னா போய் சாவுரா
ராபர்ட் பிரவுணிங்காக ஆசைப் பட்டான் போர்ஹே
காலம் நினைவுகளாய்ச் சுருங்கிக் கிடக்கிறது
வட்டச் சுழல்
பசி
மோனம்

கை போனபடி எழுதுதல் பற்றி ஒரு கவிதை

சாதாரண வார்த்தைகளில்
பல தளச் சிக்கல்
அதனாலென்ன
அவனுக்கும் எனக்கும்
உவனுக்கும் உனக்கும்
எவனுக்கும் எவனுக்கும்
மின்விசிறி போல்
பலப்பல பப்பல
சிலச்சில இல்லை ஆனால் சிற்சில
பாட்டு போடு டேன்ஸ் ஆடு
இல்லையா ஸர்ரியலிஸ்டுகள் போல்
கை போனபடி எழுது படிமத்துக்குக்
காத்திராதேயென எவன் சொன்னாலும்
தலையாட்டாதே தெகார்தே என்ன

(மவ்னம் - பிப்ரவரி 1994ல் வெளியானது)

நகுலனும் நானும்

எல்லாம் நடந்து கொண்டிருந்த
யாருமில்லா பிரதேசத்தில்
அமர்ந்திருந்தவன் புத்தகத்தில்
சுசீலாவையும் ராமச்சந்திரனையும்
பார்த்தவாறிருந்தான்
முன் பின்னிருந்த
பக்கங்களில்
மறைந்து போன நவீனன்
பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்
யார் தலையையோ சீவுவது மாதிரி
கையில் பிஜாய்ஸ் பிராந்திக் குப்பியை
ஆட்டிக் கொண்டிருந்தான்
காலக் கிழவனொருவன்
வந்த வழியும்
கேட்ட செய்தியும்
நான் திரும்பிப் பார்க்க
அந்த மஞ்சள் நிறப் பூனை
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
சாக மட்டுமே தெரிந்த
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்
எல்லாவற்றையும்
நான் சரி
நான் மாத்திரம்
சரியே சரி

அ-கவிதை (3)

உனக்குச் சொல்ல
வளர்ந்தது உணர்ந்தபோது
யார் அதையெல்லாம் செய்வார்கள்
collage கவிதை
சாதாரண வாசக மனம்
assemblage கவிதை
கேள்வி எழுப்பும்
Reader Reception Theory
என்று
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை
நாகார்ஜூனன் சொன்னால்
கவிதை வந்தது
ஒன்றுமில்லை

அ-கவிதை (2)

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

அ-கவிதை (1)

ஆனால்
நாற்காலியின் எதிரில்
கால் கேள் போட்டு
வெடிக்கும் வேட்டுக்களின்
சத்தம் நித்தம்
யோசிக்கையில்
தூள் தூள்
தலை ஆனது
பிரச்சனைகளின் நெருக்கடி
வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
தினமும் பொழுது போக்கும்
கேபிள் டீவியே
போற்றி போற்றி