கை போனபடி எழுதுதல் பற்றி ஒரு கவிதை

சாதாரண வார்த்தைகளில்
பல தளச் சிக்கல்
அதனாலென்ன
அவனுக்கும் எனக்கும்
உவனுக்கும் உனக்கும்
எவனுக்கும் எவனுக்கும்
மின்விசிறி போல்
பலப்பல பப்பல
சிலச்சில இல்லை ஆனால் சிற்சில
பாட்டு போடு டேன்ஸ் ஆடு
இல்லையா ஸர்ரியலிஸ்டுகள் போல்
கை போனபடி எழுது படிமத்துக்குக்
காத்திராதேயென எவன் சொன்னாலும்
தலையாட்டாதே தெகார்தே என்ன

(மவ்னம் - பிப்ரவரி 1994ல் வெளியானது)

6 comments:

கே.என்.சிவராமன் said...

13 வருடங்களுக்கு முந்தைய கவிதை என பின்குறிப்பை பார்த்ததும்தான் புரிகிறது. இப்போதும் கவிதையின் அ- தன்மை மாறவில்லை.

தொடருங்கள் சுந்தர். கூடவே ஒரு தொகுப்புக்கான வேலையையும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பைத்தியக்காரன்.

தெய்வா said...

அ கவிதை என்பதால் கவிதை தன்மை மாறவில்லை

அரை பிளேடு said...

அ கவிதை என்றால் என்ன ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அரைபிளேடு, anti-poetry யின் தமிழ் வடிவம் என்பது என் புரிதல்.

தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் அ சேர்த்தால் அது அல்லாத என்ற அர்த்தம் வருமே.

அரை பிளேடு said...

நன்றி :)