பீடி / சிகரெட் பிடிப்பது தொடர்பாக சில விஷயங்கள்

சிங்மங்களூர் பீடியை
இண்டியன் ஃபில்டர் கிங்ஸென
எப்போதும் கேட்பான் பட்டக்கல்
காஜா பீடியைப் பிடிக்கவே ஆசைப்படுவான் உமாபதி
கணேஷ் பீடி பிடிப்பதற்குச் சும்மா இருக்கலாம்
செய்யது பீடி இழுக்கவே கடினமாயிருக்கும்
(அடிக்கடி அணைந்தும் தொலையும்)
வாசுவும் சீனியும் பிடிப்பது கோல்ட் பிளேக்தான்
கோல்ட் பிளேக் கிங்ஸே பலவருடங்களாக நான்பிடிப்பது
அக்கா வீட்டுக்காரர் கொடுத்துச் சென்ற ஃபாரின் சிகரெட்
அப்படியே தூங்குகிறது அலமாரியில்
கடற்கரை காற்றிலும் அனாயசமாக சிகரெட்
பற்ற வைக்கும் செந்தில்
சட்டம் போட்டதால் தயங்குகிறான்
சிகரெட்டுக்குள் கஞ்சா வைத்து இழுப்பான் சங்கர்
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்

பாம்பும் தவளையும்

அலறல் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவன்
தேடத் துவங்கினேன்
மழைக்கால இரவில்
அறையில் படுத்திருந்தவன் பார்த்திருந்த
மொழ மொழவென
தரையில் வழுக்கிச் செல்லும் பாம்பை

அதைப் பார்க்கும் ஆவலில்
கதைவைத் திறந்தவன்
பார்வையில் படும்

ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம்

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

பழக்கம்

பேனா பிடிக்கக் கற்றுக் கொண்ட
நாள் முதலாய் வரைந்து கொண்டிருக்கிறேன்
பெட்டிகள்
மையெடுக்காமல்
கோடுகளை இணைத்து
சதுரமாய்
நீள் சதுரமாய்
செவ்வகமாயும்கூட
வண்ணம் நிரப்பியும் நிரப்பாமலும்
நிரப்பியதாய் நினைத்துக் கொண்டும்
நிரப்ப மறந்து போயும்

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்

சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்

இந்தப் பதிவை அனுப்பியவர் ஒரு பத்திரிகையாளர், வலைப்பதிவுகளில் பரவலாக அறியப்பட்டவர். இப்போதுள்ள சூழலில் தன்னால் தன் வலைப்பூவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை குறித்து எழுத இயலாது என்பதால் இதை அனுப்பியுள்ளார்.

தொலைக்காட்சியில் 'மனதைக் குலுங்க வைக்கும்' அந்தக் காட்சிகளைக் கண்டவர்களின் மனட்சாட்சிகள் இருகேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பின.

1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?

2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?

1. உண்மைதான். இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதுதான். இது மட்டுமல்ல, எல்லாவிதமான வன்முறையும். ஆனால் இந்த வன்முறை எதிர்ப்பு மனச்சார்பு உடைய இந்திய ஆதிக்க சாதி மனங்கள், கயர்லாஞ்சி வன்முறை, தாமிரபரணிப் படுகொலை, திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணிக்கப்பட்ட வன்முறை, குஜராத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்த வன்முறை என தூலமான வன்முறை தொடங்கி கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை. அப்படியானால், வன்முறை எதிர்ப்பு என்பது பக்கச்சார்பாய் இருக்கும் போது வன்முறையும் வன்முறை ஆதரவும் பக்கச்சார்பாய் இருந்தே தீரும். தென்மாவட்டங்களில் பள்ளர்களின் எழுச்சி சாதிக்கலவரமாக முன்வைக்கப்பட்டதைப் போலவே இப்போது சட்டக்கல்லூரி மாணவர் 'வன்முறை' குறித்துக் கதையாடப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு உண்மையை மட்டும் வரலாற்றின் மிதிபட்ட பாதங்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் துணுக்குகளிலிருந்து கண்டுபிடிப்பது சிரமமான காரியமில்லை. தலித்துகள், முஸ்லீம்கள் 'வன்முறை' நிகழ்த்துவது, குண்டுவெடிப்பை நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்படுவது ஆகிய 'வன்முறைச் சம்பவங்கள்' மட்டுமே பொதுப்புத்தியால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிரிப்பதற்கும் அழுவதற்குமான முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் ஆகப்பெரும் ஆளும் கருத்தியல் சித்தாந்தமான பார்ப்பனீயத்தால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட மேற்கண்ட மக்கள் குழுமங்கள் நிகழ்த்துவது வன்முறையல்ல, எதிர்வன்முறை என்கிற எதார்த்தம்தான்.

2. இரண்டாவது கேள்விக்கு வருவோம். போலீஸ் எப்போது வேடிக்கை பார்த்தது, எப்போது 'செயல்பட்டது?' என்கிற கணக்குகள் சாதியக் கறைபடிந்த வரலாற்றில் காணக்கிடைப்பவைதானே. தாமிரபரணி ஆற்றங்கரையில் தலித்துகளையும், பெண்களையும் அடித்து நொறுக்கி, 'கிருஷ்ணசாமி சிவப்பா இருக்கியான்னு பார்க்க வந்தியாடி' என்று பள்ளரினப்பெண்களைக் குண்டாந்தடியால் வன்மையாய்த் தாக்கி, விக்னேஷ் என்னும் ஒன்றரை வயதுக் குழந்தை ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டபோது போலீஸ் 'செயல்படத்தானே' செய்தது? அப்போது போலிஸ் 'செயல்பட்டதை' ஏன் ஊடகங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கேள்வி எழுப்பவில்லை? போலீஸ் இந்தச் சம்பவத்தில் மட்டும்தானா வேடிக்கை பார்த்தது? தமிழகம் முழுவதும் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் எவ்வளவு? இதுவரை எவ்வளவு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு புகார்கள் விசாரிக்கப்பட்டு ஆதிக்கசாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? போலீசு மட்டுமல்ல, நீதிமன்றம், அரசு என எல்லாமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏன் பொதுப்புத்தி கண்டிக்கவில்லை?

சரி , ஆதிக்கசாதி 'மனச்சாட்சி'களின் கேள்விகளை விடுவோம். ஊடகங்களாலும் 'பொது' மக்களாலும் கேட்கப்படாத கேள்விகளுக்கு வருவோம்.

1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

3. 'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு 'சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது' என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.

3. சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலில் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்த, மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களே மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆதிக்கச்சாதி மாணவர்கள் கிராமங்களில் தங்கள் சாதிக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்டக்கல்லூரியிலும் கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் கிடைப்பதாலும் பல்வேறு தொடர்புகளும், ஆதரவுச் சக்திகளும் சென்னையில் கிடைப்பதாலும் துணிச்சலாக எதிர்வன்முறையில் ஈடுபடுகின்றனர். சட்டக்கல்லூரியில் ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகக் கலைவிழாக்கள் நடத்துவதுண்டு. தேவர் சாதி மாணவர்கள் நடத்தும் கலைவிழாக்கள், முளைப்பாரி எல்லாம் எடுத்து, ஒரு தேவர் ஜெயந்தி குருபூஜை விழா போலவே இருக்கும். அப்போது சாதியுணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் முன்வைக்கப்படும். 'சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி என்றால், மதுரையில் முத்துராமலிங்கத்(தேவர்)தின் பெயரில் சட்டக்கல்லூரி வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இந்த கோரிக்கைகள் இப்போது படிப்படியாக வளர்ந்து, இந்த மோதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 'கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும், எஸ்.சி ஹாஸ்டல்கள் மூடப்பட வேண்டும்' என்கிற வரை வளர்ந்துள்ளன..

மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. இப்போதும் கூட தாக்கப்பட்ட சித்திரைச் செல்வன் என்கிற தலித் மாணவரை எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பி.ஜே.பியின் திருநாவுக்கரசரைத் தவிர வேறு எந்த பெரிய அரசியல் தலைவர்களும் சென்று நலம் விசாரிக்கவில்லை (மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட). சித்திரைச் செல்வன் கைதுசெய்யப்பட்டதைப் போலவே பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டும். ஆனால் தேவர் தரப்பிலிருந்து ஒரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகைய தனிமைப்படுத்தல்கள் தலித் மாணவர்கள் மத்தியில் எதிர் வன்முறை மனோபாவத்தையும் , பொதுவான மாணவர்கள் மத்தியில் சாதியக் கசப்பையும் உருவாக்கவே செய்யும்.

சட்டக் கல்லூரி பிரச்சனை - சில விஷயங்கள்

சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி வரும் வன்முறைச் சம்பவங்களைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் (போலவே சில வலைப்பதிவர்களும்). ஒரு சாரார் நடத்திய வன்முறையைப் பதிவு செய்யாமல் - அல்லது விமர்சிக்காமல் - இன்னொரு சாராரின் எதிர்வினையை மட்டும் தொடர்ந்து காட்டி வருவதன் பின்னுள்ள அரசியல் சிலருக்காவது புரிந்திருக்கும்.

சன் தொலைக்காட்சிக்கு ஒரு அரசியல், ஜெயா தொலைக்காட்சிக்கு இன்னொரு அரசியல். அவரவர்க்கான அரசியல் அவரவர்க்கு. பிர்த்தியூ போன்றவர்களின் துணையில்லாமலேயே தொலைக்காட்சி ஊடகங்களின் வன்முறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிக் காட்டப்படுவதனால் தொடர்ச்சியாக என்ன நடக்குமென எதிர்ப்பார்க்கப்பட்டதோ அவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நிலைமை மோசமாகலாம் என்ற என்னுடைய ஆருடம் பலிக்காமல் போக வேண்டும்.

நேற்று முன் தினம் சில சுவரொட்டிகள் அக்கல்லூரியின் சுற்றுப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன (அடிபட்டவர்களைச் சிங்கங்கள் என்றும் அடித்தவர்களை ஜாதிவெறியர்கள் என்றும், முக்கியமாக அம்பேத்கர் பெயரை ஒதுக்கி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன). நேற்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ராஜப்பா தாக்கப்பட்டிருக்கிறார். சில மாணவர்கள் இன்னொரு பிஎஸ்பி கவுன்சிலரான ஆர்ம்ஸ்டாராங்கைக் கைது செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாநிலமெங்கும் கல்லூரிகளிலும் சில பள்ளிகளிலும் ஆர்ப்பாட்டம் கலவரம் என நடந்து கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டியிலும் அதன் அருகிலுள்ள ஊர்களிலும் சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் பெயரிலுள்ள அம்பேத்கரை நீக்கப்படவேண்டுமென வேறு சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதைவிட மோசமான கோரிக்கையாக சட்டக்கல்லூரி விடுதியே மூடப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருப்பதாக அறிகிறேன்.

ஊடகங்களுக்கென்று எந்தத் தார்மீகக் கடமையும் கிடையாது போலிருக்கிறது. The New Indian Expressல் கோகுல் வண்ணன் (இவர் எழுதியதை ஏற்கனவே என்னுடைய இரு கவனக் குவிப்புகளில் குறிப்பிட்டுள்ளேன்) என்பவர் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். வேறு யாராவது எழுதியிருந்தால் பின்னூட்டம் மூலமாகத் தெரிவிக்கவும்.

நான் பார்த்தவரையில் வினவும் ஓரளவிற்கு டிபிசிடியும் இதுகுறித்து மாறுபட்ட பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். பலர் இதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகியிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாக்கியவர்களை மிருகங்கள், படிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்றெல்லாம் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள். ஒரு அனானி பின்னூட்டத்தில் குருகுலக் கல்வி முறையே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்!

எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாதென்றபோதும் இச்சம்பவங்களின் பின்னுள்ள அரசியல் ஓரளிவிற்குப் புரிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்சனையின் ஊற்றுக் கண்களைக் குறித்து அங்கு களப்பணி செய்துள்ள வளர்மதியை விரிவாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இவர் இப்போது திரட்டிகளில் இல்லாததால் பரவலான கவனிப்பு பெறாமல் போகக்கூடும். பரவாயில்லை, நானோ அல்லது லக்கி லுக் போன்ற பரந்த வாசகர்களைப் பெற்ற வேறு நண்பர்களோ மறுபதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவும் தலித்களுக்கு ஆதரவாகும் குரல் கொடுக்கும் சுகுணா திவாகரும் இது குறித்து எழுதவேண்டும். நேரம் கிடைத்தால் ரோசா வசந்தும் எழுத வேண்டும் என்பது என்னுடைய அசை. சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனாலும் இவர்கள் இதைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் மழை காரணமாக இப்பிரச்சனை குறித்து விரிவாக உரையாட இயலவில்லை. அச்சந்திப்பு குறித்து வந்த சில பதிவுகளைப் படித்தேன். பேசப்பட்டவற்றை முழுமையாக வேறு யாராவது பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

மாற்று ஊடகம் என அறியப்பட்ட இணையத்திலாவது குறைந்தபட்சம் மாற்றுச் சிந்தனைகள் பதிவாகட்டுமே.

வித்தியாசமான பதிவர் சந்திப்பு

சாதாரணமாக வலைப்பதிவர் சந்திப்பென்பது நண்பர்களைச் சந்தித்துப் பேசும் ஓர் இடம். புதிய பதிவர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்கள் என அறிமுகப்படலமும் அளவளாவுதலும் நடக்கும். சந்திப்பு முடிந்தபின், டீ குடிக்கச் செல்பவர்கள் டீக்கடைக்கும், மதுஅருந்த விரும்புபவர்கள் மன்ஹாட்டனோ அல்லது டாஸ்மாக்கோ செல்வதும் வழக்கம். சுபம்.

இம்முறை பாரி அரசு வருகிறார். அதன்பொருட்டு ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பாலபாரதி, அதிஷா பதிவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று லக்கி லுக் எழுதியிருக்கும் பதிவையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று முன் தினம் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த - தொலைக்காட்சி ஊடகங்களால் திரும்பத் திரும்பக் காட்டப்பட்ட- சம்பவங்கள் பலரை உணர்ச்சிவசப் படுத்தியிருக்கிறது. இது எதிர்பார்க்கக்கூடியதே.

இந்தப் பிரச்சனையின் உள்விபரங்கள் தெரிந்தவர்கள் நாளைய சந்திப்பிற்கு வந்து பேச இருக்கிறார்கள். ரோசா வசந்த் லக்கி லுக் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியது மாதிரி வெற்று மனிதாபிமானக் கூச்சலாக இல்லாமல் இச்சந்திப்பு சில புரிதல்களைக் கொடுக்கலாம். குறைந்த பட்சம் மாற்றுப் பார்வைகளை முன்வைக்குமென எதிர்பார்க்கிறேன்.

அதனால், வலைப்பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

இடம் : சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம்.
நேரம் : மாலை 5.30 மணிமுதல்
தேதி : 15.11.2008

பிகு :

(1) வழக்கமான விஷயங்களும் இருக்கும் :)

(2) பரவலாகத் தெரியவேண்டியதன் பொருட்டு தனிப்பதிவாக நானும் இதை இடுகிறேன்.

தெளிவு

அடிக்கடிக் கோபம் வரும்போது
அறைய யார்கிடைப்பார் எனக்கு
இன்றும் அப்படித்தான்
தேடிக்கொண்டிருந்தேன் வெகுநேரமாய்
மயங்கும் மாலைவேளையில்
தொடையில் உட்கார்ந்தது ஒரு கொசு
ஓங்கி அறைந்தேன்
கொசு இறந்தது நசுங்கிப் போய்
தொடையில் இருந்தது
என் ரத்தமா கொசுவின் ரத்தமா
இன்னொரு கொசு அகப்படாமலா போய்விடும்

(கவிதா சரன் அக்டோபர் 1992ல் வெளியானது)

சாரு நிவேதிதாவும் ஆபாசமும்

ரசம் சாதமும் அதற்குத் தொட்டுக் கொள்ள வழவழா வெண்டைக்காய் பொரியலும் சாப்பிடுபவர்களுக்கு, மிளகாய்க் காரமான (அதுவும் சாராயத்திற்குக் கடித்துக் கொள்ளும் மிளகாய்) சாரு நிவேதிதாவின் எழுத்துகள் ஆபாசமாய்த் தெரிவதில் வியப்பில்லை.

55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும் :)

தன்மேல் வீசப்படும் வன்மத்தைக்கூட இலக்கியமாக்கக்கூடிய சாமர்த்தியம் வெகு சிலருக்கே உண்டு. இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!

கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart. (இத்துடன் ஆஸ்கார் வைல்டின் பிரசித்திபெற்ற வாசகமான Life is imitating Artஐ இணைத்துப் பார்க்கலாம்). சிலர் அமைப்பியல் என்ற பெயரில் புரியாத ஆட்டம் போடுவதாக விமர்சித்து சாரு கவிதா சரணில் எழுதிய கட்டுரை ‘பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா. இப்படிக் கலை, அமைப்பியல் எனச் சகலத்தையும் பகடி செய்யும் எழுத்து சாருவினுடையது.

ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. (பின்னணியில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டதையே பெரிதாக அப்போது தினமலரிலிருந்து இடது சாரிப் பத்திரிகைகள் வரை எழுதியது இன்னொரு நகைச்சுவை). வேறுமாதிரியான வன்மம் சாருவின்மேல் இணையப் பக்கங்களில் விசிறியடிக்கப்படுகின்றது.

ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!

அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.

(தற்போது இடுகைகள் நீக்கப்பட்டுவிட்ட பதிவொன்றையும், ஒரு இணைய விவாதக் களத்தில் வைக்கப்பட்ட சில வாதங்களையும் படித்ததும் எழுதியது. இணையத்தில் பல இடங்களில் சாருவின் மீது துவேஷம் கக்கும் பதிவுகளைப் பார்க்கிறேன். அதற்கான சிறு எதிர்வினையே இது).

இரு கவனக் குவிப்புகள்

சர்வதேச கச்சா எண்ணை விலை குறைப்பால் ATF எனப்படும் விமான எரிபொருள் விலையைக் குறைத்திருக்கிறார்கள். நல்லது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்துநாட்களுக்கு முன் எல்லா மாநில முதலமைச்சர்களையும் விமான எரிபொருளுக்கான விற்பனைவரியைக் குறைக்கச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் (நம் தமிழகம் உட்பட). சில மாநிலங்கள் குறைத்தும் விட்டன.

இதற்கிடையில் போன வாரம் ATFற்கு சுங்க வரியான 5% லிருந்து முழு விலக்கு அளித்துள்ளார்கள். விமான நிறுவனங்களைக் காப்பாற்றாவாம். கோயல்களின் மல்லையாக்களின் நலன்தான் அரசின் கண்களுக்குத் தெரிகிறதுபோலும்.

போனமுறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றியபோது இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது என்றாலும் உள்ளூரில் விலையைக் குறைக்கவில்லை என்பது ஒருபுறம். ஜெனரேட்டர்களுக்கு உபயோகிக்கப்படும் டீசல் விலை 50 ரூபாய் என்பது இன்னொரு புறம். இதெல்லாம் இருக்கட்டும்.

கச்சா எண்ணை விலை எவ்வளவு உயர்ந்தபோதும், எவ்வளவுதான் கேட்டும் சாமனியர்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசலுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு தரப்படவே இல்லை. ஆனால் விலை கணிசமாகக்குறைந்த பிறகும், விமான எரிபொருளுக்குத் தந்திருக்கிறார்கள்.

அடப் பாவிகளா!

***

உத்தபுரம் அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தலித் வாலிபர் மரணம். சில நாட்களுக்கு முன்பு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஊர்மக்கள் அறவழியிலேயே போராடியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

சுரேஷ் அப்போதுதான் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார் - ஊரில் என்ன பிரச்சனை என்று பார்க்க. துப்பாக்கிக் குண்டு கழுத்தில் பாய்ந்திருக்கிறது.

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கோகுல் வண்ணன் எழுதும்போது, ‘தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்' என்கிறார்.