சொரூப நிலை

மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

(முதலில் செந்தூரம் ஏப்ரல் 1992ல் வெளியானது. நண்பர் நர்சிம்மின் வலைப்பூவில் அவருடைய ஐம்பதாவது இடுகையாக வெளியிடப்பட்டது).

பொலிடிக்கலி கரெக்ட்யாய் ஒரு கவிதை

தேவடியாள் என்றால்
வெகுஜனத்திற்குக் கரெக்ட்
பாலியல் தொழிலாளி என்றால்
அறிவுஜீவிகளுக்குப் பொலிட்டிகலி கரெக்ட்
யாராவது விளக்குங்கள்
எது எல்லோர்க்குமான பொலிட்டிகலி கரெக்ட்டென்று
இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்

கஞ்சா பிடிப்பதும் காய் அடிப்பதும்
பலருக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
ஹூக்கா பிடிப்பதும் முலைதிருகுவதும்
கதை எழுதுபவர்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்

குண்டு போடுவது எதிர்வினை என்றால்
ஸ்ரீனிவாஸ்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
அறம் அழிவென்றால் எல்லாமே கரெக்ட்
கரெக்ட் இன்கரெக்ட் கரெக்ட் இன்கரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்

பொலிடிக்கலி கரெக்ட்டாகக் கவிதைஎழுத ஆசைப்படுகிறான் அரசியல் கலப்பை (முண்டக் கலப்பை அல்ல) விரும்பாத பொலிடிக்கலி கரெக்ட் பர்ஸன்.

(நண்பர் நர்சிம்மின் வலைப்பதிவில் அவரது ஐம்பதாவது இடுகைக்காக எழுதப்பட்ட கவிதை)

காமக் கதைகள் 45 (23)

அதீதனின் காதலி ரோகிணி மாற்றலாகி பெங்களூர் சென்றுவிட்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் சந்தித்துக் கொண்டிருந்தது மாதமொருமுறையாகிவிட்டது. சந்திக்கும்போதெல்லாம் அவனையும் பெங்களூருக்கு வரச் சொல்வாள். ம்ஹூம், அது வேலைக்கு ஆகாது. ‘குளிர்ல போர்வையே வேண்டாம்டா...' எனக்கூடச் சொல்லிப் பார்த்தாள். அதீதன் மசிவதாயில்லை (தமிழ்நாட்டை விட்டுப் போகக்கூடாதென்ற கொள்கைப் பிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை, அவனுக்கு சைனஸ் தொல்லை, அவ்வளவுதான்!).

எஸ்டிடி கட்டணம் விஷம்போலிருந்த காலமது. வேறுவழி.. அஞ்சல்துறையே கதி!

தினமொரு கடிதமெழுதுவான் அவளுக்கு. முதலில் இலக்கியமாக ஆரம்பிக்கும் கடிதம். நடுவில் அவன் வாசித்த புத்தகங்கள், நடந்த சம்பவங்கள், அவன் நடக்கக்கூடாதா என ஏங்கிய விஷயங்கள் எனக் கலந்துகட்டி இருக்கும். ஆனால் முடிக்கும்போது விரகதாபத்தை வெளிப்படுத்துவதாகவே முடியும். இதை அவன் வேண்டுமென்று செய்யவில்லையென்றாலும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருந்தது.

ரோகிணி வேறு நினைப்பே இல்லையா உனக்கு எனக்கோபப்படுவாள். 'உன் லெட்டர யாராவது பார்த்துடப்போறாங்களேன்னு பயமாவே இருக்கு...' கையில் பிடித்துக்கொண்டு தூங்குவது அவளுக்கெங்கே தெரியப் போகிறது!

i would like to kiss you... especially 'there' என முடித்திருந்தான் ஒரு கடிதத்தை.

அவனிடமிருக்கும் ஒரு நல்ல குணம் அந்தக் கடிதங்களை அவள் வீட்டிற்கு அனுப்ப மாட்டான். அலுவலக முகவரிக்கே அஞ்சல் செய்வான்.

ஒருமுறை அவனுடைய கடிதமொன்றைக் காட்டினான் எனக்கு :

'மின்விசிறிச் சத்தம் தெளிவாய்க் கேட்கும் அமைதி. இருளில் இருக்கிறது இரவின் அழகு. அறைக்குள்ளோ டியூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம் தழுவியிருக்கிறது. தூரத்து நாய்க்குறைப்பொலிகூட சங்கீதமாய்க் கேட்கிறது இப்போது உனக்கான இக்கடிதத்தை ஆரம்பிக்கையில்...

என்ன காரணத்தினாலோ இன்று மதியத்திலிருந்து உன் நினைவுகளே என்னைச் சூழ்ந்துள்ளன.

பார்வதி உன்னை விசாரித்ததாய் எழுதச் சொன்னாள். பெரிய நித்யாவும் ரியாஸும் உன்னுடனான என் தொடர்பு பற்றி விசாரித்தார்கள். பகலுக்கும் இரவுக்குமான இடைவெளிதான் உனக்குத் தெரியுமே. நம் காதலை - உன் விருப்பப்படி - நட்பென்றே சொல்லிவருகிறேன். எனக்கு நெருக்கமான அவர்களிடமும்.

ஒவ்வொரு மிடக்காக மது அருந்தியபடி வளர்கிறது இக்கடிதம்..'

என ஆரம்பித்திருந்தவன் கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘எனக்கு இப்பொழுதே உன்னைக்கூட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.

அவள் ஒற்றைவரியில் பதில் எழுதியிருந்தாள்.

'நாம் மாதமொருமுறைகூட இனி சந்திக்கத் தேவையிருக்காதென நினைக்கிறேன். நீதான் முழு சம்போகத்தையும் கடிதத்திலேயே முடித்துவிடுகிறாயே...'

பதிவரசியல்

லக்கி லுக்கிற்கு வந்த சில பின்னூட்டங்களை அவர் வெளியிடவில்லையென கொஞ்ச நாட்களாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கந்த அனுபவமில்லை.

நான் பதிவெழுத வருமுன்பே அவருடைய கருத்துகளை மறுத்து எழுதிய பின்னூட்டங்களை அவர் வெளியிட்டே உள்ளார்.

ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??

லக்கி லுக்கின் எழுத்துகளிள் எனக்குப் பிடித்தது அவரது அரசியல் நிலைப்பாடு.

வால்பையனின் ஞாநி பற்றிய பதிவில் சில விஷயங்கள் ஏற்புடயவையே. ஆனால் அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன. அவர் அரசியல் - நீக்கம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்யும் சில காரியங்களும். அவ்வளவு சிம்பிள் இல்லை வால்பையன்.

இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!

***

நிறைய எழுதுவதா குறைவாய் எழுதுவதா எனச் சிலருக்கு அவ்வப்போது சம்சயம் வந்துவிடுகிறது. கநாசு ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் ஒப்பிட்டால் இங்கு பதிவில் 'நிறைய' எழுதுபவர்கள் குறைவாகவே எழுதுகிறார்கள். நிறைய எழுதவேண்டும், தேர்ந்தெடுத்து, நிறைவாய்ப் பதிவிட்டால் நலம்! சிலர் சினிமா விமர்சனங்களாகவும் மொக்கையான கருத்து உதிர்ப்புகளாகவும் எழுதித் தள்ளுகின்றனர். இன்னும் சிலர்... சொல்லவே வேண்டாம் கட் & பேஸ்ட்தான்!

***

ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழிஷ்.காம் (www.tamilish.com) நிறைய பேரால் பார்க்கப்படுகிறது. இது வழக்கமான திரட்டியல்ல. சிலர் வாக்களித்து பதிவுகளையோ அல்லது செய்திகள் / படங்களையோ பிரபலமாக்குகிறார்கள். அப்படிப் பிரபலாமக்கப்பட்டவை முதல் பக்கத்தில் சில மணிநேரங்கள் இருக்கின்றன. அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே.

***

என்னுடைய காமக் கதைகளுக்குப் பின்னூட்டங்கள் திரட்டப்படாதென தமிழ்மணம் அறிவித்திருந்தது முன்பு. ஆனால் போன கதைக்கு *** என வந்து பின்னூட்டங்கள் திரட்டப்பட்டிருந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. *** பார்த்து ஆவல் தூண்டப்பட்டு அதிக வாசகர்கள் வந்துவிடுகிறார்கள். நம் மக்களின் செக்ஸ் வறட்சி அப்படி!

எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு :)

***

திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.

***

R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.

இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!

***

காலச்சுவடு செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவர்களது பத்திரிகையை நூலகங்களில் வாங்கவில்லையென்றால் அது கருத்துரிமையின் குரலை நெறிக்கும் செயலாம். இதுபற்றி வினவு விரிவாக எழுதியிருக்கிறார் (http://vinavu.wordpress.com). படித்துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.