no title

வருகிறார்கள் போகிறார்கள்
நொப்பும் நுரையுமாக
ஓடிச் செல்கிறது பேராறு
தலையாட்டும் தென்னைகள்
காலம் காட்டிச் செல்லும்
பல்வேறு காட்சிகள்
பிரக்ஞையின் அடியிலிருந்து
எழும்பி
விலகிக் கொண்டிருக்கிறேன்

6 comments:

Mohandoss said...

ஹாஹா

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம் புறப்பார்வைகள் உண்மையான தியான நிலையின் குறியீடு....(நம்பிக்கை உண்டோ)
தலைப்பிடாதது மிகவும் பொருத்தமாயுள்ளது... அநாதிக்கேது அடையாளம்.. வாழ்த்துக்கள் சுந்தர்.

தறுதலை said...

//
வருகிறார்கள் போகிறார்கள்
நொப்பும் நுரையுமாக
ஓடிச் செல்கிறது பேராறு
//

எனக்கென்னவோ கவிதை இங்கேயே முடிஞ்சிட்டுன்னு தோனுது. மத்ததெல்லாம் வெறும் வார்த்தை அடுக்குகள் மட்டுமே.

முதல் மூன்று வரிகள் அழகான Hஐக்கூ....
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மோகன்தாஸ், அப்படியில்லை, கி கி.

கிருத்திகா, நன்றி.

தருதலை, நன்றி.

Unknown said...

நன்றாக உள்ளது கவிதை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.