மரணத்தை அஞ்சுபவன்

சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான்
செய்தி கிடைத்தது எனக்கு
மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை
அருகில் நெருங்கக்கூட விடவில்லை
அதுவே தற்கொலைக்குக் காரணமென்றான் செந்தில்
இல்லையில்லை
கடன்காரர்களின் தொல்லை என்றான் ஃபிரெடரிக்
மூன்றாவதாய் நுழைந்த சங்கர்
இருவரையும் மறுத்தான்
லட்சோப லட்சம் மக்கள் தற்கொலைக்குக் காரணமான
தீராத வயிற்று வலியே சரவணனைத்
தற்கொலைக்குத் தள்ளியது என்றான்
நல்ல வேளை
இயற்கையாகச் செத்தான் என யாரும் சொல்லவில்லை
அந்த வரையில் நிம்மதிதான் எனக்கு

0 comments: