சில கேள்விகள், சில பதில்கள்

முதலில் : சினிமா பற்றிய கள ஆய்விற்காக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இணையத்தைப் பாவிப்பவர்கள், அதிலும் தமிழில் எழுதுபவர்கள் மிகக்குறைவே - மிகச் சிறிய segment. சரியாய் வருமா என யோசித்துப் பார்க்கலாம். மற்றபடி இக்கேள்விகளை எழுப்பி விடைதேடுவது சுவாரசியமான விளையாட்டுதான்.

நான் நிறைய சினிமா பார்ப்பவன் இல்லை. தொலைக்காட்சி சினிமாக்களைக் கூட எப்போதாவதுதான் பார்ப்பேன் (25 வயதுவரை வாரம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன், பிறகு என்ன காரணத்தினாலோ குறைந்துவிட்டது). அதனாலேயே நர்சிம் கூப்பிட்டபோது வேறு ஒருவரைக் கூப்பிடச் சொல்லியிருந்தேன். குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன் என்பதால் இப்போது இப்பதிவு. கூப்பிட்ட நர்சிம் & வால்பையனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஐந்து அல்லது ஆறு வயதிலிருந்து. அம்பத்தூரில் இருக்கும் ரங்கா டூரிங் கொட்டாயில் ஒரு எம்ஜிஆர் படம். முன்-வரிசையில் மண் தரையும் பின்னால் கையில்லா மடக்கு நாற்காலிகளும் கொண்ட கீத்துக் கொட்டாய் திரையரங்கம். ஒரே சத்தமாக இருந்த நினைவு. நடுநடுவில் விற்றுக் கொண்டிருந்த திண்பண்டங்களைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த ஞாபகம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி. அதற்குமுன் பாபா. சாதாரணமாக ரஜினி படங்களைத் திரையரங்கிலோ அல்லது வேறு மார்க்கத்திலோ பார்த்துவிடுவேன். இன்னும் குசேலன் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம், டீவீடி, வீட்டில். குடும்பம் / காதலி / நண்பனின் துரோகம்தான் பிரதானமாய்த் தெரிந்தது. சிறுபொன்மணி அசையும் பாடல் பழைய ஞாபகங்களைக் கிளறியது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ரத்தக் கண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினியின் அ-அரசியல் பிரவேசம் 1995ல். லும்பன்களின் அரசியல் பற்றி ஜெயமோகன் தினமணியில் எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது. லும்பன்கள்தான் வந்துட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றியது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எதுவும் தாக்கியதில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது. நிழல் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். கனவு இதழ்களில் வரும் கட்டுரைகளையும். மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரு, யமுனா எழுதும் கட்டுரைகளே அதிகம் வாசிப்பவை.

சினிமா பற்றிய புனைவெழுத்துகளை நிறைய வாசித்திருக்கிறேன். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, அசோகமித்திரனின் நாவலொன்று, பல சிறுகதைகள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

தினமும் தொலைக்காட்சியில் காலையில் சிறிது நேரம் பார்த்துக் கேட்பதுதான் (காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. அப்ப படிப்பா? டாய்லட்டில் செய்தித்தாள்கள்தான்!). இளையராஜா, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் பிடிக்கும். 18 - 20 வயதில் சினிமா மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பார்த்திருக்கிறேன். அதற்கும் முன்னர், பள்ளிப் படிப்பின்போது சினிமா பாடல் வார்த்தைகளைப் பாலுறுப்பு வார்த்தைகள், ‘கெட்ட' வார்த்தைகள் கொண்டு பதிலீடு செய்து பாடுவது ஒரு fun.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரேயின் சில படங்கள் தொலைக்காட்சியில் இரவுநேரத்தில் தொடர்ந்து காட்டியபோது பார்த்திருக்கிறேன். உலக சினிமா என்றால் புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ, குங்ஃபூ ஆஃப் செவன் ஸ்டெப்ஸ், 36th சேம்பர் ஆஃப் ஷாவலின் மாதிரியான படங்களே அதிகம் பார்த்தது. கோடார்டின் here and elsewhere அப்புறம் அகிரா குரசாவாவின் சில படங்களும் - அவரின் பல படங்களை ஒரு வார காலத்திற்கு chennai film society மூலமாக Russian Cultural Centre-ல் திரையிட்டபோது - ஆண்டு 1994).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்; பெரிதாக இல்லை. கொஞ்சம் தான். அதன் வசன கர்த்தா - தயாரிப்பாளர் நண்பர் என்பதால் இதைச் செய்தேன். பிடித்திருந்ததாகத்தான் நினைவு. படம் வெளியாகி தோல்வியடைந்தது. பிறகு வேறெதுவும் இல்லை. மீண்டும் செய்யும் எண்ணமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெரியலீங்களே :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குப் பெரிதாக பாதிப்பிருக்காது.

சிலர் புணர்ச்சிக்கு புதிது புதிதான மன பிம்பங்கள் கிடைக்காமல் திண்டாடலாம். ஊடகங்கள் பரபரப்பிற்கு வேறு ஏதாவது தேட வேண்டியிருக்கும். சினிமாவை நம்பி இயங்குபவர்கள் திண்டாடிப்போவர். இந்தி சினிமா தமிழகத்தை ஆட்கொள்ளும் அபாயம் ஏற்படலாம்.

ஐந்து பேரைக் கூப்பிடணுமா.. சரி...

1. டிபிசிடி
2. கென்
3. டி ஜே தமிழன்
4. சுகுணா திவாகர்
5. மோகன் கந்தசாமி

பார்வைப் பிழை

தரையில் படுத்து
வெளிச்சம் தழுவிய
சுவரைப் பார்த்தேன்
கையைக் குவித்துக் கொண்டு -
அதன் ஊடே
சிறிதாய்ச் சுவர்
மட்டுமல்லாது
சின்னச் சின்ன மேடுபள்ளம்
சுவரெங்கும்
கையை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

சில பதிவுகள் சில விமர்சனங்கள்

தமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :

பரிசல்காரன் (http://www.parisalkaaran.com/)

எல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.

தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.

ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)

இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(

நல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting!

நர்சிம் (http://www.narsim.in/)

வெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.

சரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை வடிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்!

அனுஜன்யா (http://www.anujanya.blogspot.com/)

சமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.

போலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.

யாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.

தனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே!

லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம்! கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது!

கென் (http://www.thiruvilaiyattam.com/)

இதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும்! மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.

இவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.

காமக் கதைகள் 45 (24)

வெற்றிக்குப் பார்த்திருந்த பெண்ணுடன் அதீதனுக்கு தொடர்பிருந்தது, அந்தப் பெண் பெயர் முக்கியமில்லை, அவள் வேறொருவனைக் காதலிப்பது தெரிந்தும் வெற்றி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான், அதில் அவளுக்கு வெற்றிமேல் தீராத கோபம், அதீதன் தான் அந்தக் காதலன் என்பது வெற்றிக்குத் தெரியாது,

அலுவலகத்தில் உடன்வேலை செய்தவனுக்கு பயிற்சிக்கென மலேஷியா செல்ல வேண்டியிருந்தது. அதீதனும் ஒட்டிக் கொண்டான். அங்கு சீன மற்றும் தாய்லாந்து அழகிகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். ஹோட்டல் 27வது மாடி நீச்சல் குளத்தைச் சுற்றி பொன்நிற மங்கைகள் தொடை தெரியும் மிடியுடன் அசைந்தசைந்து நடந்து கொண்டிருந்தனர். அதீதனுக்கு மேலே விழுந்து புரள வேண்டும் போலிருந்தது.

திருமணமானபின்னும் அதீதனால் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவருவதை நிறுத்தவில்லை, மனதும் உறுத்திக் கொண்டேயிருந்தது, வெற்றி ஊரிலில்லாத போதெல்லாம் தகவல் அனுப்புவாள், வீட்டிற்குச் சென்றதும் அவள் முத்தமிடும்போது அவனுக்கு வெற்றியின் முகம் நினைவில் ஆடியது,

மலேஷிய ஹோட்டல் ஸ்பெஷல் மசாஜில் இரண்டு வகையுண்டு:

(1) நீங்கள் குப்புற இரண்டு கால்களையும் இணைத்தபடி படுத்திருக்க மசாஜ் செய்யும் பெண் உங்கள் கழுத்திலிருந்து கால்கள் வரை பிடித்துவிடுவது. இதில் முக்கியமானது அந்தப் பெண் நிர்வாணமாயிருப்பாள் என்பதும் தன்னுடைய பின்புறத்தால் மசாஜைச் செய்வாள் என்பதும். உங்கள் பிருஷ்ட பாகத்தில் அவளுடைய பிருஷ்ட பாகம் தொட்டு, பிறகு பிரிவது தனிசுகம்! பூப்பந்து கொண்டு அழுத்தித் தடவுவது போல இருக்கும் என்பது அதீதனின் வார்த்தைகள்.

(2) உங்கள் முதுகில் தலையணையை வைத்து அதன்மேல் அவள் சாய்ந்து உங்களை இறுக்கி அணைத்து மசாஜ் செய்வது. நெட்டி முறியும் சத்தங்கள் கேட்கவே போதையாயிருக்கும். தலையணை இல்லாமல் செய்யக்கூடாதா என ஏங்கவைக்குமிது.

நண்பனை நச்சரிக்கத் துவங்கினான் ஸ்பெஷல் மசாஜிற்கு.

வெற்றியைப் பழிவாங்கவே அதீதனுடன் அவள் உறவுவைத்திருப்பதாய்ச் சமாதானம் செய்வாள், உனக்கு அதில் உடன்பாடில்லை என்றால் வேண்டாம், நான் வேணுமா வேணாமா, கையில்லா நைட்டியைப் பார்த்தபடி மென்று முழுங்குவான்,

இரண்டு மசாஜையும் செய்துகொள்ளும்போது அவனது மனம் அவளுடனான சம்போகத்திலேயே கழிந்தது. சின்னச் சின்ன அங்கங்களுடன் தாய்லாந்துக்காரி பொம்மை போல் இருந்தாள். அவளிடம் எப்படியாவது கேட்டுவிடவேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தான்.

இலவச சுகத்தை விடவும் முடியவில்லை, நண்பனுக்குத் துரோகம் செய்வதாய்த் திட்டும் மனதையும் ஒன்றும் செய்யமுடியவில்லை,

மசாஜ் முடித்துவிட்டு தயங்கியபடி தாய்லாந்துக்காரி போய்விட்டாள்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களது உறவு,