போர்ஹேவும் நானும் (தமிழில் : தர்மு சிவராம் பிரமிள்)

1986ம் ஆண்டு போர்ஹேவின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. அதனையடுத்து வெளிவந்த 'லயம்' இதழில் 'போர்ஹேயும் நானும்' என்னும் போர்ஹேவின் சிறுகதையை பிரமிள் தமிழாக்கம் செய்தார். நண்பர் கால சுப்பிரமணியம் அனுமதியுடன், அந்த தமிழாக்கம் இங்கே வெளியிடப்படுகிறது. ஆர்வமுள்ள பதிவர்களுக்காக இந்த தமிழாக்கத்தின் கீழேயே, ஆங்கில ஆக்கமும் வெளியிடப்படுகிறது. ஆனால், இங்குள்ள ஆங்கில ஆக்கத்தை வைத்துதான் பிரமிள் தமிழாக்கம் செய்தார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஆங்கில ஆக்கம் வெளிவந்தது 1999ம் ஆண்டு. இனி பிரமிளின் தமிழாக்கத்தை வாசிப்போம்.

போர்ஹேவும் நானும்

போர்ஹே என்றழைக்கப்படுகிற மற்றவனுக்குத்தான் எல்லாம் நிகழ்கின்றன. போனஸ் ஏரஸ் நகரின் தெருக்களூடே நடக்கும் நான், இப்போதெல்லாம் யந்திரத்தனமாக நின்று ஒரு கட்டிடத்தின் வாசல் வளைவை அல்லது கேட் ஒன்றின் இரும்பு வேலைப்பாட்டைப் பார்க்கிறேன். கடிதங்கள் மூலமோ, புரபஸர்களின் பட்டியல் ஒன்றிலோ, வரலாற்று அகராதியிலோ இருந்துதான் போர்ஹே பற்றி எனக்குத் தெரிகிறது. மண் ஒழுக்கு மூலம் நேரம் காட்டும் கண்ணாடி ஜாடிகள், தேசப்படங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்செழுத்துக்கள், காபியின் ருசி, ஸ்டீவன்ஸனின் உரைநடை ஆகியவை எனக்குப் பிடிக்கும். அவனுக்கும் இவை எல்லாம் பிடிக்குமெனினும் ஒரு நடிகனின் பாவனைகளாக இவற்றை ஆக்கிவிடுகிற பெருமைக் குண்த்துடந்தான் இவற்றை அவன் விரும்புகிறான். எங்களிருவரிடையே உள்ள உறவு விரோத ரீதியானது என்றால் அது மிகைப்பட்ட கூற்று. நான் என்னை வாழ அனுமதிக்கிறேன். இதன் காரணம் போர்ஹே தனது இலக்கியத்தைச் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். அவனது இலக்கியம் என்னை நியாயப்படுத்துகிறது. அவன் சில அர்த்தமுள்ள பக்கங்களைச் சாதித்திருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்வது கடினமல்ல. ஆனால், அந்தப் பக்கங்கள் என்னை ரட்சிக்கமாட்டா. ஏனெனில் நல்லது எதுவும் எவருக்கும் உரியதல்ல, அவனுக்கும் கூட. அவை மொழிக்கும் பாரம்பரியத்துக்கும் உரியவை. மேலும், என் விதி நான் அழிவடைய வேண்டும் என்பதுதான். அவனிடத்தில் எனது ஒரு கணம் மட்டுமே ஜீவிக்க முடியும். எல்லாவற்றையும் பொய்யாக்கிப் பெரிதுபடுத்துகிற அவனது வக்ரமான நடைமுறை எனக்குத் தெரியுமெனினும் கொஞ்சம் கொஞ்சமாக யாவற்றையும் அவனுக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தனது ஸ்திதியிலேயே ஒவ்வொரு வஸ்துவும் நீடிக்க நாடுகிறது என்பது தத்துவவாதி ஸ்பைனோஸாவுக்குத் தெரிந்திருந்த ஒன்று. கல் கல்லாகவே இருக்க விரும்புகிறது. புலி புலியாக. (நான் இருப்பது உண்மையானால்) என்னில் அல்ல, போர்ஹேயிலேயே தங்கிவிட வேண்டும். ஆனால், அவனுடைய புத்தகங்களில் என்னை நான் காண்பதை விட அதிகமாக நான் என்னைக் காண்பது மற்றவர்களின் புத்தகங்களிலும் பெரு முயற்சியுடன் மீட்டப்படுகிற ஒரு கிட்டாரின் இசையிலும்தான்.

பல வருஷங்களுக்கு முன்னால் அவனிடமிருந்து விடுபடுவதற்கு எடுத்த முயற்சியில் நான் புறநகர்ப் பிராந்தியப் புராணங்களிலிருந்து விடுபட்டு, காலத்துடனும் காலாதீதத்துடனும் விளையாடக் கிளம்பினேன். ஆனால், இப்போது அந்த விளையாட்டுகள் போர்ஹேக்கு உரியவை ஆகிவிட்டன. நான் புதியவற்றை இனி உருவாக்க வேண்டும். இப்படியே எனது வாழ்வு ஒரே பறந்தோடலாக இருக்கிறது, நான் எல்லாவற்றையும் இழந்தபடியே பறந்தோடுகிறேன், எல்லாவற்றையும் மறப்புக்கு அல்லது அவனுக்கு இழந்தபடி.

எங்களிருவருள் யார் இந்தப் பக்கங்களை எழுதியவன் என்று எனக்குத் தெரியவில்லை.


Borges and I

It's Borges, the other one, that things happen to. I walk through Buenos Aires and I pause - mechanically now, perhaps - to gaze at the arch of an entryway and its inner door; news of Borges reaches me by mail, or I see his name on a list of academics or in some biographical dictionary. My taste runs to hourglasses, maps, eighteenth - century typefaces, etymologies, the taste of coffee, and the prose of Robert Louis stevenson; Borges shares those preferences, but in a vain sort of way that turns them into the accoutrements of an actor. It would be an exaggeration to say that our relationship is hostile - I live, I allow myself to live, so that Borges can spin out his literature, and that literature is my justification. I willingly admit that he has written a number of sound pages, but those pages will not save me, perhaps because the good in them no longer belongs to any individual, not even to that other man, but rather to language itself, or to tradition. Beyond that, I am doomed - utterly an inevitably - to oblivion, and fleeting moments will be all of me that survies in that other man. Little by little, I have been turning everything over to him, though I know the perverse way he has of distorting and magnifying everything. Spinoza believed that all things wish to go on being what they are - stone wishes eternally to be stone, and tiger, to be tiger. I shall endure in Borges, not in myself (if, indeed, I am anybody at all), but I recognize myself less in his books than in many other's, or in the tedious strumming of a guitar. Years ago I tried to free myself from him, and I moved on from the mythologies of the slums and outskirts of the city to games with time and infinity, but those games belong to Borges now, and I shall have to think up other things. So my life is a point - counterpoint, a kind of fugue, and a falling away - and everything winds up being lost to me, and everything falls into oblivion, or into the hands of the other man.

I am not sure which of us it is that's writing this page.

(Jorge Luis BORGES, Collected Fictions (Page No. 324), Translated by ANDREW HURLEY, Penguin Classics Deluxe Edition, 1999 Edition)

அடிக்குறிப்புகள்:

1. பிரமிளின் தமிழாக்கத்தில் வெளிவந்த போர்ஹேவின் மற்றொரு சிறுகதையை வாசிக்க http://naayakan.blogspot.com/2009/07/1_21.html

2. ஒரு அறிமுகத்துக்குப் (டிரெய்லர்) பின் நண்பர் பிரேமின் தமிழாக்கத்தில் வெளிவந்த போர்ஹேவின் முக்கியமான சிறுகதையான 'லோன், உக்பார், ஓர்பிஸ் தெர்த்துய்ஸ்', (Tlon, Uqbar, Orbis Tertius) 'சிதைவுகளில்' (http://naayakan.blogspot.com/) வெளிவரும். உலகின் குறிப்பிடத்தகுந்த பல நாவல்களுக்கு உந்துதலாக இருந்தது போர்ஹேவின் இந்த சிறுகதைதான் என்கிறார்கள்.

3. அடுத்தவாரம், 'மொழி விளையாட்டில்' (http://jyovramsundar.blogspot.com/) நண்பர் கால சுப்பிரமணியம் தமிழாக்கம் செய்த நபக்கோவின் சிறுகதையொன்று (உலகின் முக்கியமான நாவல்களில் ஒன்றான 'லோலிதா'வை எழுதியவர்) இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளிவரும்.

10 comments:

Ken said...

மிகத்தேவையான ஒன்று சுந்தர்ஜி நன்றிகள்

முடிஞ்சா பிடிஎஃப் மாத்தி வச்சா நிறைய பேருக்கு வாசிக்க உதவிகரமா இருக்கும் பதிப்புரிமை பிரச்சனை இல்லாட்டி நானே மாத்தி தரேன் :)

குப்பன்.யாஹூ said...

Million thanks Sundar. You are really doing great contribution to the tamil readers.

வாழ்க நீ எம்மான், வாழிய பல்லாண்டு.

நர்சிம் said...

நன்றி.

மண்குதிரை said...

very useful for me. thank you sir!

யாத்ரா said...

பகிர்வுக்கு நன்றி.

நந்தாகுமாரன் said...

செம கதைங்க ... பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி
ரொம்ப பெரிய விஷயம் பண்ணிட்டு இருக்கீங்க சுந்தர் ஜி

Ronin said...

Jyovram:

Thanks for introducing outside literature in Tamil..

Regards,

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், குப்பன் யாஹூ, நர்சிம், மண்குதிரை, யாத்ரா, நந்தா, நேசமித்ரன், ரானின்... நன்றி.

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு சுந்தரா...