குடி, இருத்தல் மற்றும் எழுதுதல் பற்றி இரு கவிதைகள்

ஏன் இப்படிக் குடிக்கிறாய்
என்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை

*

குழம்பி
யோசித்து
தடுமாறி
எழுதி
பழகி
ஆரம்பித்தேன்
யோசித்து
தடுமாறி
குழம்பி
கைவிட்டேன்

7 comments:

Vaa.Manikandan said...

//ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை//


ஏன் இப்படி இருக்கிறாய் என்று ஒருவன் சற்றே நெருக்கம் இல்லாதவன் நம்மை கேட்க இடமளிப்பது எவ்வளவு துக்ககரமானது? நம்மை ஒரு அடி தாழ்த்திவிடும் வினா.

இதை அனுப‌வித்திருந்தாலும் க‌விதையாக்க‌ யோசித்த‌தில்லை. அட‌ நாம் எழுதியிருக்க‌லாமே என்று ந‌ம்மை நினைக்க‌ வைக்கும் க‌விதைக‌ள் அவ்வ‌ள‌வு விரைவில் ம‌ற‌க்காது.

இது அப்ப‌டிப்ப‌ட்ட‌து.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிகண்டன்.

இரா. சுந்தரேஸ்வரன் said...

இரு க‌விதைக‌ளும் என‌க்கு பிடித்திருக்கின்ற‌ன‌

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுந்தரேஸ்வரன்.

அபிமன்யு said...

//ஏன் இப்படிக் குடிக்கிறாய்
என்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை//

தினமும் நிகழ்கிற/நிகழ்த்துகிற வன்முறைதான்..

எனக்கு இருகவிதைகளும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது இதுதான் முதல்முறை..நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அபிமன்யு.

கென் said...

ஏன் இப்படிக் குடிக்கிறாய்
என்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை

இந்தக்கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு தல

குழம்பி யோசித்து நகுலனின் நினைவுப்பாதையில் புகுந்த ஞாபகம்