பெரியவன்

தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்து கொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின்
மோதல் இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காக தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறுவயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டீவி பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக் கொள்ளும்
பூனை எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்

3 comments:

ஆடுமாடு said...

//எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்//
நல்லா இருக்கு சார்.

http://kadananathi.blogspot.com/

இது என் கவிதை ஏரியா.
படிச்சுட்டு சொல்லுங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

உங்களை எனக்கு அய்யனார் பதிவுகள் மூலமாகத் தெரியுமே... தமிழ்வெளியில் சமீபத்தில் இணைந்த பதிவர்கள் பட்டியலிலும் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இருப்பது சென்னையில் தானா.?

ஆடுமாடு said...

//நீங்கள் இருப்பது சென்னையில் தானா.?//

ஆமா சார், சென்னைதான்.