க.ர. அதியமான் ஒரு பதிவிட்டுள்ளார். பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html. முழுக்க முழுக்க மறுக்கப் பட வேண்டியது இக்கட்டுரை. எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.
/ /ல் வருவது அவர் பதிவிலிருந்து எடுத்தது. வேறு வழியில்லை. 'மேற்கோள் யுத்தம்' செய்து தான் ஆக வேண்டியுள்ளது :)
/முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்/
சரி, விளக்குங்களேன். தெரிந்து கொண்டே ‘எதிர்க்கிறோம்'.
/இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்படி ? உலகமயமாக்கல் இல்லாமல் இந்த
அரங்கமே சாத்தியமில்லையே ? முரண் தொகை !!!/
1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?
2. முரண் தொகை எனச் சொல்வது முரண்நகையைத் தானென நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் இயங்குவதால் அதில் உள்ள பாதகமான அம்சங்களை விமர்சிப்பதில் என்ன முரண்நகை இருக்க முடியும்.? இதை இவர் செய்வதில்லையா.?
/சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் கடந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)..../
இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)
சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?
/சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?/
சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.
/இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி./
உலகமயமாக்கலின் 'சாதனைகள்' :
1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
போனது
2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது
3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது
4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?
பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.
அவர் பதிவில் எழுதிவற்றை முழுவதுமாக எடுத்து எழுதியிருக்கிறேன். பிற அவர் பதில் கண்டு...