Showing posts with label எ-கவிதை. Show all posts
Showing posts with label எ-கவிதை. Show all posts

எதைப் பற்றியும்

பூனை ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக் கொண்டிருந்தது
படித்துவிட்டுப்
புரியவில்லையே என
யோசித்துக் கொண்டிருந்தேன்
மழை பெய்யப் போவது போல்
வந்த மேகங்களைக்
கிழித்துக் கொண்டு
சூரிய ஒளி
கல்யாண மேடையில்
தாலி கட்டிக் கொண்டிருந்தான்
முறைத்துப் பார்த்துப் போனது
நான் காடு பள்ளம்

(நடு கல் 14 - 1994 ஏப்ரலில் வெளியானது)

1/2 பியருக்கு வந்த மப்பு

நமஸ்காரம்!
சாலமன் கிரண்டி பார்ன் ஆன் மன்டே!
போஸ்டர் திங்கற கழுதை, அறியுமோ
இது ஜென்னும் இது ரஜினின்னும்?
எது எப்படியோ
பூனையும் பொடக்காலில சிரிக்குது.
கேரம் போர்டு விளையாடு பாப்பா
உன் வீட்டில் கேரம் போர்டு
இல்லாமல் இருக்கலாமா பாப்பா?
டப்பா டப்பா வீரப்பா எப்படா மேரேஜ்?
M.G.R. சண்டை
பானுமதி கொண்டை
கொண்டையில் என்ன பூ?
கூடையில் குஷ்பு
உனக்கென்னப்பா உங்கப்பா Father
உங்கம்மா Mother
நல்ல மாட்டுக்கு மூணு சூடு.
சாந்தாமணி சாராஜ் உன்னை
விசாரிச்சான் "காயடிக்கப்படுவான்"
சாந்தாமணி கூறிப்போயிற்று!
ஒன்னுக்கு வருது சந்தாமணி
ஊத்திகிட்டு கொஞ்சலாம்
நல்ல கதையாயிருக்கே! - இப்படி
எழுதினா நாங்கெட்ட பையனா?
நெலாவ பார்த்து நரி ஊளை உட்டா?
எல்லாம் சாந்தும்மாவுக்கு தெரியும்
அடியேன் பத்துமாத்து தங்கம்னு!
ரே கருப்பா!
சுருக்கா பீடி தீசிக்கினி ராரா ரே!

- ராஜமைந்தன் (வா மு கோமு என்ற பெயரிலும் எழுதுபவர்) எழுதி நடு கல் 13வது இதழ் 1994 ஜனவரியில் வெளியானது. எதிர் கவிதைக்கு நான் அடிக்கடி உதாரணம் காட்டுவது!

புரோட்டா மாஸ்டரும் ஒரு கவிதையும்

பிரதியெடுப்பதில் உள்ள அவலங்கள்
வெட்டி எறியுங்கள் சில பக்கங்களை
ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா
அல்லது வேறுவேறான ஒன்றா
பெத்துப் போட்ட மனுசன் ஆவியாகிப்போனான்
ஏ டண்டணக்கா ஏ டணக்கு நக்கா
ரசினிகாந்து சண்டை
எது கைகொடுக்கிறது எதுகை
எது னை கொடுக்கும் மோனை
மூக்கு பல் வாய்செவியென
தத்திப் பீணிகா எக்கடனாப் போய்ச் சாவுமேரா
விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்